வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டம் ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த போரால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா நிதியுதவி நேற்று புதன்கிழமை (13) வழங்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க கட்டிடத்தில் வைத்து வழங்கப்பட்ட இந்த நிதியை, சத்தியநாதன் வித்தியா பெண் பெற்றுக்கொண்டார்.
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தால், சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரையில் 80 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் சுயதொழில் முயற்சி உதவிகள் என்பன வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.