Ad Widget

பனை வெல்லத்தில் பொஸ்பேட் உரம்! ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையத்துக்கு சீல்

பொஸ்பேட் அடி உரம் பயன்படுத்தி பனைவெல்லம் தயாரித்த ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையம் சுகாதாரப் பரிசோதகர்களால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பரிசோதகர்களால் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது பனை வெல்லத்தில் பொஸ்பேட் உரம் பயன்படத்தப்படுவதாக கண்டறியப்பட்டு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட ஊர்காவற்றுறை நீதிவான் எஸ்.லெனின்குமார் பனை வெல்ல நிலையத்தை சீல் வைக்குமாறு சுகாதாரப் பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டார்.

Related Posts