Ad Widget

யாழ்.மாவட்டத்தில் வறட்சியால் 31 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் பாதிப்பு

dak-suntharam-arumainayagam-GAயாழ்.மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியால் 31 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ்.மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள வறட்சி காலநிலையால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரும்தொகையான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் உள்ள 252 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த வறட்சியால் குடிதண்ணீர் இவிவசாயம் மற்றும் ஏனைய தொழில்களை செய்ய முடியாத நிலைக்குள்ளாகியுள்ளனர்.

இந்த இடர்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் குடிதண்ணீர் விநியோகத்துக்கென தற்போது 3 மில்லியன் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts