விடுமுறையில் சென்ற கடற்படை வீரர்களை மன்றில் ஆஜர்படுத்த முடியாது: பொலிஸ்

காரைநகர் ஊரிப்பகுதியில் 11 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விடுமுறையில் சென்ற இரண்டு கடற்படைச் சிப்பாய்களையும் ஆஜர்படுத்த முடியாது என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன தெரிவித்தார். (more…)

மீண்டும் புலி முத்திரையா? – பிரபா எம்.பி கேள்வி

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்து புலி முத்திரை குத்தியுள்ளமை ஏன் என்றும் அதற்கான விளக்கத்தை தருமாறும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன், பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளார். (more…)
Ad Widget

ஆலய களவுடன் தொடர்புடைய இருவருக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் மேற்கொள்ளப்பட்ட களவு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் சுன்னாகம் பொலிஸாரால் கைது (more…)

கிளிநொச்சியில் ஏ9 வீதியில் நடந்த கோர விபத்தில் பலா் படுகாயம்

கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்பாக நேற்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் வாகனம் குடை சாய்ந்து மூவர் படுகாயமடைந்துள்ளனர். (more…)

காணாமல்போனோர் ஆணைக்குழு; மன்னார் அமர்வில் 224 பேர் சாட்சியம்

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 6 ஆவது அமர்வு விசாரணைகளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 224 பேர் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டிருப்பதாக (more…)

வடக்கு மாகாணசபைக்கு போதிய நிதி இல்லை: முதல்வர்

இலங்கையின் வடமாகாண சபையின் வளர்ச்சிப் பணிகளுக்குப் போதிய நிதியை அரசாங்கம் இன்னும் முழுமையாக வழங்காதுள்ளபடியால் சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் பிரச்சனைகள் உள்ளதாக முதலமைச்சர் (more…)

ஒத்துழைப்பு தந்தால் வாள்வெட்டுக்களை இரு வாரங்களில் நிறுத்தலாம் – பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு தரும் பட்சத்தில் இரு வாரங்களில் அவற்றினை இல்லாமல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொலிஸாரால் மேற்கொள்ள முடியும் (more…)

சைவ உணவுகளை மாத்திரம் உண்டு ஆலயத்தின் புனிதத்தினைப் பேணி வரும் பொலிஸார்

யாழ்ப்பாண, நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உற்சவத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸார், மரக்கறி உணவுகளை மட்டும் உண்டு ஆலயத்தின் புனிதத்தினைப் பேணி வருவதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன தெரிவித்தார். (more…)

பிரேஸில் வாள்கள் யாழில் மீட்பு

பிரேஸிலில் தயாரிக்கப்பட்ட 5 வாள்களை யாழ். மாவட்டத்திலிருந்து அண்மையில் கைப்பற்றியதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்தார். (more…)

ஆலய வளாகத்திற்குள் சப்பாத்துடன் செல்லக்கூடாது என மேர்வினுக்கு தெரியாது: பொலிஸ்

நல்லூர் ஆலய வளாகத்திற்குள் சப்பாத்துடன் செல்லக்கூடாது என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா உண்மையில் அறிந்திருக்கவில்லை. (more…)

காணிகளில் இருப்பவர்களை வெளியேற்ற வருகிறது புதிய சட்டம்

பயங்கரவாதம் மற்றும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டு தமது காணிகளை இழந்தவர்கள் மீள அதை பெற்றுக்கொள்ள வசதியாக காணி ஆட்சியுரிமைச் சட்டமூலத் திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (more…)

மாணவியை கடத்திய சிப்பாய் கைது

பாடசாலை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய மாணவி ஒருவரைக் கடத்திச் சென்ற இராணுவ சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளார். (more…)

உயர்தர பரீட்சை வினாப்பத்திரத்தில் குளறுபடிகள் இல்லை – பரீட்சைகள் திணைக்களம்

இம்முறை உயர்தரப் பரீட்சையின் பொருளியல் விஞ்ஞான வினாப்பத்திரத்தில் குளறுபடிகள் காணப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. (more…)

இளைஞன் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

தொண்டமனாறு மயிலணிப் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் நால்வர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் ரமணன் (வயது 26) என்பவர் மீது நேற்று இரவு மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த (more…)

இலங்கையின் பாரம்பரிய கல்வி முறைமை வேலையற்ற பட்டதாரிகளையே உருவாக்குகிறது!

இலங்கையின் பாரம்பரியமான கல்வி முறைமை வெறுமனே வேலையற்ற பட்டதாரிகளையே உருவாக்குவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இந்தக் கல்வி முறைமையில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டியது அவசியமானது என்றும் கூறியுள்ளார். (more…)

திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி: புலனாய்வுப்பிரிவுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

திருக்கேதீச்சரம் மனிதப்புதைகுழிகள் இருக்கும் பகுதியில் முன்னர் கிராம மக்கள் இறந்தவர்களைப் புதைக்கும் இடுகாடு இருந்ததற்கான பதிவுகள் இருக்கவில்லை என நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்த மன்னார் பிரதேச சபைத்தலைவரிடம் மன்னாரில் வைத்தே வாக்குமூலம் பதிய வேண்டும் (more…)

எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களில் அதிகமானோர் இளைஞர், யுவதிகளே!

இலங்கையில் கடந்த ஆறுமாதகாலத்தில் கண்டறியப்பட்டுள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் நூற்றிற்கு 25 சதவீதமானவர்கள் 25 வயதிலும் குறைந்த இளைஞர், யுவதிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பால்வினை நோய்கள் தொடர்பான தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சிசிர லியனகே தெரிவித்தார். (more…)

அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிக்கப்படலாம்

அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிக்கப்படலாம். அது அடிப்படை சம்பள அதிகரிப்பாகவோ அல்லது அல்லது கொடுப்பனவாகவோ அமையலாம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். (more…)

புலிகளும் இல்லை; ஆட்லறியும் இல்லை! இனியும் ஏன் நில அபகரிப்பு வேலை? சபையில் சம்பந்தன் எம்.பி. கேள்வி

புலிகளின் காலத்தில் அவர்களின் ஆட்லறித் தாக்குதல்களைக் காரணம் காட்டி உயர் பாதுகாப்பு வலயங்களை விஸ்தரித்தீர்கள். (more…)

தொழில் முயற்சியாளருக்கான பயிற்சிகள்

யாழ். மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையால் தொழில் முயற்சியாளருக்கான தொழில்நுட்ப மாற்றுப் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts