Ad Widget

பொன்னாலையில் விபத்து, சிறுவன் படுகாயம்

வீதியால் நடந்து சென்ற சிறுவனை பஸ் மோதியதால் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு அருகில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது.

விபத்தில் தொல்புரம் மேற்கு சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த அருமைநாயகம் ஐங்கரன் (வயது 15) படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

பொன்னாலைப் பகுதியிலிருந்து வந்த விசேட சேவை பஸ் ஒன்று வீதியால் வந்த ஆட்டோவை முந்திக்கொண்டு செல்ல முற்பட்ட வேளை நடந்து சென்ற சிறுவனின் பின்புறமாக மோதியுள்ளது.

தலையில் படுகாயமடைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Posts