- Friday
- November 21st, 2025
மருதனார்மடம் இராமநாதன் கல்லூரிக்கு அடுத்த ஆண்டு மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்ப கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் கல்லூரி மேம்பாடு தொடர்பில் நேற்றய தினம் (03) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கல்லூரி வளாகத்தில் சேர்.பொன் இராமநாதனின்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அழகுபடுத்தி செழுமைபடுத்தும் வகையில் வரையப்படும் ஒவியங்களை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அமைச்சர் அவர்கள் நேற்றய தினம் (03) விஜயம் மேற்கொண்டிருந்தார். புகையிரத நிலையத்தை அழகுபடுத்தி செழுமைப்படுத்தும் வகையில் ஒவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதனிடையே ஒவியருடனும் அமைச்சர் அவர்கள் கலந்துரையாடினார்....
மக்கள் அதிக முதலீடு செய்வதற்கான வழிகளை ஊடகங்கள் செய்வதில்லை என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா புதன்கிழமை (03) தெரிவித்தார். இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் முதலீட்டு ஊக்குவிப்பு கருத்தரங்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இந்திய மீனவர்களும் தங்களை விடுவிக்கக்கோரி, புதன்கிழமை (03) காலை தொடக்கம் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பாக மூர்த்தி தொடர்ந்து கூறுகையில், உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை சந்தித்த போது, தங்களை விடுவிக்கும் திகதியை அறியும்...
கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை அடுத்து, அப்போதைய பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவை இந்த அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது. அவருக்கு நடந்தவற்றை விட பல மடங்கு அதிகமானவை தனக்கு நடக்கும் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களை, நேற்று புதன்கிழமை கொழும்பு –...
ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்படும் அதிக இலஞ்சம் பெறும் நாடுகளின் பட்டியலின் 2014ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் இலங்கை 85ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 175 நாடுகளை மையப்படுத்தியே 2014ஆம் ஆண்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 85ஆவது இடத்தில் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிரண்டும் இடம்பிடித்துள்ளன. உலக வங்கி மற்றும்...
ஜனாதிபதி தேர்தல் பணிகளில் ஈடுபடவிருக்கின்ற அரச உத்தியோகஸ்தர்களின் தபால் மூல விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை, இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இந்த திகதி எக்காரணத்தைக் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது என்றும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் வாக்களிப்பு விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் என்றும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நிறுவப்பட்டிருந்த இராமநாதன் சிலை நேற்று இரவோடு இரவாக வெளிக் கேற்றினைப் பூட்டிவிட்டு பைக்கோ மூலமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. அரசியல் பின்புலம் காரணமாகவே அது இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் குறித்த பாடசாலையின் அதிபர், வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர், பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோரின் முன்னிலையில் இந்தச் சிலை நேற்றிரவு அகற்றப்பட்டது....
ஆறு வலயங்களைச் சேர்ந்த ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்கள் இன்று காலை வடக்கு மாகாண சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்கள் தம்மை தரம் மூன்றிலிருந்து இரண்டிற்கு தரம் உயர்த்தக் கோரியும், சம்பள அதிகரிப்பை வலியுறுத்தியும் இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை இன்றைய தினம் வடக்கு...
ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னரும் நானே இந்த நாட்டின் ஜனாதிபதி என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் 8ம் திகதியின் பின்னரும் நானே ஜனாதிபதி அதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. நாட்டில் நிலவிய அரிசி தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்து அதனை...
சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தற்போது கட்டுவன் பகுதியிலுள்ள வள்ளுவன் சனசமூக நிலைய பொதுக்கிணற்றுக்கும் பரவியுள்ளதாக பாதிக்கப்பட்ட சனசமூக நிலைய அங்கத்தவர்கள், தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்கு செவ்வாய்க்கிழமை (02) தெரியப்படுத்தியுள்ளனர். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், வெறுமனவே நிலத்தில் கொட்டப்பட்டமையால் சுற்றாடலிலுள்ள கிணறுகளில் எண்ணெய்...
ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி மாதம் 7ஆம், 8ஆம், 9ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி...
காரைநகர் வேணன் உவர்நீர்த் தடுப்பணை விசமிகளால் உடைக்கப்பட்டதால் அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த மழைநீர் கடலினுள் பாயத் தொடங்கியுள்ளது. இது வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து உடைக்கப்பட்ட அணைப்பகுதியைத் தற்காலிகமாகப் புனரமைக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (03.12.2014) பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர்...
கொழும்பிலிருந்து 300 சீனி மூடைகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வந்துகொண்டிருந்த பாரவூர்தியொன்றை கடந்த 30ஆம் திகதி முதல் காணவில்லையென சீனி மூடைகளின் உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை (02) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதியை சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் இணைந்து பாரவூர்தியொன்றில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சீனி மூடைகளை எடுத்து வந்துள்ளனர்....
பொதுமக்கள் பொலிஸாருடன் மிக நெருங்கிய நட்புறவை பேணுவதன் மூலம் குற்ற செயல்களை கட்டுப்படுத்த முடியும் என தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.என்.எஸ்.கஸ்தூரியாராச்சி புதன்கிழமை (03) தெரிவித்தார். பிரதேசத்திலுள்ள குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பொறுப்பதிகாரி தொடர்ந்து கூறுகையில், எமது பொலிஸ் நிலையத்தில் கடந்த வருடத்தை (2013) விட இவ்வருடம் குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன. பொதுமக்களின் ஆதரவுடன் சமூகத்தில்...
யாழ். உடுத்துறை பகுதியிலுள்ள 100 மீனவர்களுக்கு மழை பாதுகாப்பு அங்கிகள் 2 வழங்கப்பட்டுள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி புதன்கிழமை (03) தெரிவித்தார். மழை காலங்களில் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் அவசியமாகின்றன. கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் காப்புறுதி செய்த 100 மீனவர்களுக்கு 2,500 ரூபாய் பெறுமதியான பாதுகாப்பு...
அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டையில் பூங்கனியியல் தாய் தாவர பண்ணை அமைப்பதற்குரிய ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பண்ணை அமைக்கப்பட்டு வருகின்றது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து...
யாழ். மாவட்டத்திலுள்ள 53 ஆயிரத்து 907 சமுர்த்தி பயனாளிகளுக்கு செழிப்பான இல்லத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் நல உதவி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் எஸ்.ரகுநாதன் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது, யாழ். மாவட்டத்தில் உள்ள 33 சமுதாய...
கரைநகர் - களபூமி பகுதியில் வீடுகளுக்குள் 3 அடி உயரத்தில் வெள்ளநீர் புகுந்தமையால் 60 குடும்பங்கள் இடம்பெயர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியின் நன்னீர் திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்படி கிராமத்துக்கும் கடலுக்கும் நடுவில் அணைக்கட்டு ஒன்று, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 40 மில்லியன் ரூபாய் நிதியுதவியின் கீழ் நீர்ப்பாசன திணைக்களத்தால் நிர்மாணிக்கப்பட்டு,...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையிலும் முடிவெடுக்கவில்லை என்று அக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர், விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் மீண்டும் கட்டியெழுப்பவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
Loading posts...
All posts loaded
No more posts
