ஸ்ரீகொத்தவுக்கு முன்பாக பதற்றம்

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவுக்கு முன்பாக பதற்றம் நிலவுகின்றது. அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் குழுவுக்கும் ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்தே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் வாகனநெரிசலும் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் “உலகை வெல்லும் வழி” தேர்தல் விஞ்ஞாபனத்தினை வரவேற்கின்றோம் – ஈபிடிபி

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் "உலகை வெல்லும் வழி"எனும் மகுடத்துடனான தேர்தல் விஞ்ஞாபனம் எமது மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியுள்ளதனால் அதனை வரவேற்கின்றோம். என ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர்களால் வெளியீட்டுள்ள அறிக்கையில்... நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் "யாரைஆதரிக்கவேண்டும் " என்ற தலைப்பில் எமது மக்களுக்கு நாம் கூறிய...
Ad Widget

நாட்டின் வடக்கு கிழக்கு பாகங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யலாம்?

நாட்டின் வடக்கு கிழக்கு பாகங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் இன்று (24) தகவல் தெரிவித்துள்ளது. இம் மழை வீழ்ச்சியினைத் தொடர்ந்து எதிர்வரும் 26 ஆம் திகதியிலிருந்து மழைவீழ்ச்சி குறைவடைவதற்கான சாத்தியம் நிலவுவதாகவும், ஆயினும் காற்று பலமாக வீசக்கூடிய சாத்தியம் அனைத்து பிரதேசங்களிலும் பொதுவாக நிலவுவதாக வானிலை...

இரகசிய உடன்படிக்கைக்கான தேவை எனக்கில்லை, திகதியிலும் தவறு – மைத்திரி

பிர­பல்­ய­மான இரு­வரின் கையொப்­பங்­களை சட்ட விரோ­த­மா­கவும் தவ­றான கையொப்­ப­மா­கவும் பயன்­ப­டுத்­து­வது தண்­டிக்­கப்­பட வேண்­டிய குற்­ற­மாகும். இவ்­வா­றான குற்­றத்­தினை செய்­த­மைக்­காக திஸ்ஸ அத்­த­நா­யக்­க­விற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என தெரி­விக்கும் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன எனது குரலும் எனது கையொப்­ப­முமே இன்று ஜனா­தி­ப­தியின் வெற்­றிக்கு உதவ பயன்­ப­டு­கின்­றது. எனது ஆத­ரவு மஹிந்த ராஜபக் ஷவிற்கு...

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகிறது!

நடந்து முடிந்த க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறு எதிர்வரும் 27 அல்லது 28ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுற்று தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். இதேவேளை, க.பொ.த சா/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 28ம்...

இலங்கை மீனவர்கள் 30 பேரும் இந்திய மீனவர்கள் 66 பேரும் விடுதலை

கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புது வருடத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் இந்தியா நல்லெண்ண அடிப்படையில் மீனவர்களை விடுதலை செய்துள்ளது. இந்திய சிறைகளில் இருந்த 30 இலங்கை மீனவர்களை இந்திய அதிகாரிகள் விடுதலை செய்துள்ளதுடன் இலங்கை சிறையில் இருந்த 66 இந்திய மீனவர்களை இலங்கை அதிகாரிகள் விடுதலை செய்துள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் சர்வதேவ கடல் எல்லையில்...

வடக்கில் படைக் குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை! – சம்பிக்க ரணவக்க

வடக்கில் படையைக் குறைத்தல் அல்லது முகாம்களை அகற்றுதல் என்ற பேச்சுக்களுக்கு இடமேயில்லை. ஆனால் வடக்கு, கிழக்கு மக்களுடன் சமாதானத்தை உறுதிப்படுத்த ஹெல உறுமய முன்னிற்கும். - இப்படித் தெரிவித்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க. அத்துடன், வடக்கு மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், வடக்கு மக்கள் மஹிந்த -...

வட மாகாண சபை உறுப்பினர் சுகிர்தனுக்கு கொலை மிரட்டல்!

வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனுக்கு இனந்தெரியாத இரு நபர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர் என நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியளவில் துன்னாலைப் பகுதியில் அவரை வழி மறித்தவர்களே கொலை மிரட்டல் விடுத்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- பருத்தித்துறையில் இருந்து மோட்டார்...

மஹிந்தவை ஆதரித்து கூட்டமைப்பு புதிய அரசியல் கலாசாரத்துக்கு அடித்தளமிட வேண்டும்! – பஸில்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரசு தயாராகவே இருக்கிறது. இப்படித் தெரிவித்திருக்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்‌ஷ. மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக்...

இலக்கிய நிகழ்வுகளுக்கு மண்டபம் இலவசம் – பிரேணை நிறைவேற்றம்

தமிழை வளர்க்கும் இலக்கிய நிகழ்வுகளை ஊக்கப்படுத்த சாவகச்சேரி நகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் நகராட்சி மன்றத்தின் கீழுள்ள பொன் விழா கலாசார மண்டபத்தை இலவசமாக வழங்கவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் ஞா.கிஷோர் முன்வைத்த பிரேரணை சாவகச்சேரி நகர சபையில் திங்கட்கிழமை (22) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பிரேரணையை முன்வைத்து ஞா.கிஷோர் உரையாற்றுகையில், சாவகச்சேரி நகராட்சி மன்றமானது...

மேடைக்கு துப்பாக்கிப்பிரயோகம்

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவிருந்த கூட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த செய்யப்பட்டிருந்த மேடைக்கு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெல்லம்பிட்டிய, உமகிலிய எனுமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கே நேற்றிரவு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாங்கள் ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து வாக்களிப்போம் : யாழ்.பல்கலை ஆசிரியர் சங்கம்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். எனவே நாம் எல்லோரும் நன்கு சிந்தித்துச் செயல்படுவோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எமது உறவுகள் கொத்துக் கொத்தாக வயது பால் வேறுபாடின்றி உடல் சிதறி இறந்ததையா? இறந்த உடல்கள் அதே இடத்தில் அழுகியதையா? கைது செய்யப்பட்டுக் காணாமற் போனவர்களையா? போர்...

கூட்டமைப்பின் நிலைப்பாடு 27 ஆம் திகதி

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படித்துக் கொண்டிருக்கிறது. இந்த வாரக் கடைசியில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் கூட்டமைப்பின் தலைவர்...

வாக்களிப்பினை கண்காணிக்கச் சென்ற தேர்தல் அதிகாரியை தடுத்த படையினர்

விசுவமடு பகுதியில் படையினரின் தபால்மூல வாக்களிப்பினை கண்காணிக்கச் சென்ற தேர்தல் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க படையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று காலை ஆரம்பமாகிய தபால் மூல வாக்களிப்பை கண்காணிப்பதற்காக விசுவமடு பகுதியிலுள்ள இராணுவ முகாம் ஒன்றுக்கு சென்ற தேர்தல் கண்காணிப்பாளர்களை, இதனை கண்காணிக்க நீங்கள் யார்? உங்களுக்கு யார்...

அனுமதிப் பத்திரம் இன்றி வடபகுதிக்கு வந்த வெளிநாட்டுபயணி ஒமந்தையில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார்!!

அனுமதிப் பத்திரம் இன்றி வடபகுதிக்கு யாழ் தேவி ரயிலில் பயணித்தார் என்று கூறி வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை ஓமந்தைச் சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் இறக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் அடித்துநொறுக்கப்பட்டுள்ளது

சாவகச்சேரி, கச்சாய் அம்மன் கோயில் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் நேற்று திங்கட்கிழமை இரவோடிரவாக அடித்துநொறுக்கப்பட்டுள்ளது என்று கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பிறந்த தினத்தின்போது குறித்த கட்சியினர் ஆலயத்தில் பொங்கல் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர் என்றும், இதனைத் தொடர்ந்து ஆலய மண்டபம் ஒன்றில் பொருட்களை வைத்த அவர்கள் சில...

யாழ். புகையிரத நிலையத்தில் ஓவியம்

யாழ். புகையிரத நிலையத்திலுள்ள நிலக்கீழ் சுரங்கப் பாதையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓவியரான ரோஸ் ரொபின் என்னும் பெண்மணியால் வரையப்பட்டுள்ள சுவர்ஓவியங்களை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா திங்கட்கிழமை(22) பார்வையிட்டார். அத்துடன் ஓவியரை பாராட்டி, அவருக்கு நினைவு பரிசில் ஒன்றையும் வழங்கினார். கடந்த டிசெம்பர் 3ஆம் திகதி...

ஆன்மீகத்தின் மூலமே சிறந்த சமுதாயம் மலரும் – சைவ மகா சபை

ஆன்மீகத்தின் மூலமே சிறந்த சமுதாயம் மலரும். திருவெம்பாவை காலத்தில் அனைவரும் சமய, சமூக பணிகளில் ஈடுபட வேண்டும் என சைவ மகா சபையின் பொதுச் செயளாலர் ப.நந்தகுமார், திங்கட்கிழமை (22) வேண்டுகோள் விடுத்தார். சைவ மகா சபையின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துக்கூறுகையிலேயே நந்தகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

17 மாவட்டங்களை எதிரணி வெற்றிக்கொள்ளும் – மனோ கணேசன்!

ஜனாதிபதித் தேர்தலில் 17 மாவட்டங்களில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவே வெற்றிபெறுவார். - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன். பொது எதிரணி வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து தெல்தெனிய, நாவலப்பிட்டி, மாத்தளை, கம்பளை, எட்டியாந்தோட்டை, வலப்பனை, ஹங்குரான்கத, பதுரெலிய ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தொடர் பிரசார கூட்டங்களில் உரையாற்றிய போதே...

புதிய அரசமைப்பொன்றை அறிமுகம் செய்வாராம் மஹிந்த ராஜபக்‌ஷ!

தனது மூன்றாவது பதவிக்காலத்தில் பிளவுபடாத இலங்கையை உறுதிசெய்வதுடன் புதிய அரசமைப்பொன்றை அறிமுகம் செய்வார் என்று உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டைத் துண்டாடுவதற்கு சர்வதேச, உள்நாட்டு சக்திகள் விரும்புகின்றன. இந்த சக்திகளுக்கு நான் சிறிதளவும் இடமளிக்கமாட்டேன்...
Loading posts...

All posts loaded

No more posts