Ad Widget

மைத்திரியின் கூட்டத்துக்கு சென்றவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!!

யாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டுப் பூங்கா) செவ்வாய்க்கிழமை (30) மாலை இடம்பெற்ற எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்துக்கு சென்ற இருவர் மீது கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டம் முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, வல்லைச் சந்தியில் இலக்கத் தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் மிரட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts