எரிபொருள் விலை குறையவில்லை – நுகர்வோர் அதிருப்தி

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும், இன்னும் பழைய விலைக்கே விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 157 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒக்டேன் 92 வகை பெற்றோல் ஒருலீற்றர் 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதோடு, 165 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 95 வகை பெற்றோல் ஒருலீற்றர் 158 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ புலம்பெயர்ந்தவர்கள் முன்வாருங்கள்’

யாழ். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்க புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன், சனிக்கிழமை (06) கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது வட மாகாணசபை...
Ad Widget

கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு என்பதை வெளியிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்’

ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குகின்றது என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து கடந்த 25 வருடங்களாக நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் மக்களுடன் கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் மருதனார் மடம்...

மகிந்த சிந்தனையில் பொலிஸாருக்கும் மோட்டார் சைக்கிள்கள்

யாழ். மாவட்டத்திலுள்ள 9 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸாரில் தெரிவு செய்யப்பட்ட 30 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மகிந்தோதய திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அதனொரு அங்கமாக குறித்த திட்டத்தின் கீழ் பொலிஸாருக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் யாழ்.மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸாரில்...

யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மாவட்ட செயலகத்தினால் உதவிகள்

யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த அடை மழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்ட மக்களிற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அனர்த்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தினால் அவசரகால உதவிகள் வழங்கப்பட்டதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும்...

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இதுவரை காலமும் கடமையாற்றி வந்த றொஹான் டயஸ், நேற்று வெள்ளிக்கிழமை (05) முதல் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக, கொழும்பு தலைமை பொலிஸ் திணைக்களத்தில்...

ஜனாதிபதி ஆலோசகராக அஸ்வர் நியமனம்

நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்த ஏ.எச்.எம்.அஸ்வர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற விவகாரங்கள், வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் தொடர்பாடலுக்கான ஜனாதிபதியின் சிரேஷ் ஆலோசகராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்வருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வழங்கப்பட்டது.

எரிபொருட்களின் விலை குறைப்பு

நேற்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் 7 ரூபாயினாலும் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஆட்சிக்கு எவர் வந்தாலும் இலக்குகளை எட்டும்வரை போராடுவோம் – சுரேஸ் எம்.பி

"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும் வலி.வடக்கு மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் மருதனார்மடத்தில் உள்ள விவசாய பயிற்சிக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது....

தேசிய அரசாங்கமே சிறுபான்மையினர் பிரச்சினையை ஆராயும்

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராயும் என்று இலங்கையின் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிபிசிக்கான பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்டாலும், தமிழர்களின் பிரச்சினை இன்னமும் தீரவில்லை...

யு. எல். எம். ஹால்தீன் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம்

வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய நிலையில் இயற்கை எய்திய யு. எல். எம். ஹால்தீன் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (04.12.2004) யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்றது. வடக்கு விவசாய அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.வரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற...

வடக்கு மக்களின் ஒருதொகுதி தங்கத்தை நேற்று மீளளித்தார் ஜனாதிபதி மஹிந்த!

விடுதலைப் புலிகளின் வங்கிகளில் மக்களால் அடகு வைக்கப்பட்ட மற்றும் படையினரால் கண்டெடுக்கப்பட்ட நகைகளை அவர்களுக்கு மீளக் கையளிக்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது அயிரத்து 960 பேருக்கு தங்க நகைகள் மீளளிக்கப்பட்டன. மன்னாரைச் சேர்ந்த 223 பேருக்கும், வவுனியாவைச் சேர்ந்த 319 பேருக்கும்,...

கொடிகாமத்தில் கிளைமோர் மீட்பு

யாழ். கொடிகாமம், இயற்றாலை பகுதியிலுள்ள காணியொன்றிலிருந்து கிளைமோர் ஒன்று வியாழக்கிழமை (04) மீட்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (05) தெரிவித்தனர். மேற்படி காணி உரிமையாளர், தனது காணியை துப்பரவுபடுத்திக்கொண்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான பொருள் இருப்பதை அவதானித்து பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இராணுவத்தினரின் 522ஆவது படையணியின் குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் அவ்விடத்துக்கு சென்று...

யுத்த வெற்றியின் 75% எனக்கே சொந்தம் – சந்திரிகா

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் 75 சதவீதத்தை நானே வெற்றிகொண்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று இடம்பெற்ற, எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'இந்த யுத்தத்தை நடத்தியதும் அதில் வெற்றிகொண்டதும் சரத் பொன்சேகாவே. யுத்தத்தின் 75 சதவீதமானவை எங்களது, அரசாங்கத்தின்போதே வெற்றிகொள்ளப்பட்டது. நாம்...

சந்திரிகாவுடனேயே எனக்கு போட்டி – ஜனாதிபதி

இம்முறை ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனேயே நான் போட்டியிடுகின்றேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை (05), அலரி மாளிகையில் வைத்து தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் ஊடகங்களின் பிரதானிகளைச் சந்தித்த ஜனாதிபதி, மேற்கண்டவாறு தெரிவித்தார். 'நான் போட்டியிடுவது சந்திரிகாவுடனேயே. இது மங்கள – சந்திரிகா ஒற்றுமையாகும். ரணிலுக்கு இன்னும்...

வீரசிங்கத்தின் 50ஆவது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு

யாழ்.மாவட்ட கூட்டுறவுச் சபையின் ஏற்பாட்டில் கூட்டுறவு பெரியார் அமரர் வீரசிங்கத்தின் 50ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் மாவட்ட கூட்டுறவு சபைத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும்...

ஐஸ்கிறீமில் அரசியல் இல்லை, நல்ல சுகாதாரமே எமது இலக்கு

யாழ்ப்பாணத்தில் ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் பின்னணியில் எந்தவித உள்நோக்கமோ அரசியலோ இல்லை நல்நோக்கமே உள்ளது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 59 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு தடையும் விதிக்கப்பட்டது. இது தொடர்பில்...

எண்ணெய் கசிவால் இளைஞர், யுவதிகள் திருமணம் செய்ய அஞ்சுகின்றனர்’

யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற போது யாழ்ப்பாணத்து நீர் மாசடைதலை தடுக்க வேண்டும் என்ற...

புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவரான நெடியவன் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை புலனாய்வு பிரிவின் தலைவரான நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவரை அரச புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். ஐந்து வருடங்களுக்கு பின்னர், சாம்பல்தீவில் வைத்து அவரை கைது செய்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது. சாம்பல்தீவு மற்றும் நிலாவெளியில் இடம்பெற்ற பல்வேறு கொலைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரினால் இவர்...

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களுடைய உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் யாழ். சிறைக்குச் சென்ற இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் எஸ்.டி தட்சணாமூர்த்தி அவர்களுடன் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டனர். அதனையடுத்து உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என...
Loading posts...

All posts loaded

No more posts