Ad Widget

வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றுகூடலுக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு!

வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி இன்று யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடத்தவுள்ள ஒன்றுகூடலுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது.

அரச நியமனங்களின்போது அரசியல் தலையீடுகளோ, தனிநபர் செல்வாக்குகளோ இருக்கக்கூடாது என்றும், தகுதி அடிப்படையில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும் என்றும் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் பின்புலம் இன்றி நடத்தப்படும் இந்த ஒன்றுகூடலுக்கு பல்கலை மாணவர் ஒன்றியம் தனது பூரண ஆதரவை வழங்குகிறது என்றும், வேலையற்ற பட்டதாரிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு நியமனம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.

Related Posts