இராணுவத்தினரின் தாக்குதலில் 6 வயதுச் சிறுமி படுகாயம்!

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் நேற்று இரவு இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஆறு வயது சிறுகுழந்தை உள்ளிட்ட பலர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலை நடத்திய சிப்பாய் மனநிலை பாதிக்கப்பட்டவரென கூறி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. அந்தப் பகுதியினில் தையலகம் நடத்தி வந்திருந்த பொதுமகன் ஒருவரை சிப்பாயொருவர் சீருடையுடன் வந்து தாக்கியுள்ளார். அதில் சிவராசா(வயது...

வேலணையில் பிரசாரம் மேற்கொண்ட கூட்டமைப்பின் வாகனம் மீது கல்வீச்சு!

வேலணைப் பகுதியில் பொதுவேட்பாளர் மைத்திரியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைக் கடுமையாக எச்சரித்த கும்பல் ஒன்று, அவர்கள் பயணித்த வாகனத்தையும் கற்களால் தாக்கி சேதப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரெத்தினம் தலைமையிலான கூட்டமைப்பு...
Ad Widget

நாம் யாரையும் மிரட்டவில்லை, ஊடகங்களே பொய்யுரைக்கின்றன! – மாவை

நாம் வரலாற்றில் யாரையும் மிரட்டியதோ, திட்டியதோ இல்லை. ஆனால் ஊடகங்களே தவறாக பிரசுரித்துள்ளன என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக, வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் இடங்களுக்கான பிரதிநிதிகளை நியமிக்கும் பொருட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று ஞாயிற்றக்கிழமை...

தந்தையின் கரங்களை பலப்படுத்துங்கள்: நாமல் எம்.பி.

வடக்கில் அபிவிருத்தி முன்னேறிச்செல்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த வேண்டும். அதற்கு அனைவரும் வெற்றிலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (04) விஜயம் மேற்கொண்டு நாமல் ராஜபக்ஷ பல்வேறு இடங்களில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டங்களில் கலந்துகொண்டார். யாழ்....

ஜனாதிபதி தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

ஜனாதிபதி தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெறவுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு பரப்புரை நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். இன்று நள்ளிரவுக்கு பின்னர் முன்னெடுக்கப்படுகின்ற சட்டவிரோத தேர்தல் பரப்புரைகளை தடுப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்...

தமிழர்களை ஒடுக்கிய மகிந்தவை மாற்றுக : வடக்கு முதலமைச்சர்

தமிழ் மக்களை இன ஒடுக்கலுக்கு உள்ளாக்கிய, அவலங்களைத்தரும் மகிந்தவின் ஆட்சியை மாற்றவுண்டியது தமிழர்களின் தலையாய கடமை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்று விடுத்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குழப்பமான சூழலில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம். தமிழ்ப் பேசும் மக்கள்...

வெளிநாட்டு, உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் களத்தில்

ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை சென்றுள்ள சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் இன்று திங்கட்கிழமை 5-ம் திகதி முதல் தங்களின் கண்காணிப்புப் பணிகளைத் தொடங்கவுள்ளனர். நாட்டின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரியவுடனும் உள்நாட்டுக் கண்காணிப்பாளர்களுடனும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சர்வதேச கண்காணிப்பாளர்கள், தங்களின் பணிகள் தொடர்பாக கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர். நாட்டின் அனைத்து மாவட்டங்களையும்...

நீதி, நியாயமான எதிர்காலத்துக்காக தமிழ்பேசும் மக்கள் மைத்திரியின் அன்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்!

"தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலம் அமைவதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை நாம் ஆதரிக்கின்றோம். எனவே, ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபாலவின் சின்னமான அன்னத்திற்கு தவறாமல் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்கவேண்டும்." - இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட...

கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் அமைச்சராகி எதையும் சாதிக்க முடியாது: சிவாஜிலிங்கம்

தேசிய அரசாங்கத்தை அமைத்து அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு சிலர் அமைச்சர்களாவதன் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது. எதிர்க்கட்சியாக இருந்தே ஆதரவளிக்க வேண்டும் என  வடமகாண சபை  ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

மைத்திரிக்கு வாக்களிக்குமாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் என சமூகநீதிக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சார்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் அ.இராசகுமாரன் சனிக்கிழமை (03) தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது...

மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் – டக்ளஸ்

எமது மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மட்டுமன்றி அரசியல் உரிமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டுமென்பதே எமது அரசியல் நிலைப்பாடாகும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சனிக்கிழமை (03)...

த.தே.கூ. முகவர்களை தெரிவு செய்கிறது

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான முகவர்களை தெரிவு செய்வதில், த.தே.கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கென யாழ். மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கான, முகவர்களைத் தெரிவு செய்வதில் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி வரும் ஈழமக்கள்...

பாடசாலைகளுக்கு நிதியுதவி

வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட நிதியிலிருந்து வடமாகாண சபை உறுப்பினர் த.சித்தார்த்தன் யாழ். மாவட்டத்திலுள்ள கல்வியற்கல்லூரி உட்பட ஆறு பாடசாலைகளுக்கு ஆறரை இலட்சம் ரூபாயும் ஆறு முன்பள்ளிகளுக்கு 04 இலட்சம் ரூபாயும் மாகாண சபை நிதியிலிருந்து வழங்கியுள்ளார். மிருசுவில் விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்திற்கு கரவெட்டி கட்டவேலி அ.மி.த.க பாடசாலைக்கு ஒரு இலட்சம் ரூபாயும்...

நாவாந்துறையில் குழு மோதல்: 9 பேர் கைது

யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்திப்பகுதியில் புதன்கிழமை(31) நள்ளிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார், சனிக்கிழமை (03) தெரிவித்தனர். யாழ். நாவாந்துறை சந்திப்பகுதியில் புதன்கிழமை (31) நள்ளிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் அதிகளவான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில்...

முடிந்தளவுக்கு மஹிந்தவை தோற்கடிப்போம் – கஜதீபன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எங்களால் முடிந்தளவுக்கு தோற்கடிக்கவேண்டும் என வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். பொது நிறுவனங்களின் 2015ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான முன்மொழிவு கூட்டம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை கேட்போர் கூட்டத்தில் சனிக்கிழமை (03) இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கஜதீபன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,...

தேர்தலுக்கு பின்னர் நிரந்தர நியமனம்; உறுதியளித்தார் நாமல்

யாழ். மாவட்டத்தில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் அனைவருக்கும் தேர்தலுக்குப் பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என, நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக நாமல் ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். இதன்போது யாழ்.நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தொண்டராசிரியர்களுக்கும் நாமல் ராஜபக்சவிற்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. அதன்போதே நாமல் ராஜபக்ச மேற்கண்ட உறுதிமொழியினை வழங்கியிருந்தார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...

தேர்தல் விதிமுறைகளை மீறி யாழில் வீடுகளை கையளித்தார் நாமல்

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ள நாமல் ராஜபக்ச தேர்தல் விதிமுறைகளை மீறி பண்டத்தரிப்பில் கட்டப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள நாமல் ராஜபக்ச இன்று குறித்த வீடுகளை மக்களிடம் கையளித்துள்ளார். கடந்த முறை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தபோது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களில் பண்டத்தரிப்பு பல்லசுட்டி பகுதியில் வசித்து வரும் 20 பேருக்கு வீடுகளைக்...

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் பொலிஸார் திடீர் தேடுதல்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அவதூறு செய்யும் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிஸார் தற்போது ஐக்கியதேசிய கட்சி தலைமையகமான சிறிகோத்தாவில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினரை அவமதிக்கும் பிரசுமொன்று தொடர்பாக தேடுதலை மேற்கொள்வதற்கு கங்கொடவில நீதிவான் நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை அவ்வாறான பிரசுரம்...

மைத்திரி குழுவினர் கூட்டமைப்பினரை யாழில் சந்தித்தனர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் குழுவினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று சனிக்கிழமை மு.ப.11 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பிரசார நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. மைத்திரி குழுவினருடனான இந்தச் சந்திப்பில்...

மறைக்கப்பட்ட பதாதைகள் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டன

தேர்தல் விதிமுறைக்கமைய யாழ்ப்பாணப் பொலிஸாரால் மறைக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதாகைகள், ஜனாதிபதி வெள்ளிக்கிழமை (02) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த வேளையில் மறைப்பு எடுக்கப்பட்டு இருந்தமையை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபம், செல்வா சதுக்கம் அருகில், பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள சுற்றுவட்டத்துக்கு அருகில், பலாலி வீதி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...
Loading posts...

All posts loaded

No more posts