Ad Widget

16 வயது சிறுவனை காணவில்லை

யாழ்ப்பாணம், குருநகர் ஐந்து மாடிப் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவனை கடந்த 24ஆம் திகதி முதல் காணவில்லை என சிறுவனது பெற்றோர் திங்கட்கிழமை (27) மாலை முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மாகாண சபை அமர்விற்கு மாவை வருகை

வடக்கு மாகாண சபை அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் செயலாளர் நாயகமுமான மாவை சேனாதிராசா கலந்து கொண்டுள்ளார். (more…)
Ad Widget

காணி தொடர்பான தீர்மானம் விரைவில் ஜனாதிபதியின் கவனத்திற்கு

வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட காணி சம்பந்தமான அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை அமுல் செய்யுமாறு கோரும் தீர்மானம் தொடர்பாக விரைவில் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு சமர்பிக்கப்படும் என ஜானதிபதி செயலளார் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு தொற்றா நோய்க்கான பரிசோதனை

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தொற்றா நோய்கள் தொடர்பிலான மருத்துவ பரிசோதனை ஒன்று வடக்கு மாகாண சபையின் கட்டடத் தொகுதியில் தற்போது நடைபெற்று வருகின்றது. (more…)

பணம், நகைக்காகவே வடமராட்சிப் பெண் கொலை!

காணமற்போன நிலையில் கடந்த 24 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட வடமராட்சி கிழக்கு நாகர் கோயில் பகுதியியைச் சேர்ந்த கலியுகமூர்த்தி சுகந்தி (வயது 36) என்ற குடும்ப பெண் பணத்துக்காக திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். (more…)

எவரிடமும் தனிநாட்டு கோரிக்கை இல்லை! பொதுவாக்கெடுப்பு நடத்த அரசுக்கு திராணி உண்டா?

வடக்கு, கிழக்கு தமிழர்களிடத்திலோ அல்லது புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திடத்திலோ தனிநாட்டுக் கோரிக்கை கிடையாது. நாட்டைப் பிரிக்குமாறும் நாம் கூறவில்லை. எனினும், தீர்வு விடயத்தில் ஸ்கொட்லாந்து மக்களின் மனங்களை அறிந்துகொள்வதற்கு நடத்தப்பட்ட பொதுஜன வாக்கெடுப்பைப் போன்று இலங்கையிலே தமிழ் (more…)

இலங்கை கிரிக்கெட்டின் நாயகர்கள் யாழ்ப்பாணத்தில்!!

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்களான சனத் ஜெயசூரியா, ஹசான் திலகரட்ண, பிரமோட்ய விக்கிரமசிங்க, உபுல் சந்தன ஆகியோர் அடங்கிய அணி யாழ்ப்பாணத்தில் விளையாட வருகிறது. (more…)

இலங்கை கடற்படை தளபதிக்கு இந்திய கடற்படையின் வீர விருது

இலங்கை கடற்படை தலைமைத் தளபதி ஜெயந்த பெரேராவுக்கு இந்திய கடற்படையின் வீர விருது, நேற்று திங்கட்கிழமை (27) வழங்கப்பட்டது. டெல்லியின் சவுத் புளொக்கில் நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது. (more…)

ஜனாதிபதி தேர்தலில் புலிச் சொத்து – ஐ.தே.க.

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய பொது நீதிமன்றம் நீக்கியதையடுத்து குமரன் பத்மநாதனூடாக (கே.பி.) தமிழீழ விடுதலை புலிகளின் சொத்துக்களை ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கம் பயன்படுத்தக்கூடுமென பிரதம எதிர்கட்சியான ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது. (more…)

ஹைலன்ட் பால்மா, யோகட் விலைகள் குறைப்பு

ஹைலன்ட் பால்மா மற்றும் யோகட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று கால்நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எச்.எல். திசேரா தெரிவித்தார். (more…)

கரட்டுகளுடன் அவைக்கு வந்த எம்.பி

2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்க்கட்சி எம்.பி ஒருவர், இரண்டு கரட்டுகளுடன் நேற்று திங்கட்கிழமை அவைக்கு வருகைதந்திருந்தார். (more…)

35 விடயங்களை த.தே.கூ. அமுல்படுத்தியிருக்கலாம் – தவராசா

வடமாகாணசபையின் முதலாவது கூட்டம் நடைபெற்று, இம்மாதம் 25ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைந்தது. வடமாகாண சபை தேர்தலின் போது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இந்த ஒருவருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றப்படவில்லை (more…)

‘அரசாங்கத்தை வீழ்த்துவதே பொது வேட்பாளரின் நோக்கம்’ – மனோ

பொது வேட்பாளரை நிறுத்தி தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் முக்கிய யுக்தியாக இருக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் கூறியுள்ளார். (more…)

இலங்கையில் பிறந்த வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் வடக்குக்கு தடையின்றி செல்லலாம்

இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாட்டில் இலங்கையில் பிறந்தவர்களுக்கு மாத்திரம் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

யாழில் மரக்கறி விதைகளுக்கு தட்டுப்பாடு

யாழ் மாவட்டத்தில் மரக்கறி விதைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக யாழ்மாவட்ட விதை உற்பத்தி கூட்டுறவு சங்க முகாமையாளர் ரி.ரவிமயூரன் இன்று திங்கட்கிழமை (27) தெரிவித்தார். (more…)

காணாமற்போனவர் சடலமாக மீட்பு

கடந்த 24ஆம் திகதி முதல் காணாமற்போன கரவெட்டி குருக்கள் வீதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயார் ஒருவர் இன்று திங்கட்கிழமை (27) காலை கரவெட்டியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வாழைக்குலை திருட்டுக்கள் அதிகரிப்பு

யாழ்ப்பாணம், நீர்வேலி, சிறுப்பிட்டி பகுதிகளிலுள்ள வாழைத்தோட்டங்களில் வாழைக்குலை திருட்டுக்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய சிறுகுற்ற தடுப்பு பொறுப்பதிகாரி அநுர பாலித திங்கட்கிழமை (27) தெரிவித்தார். (more…)

பொற்பதி வீதி புனரமைப்புக்கு ரூ.11 மில்லியன் ஒதுக்கீடு

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடத்தனை - பொற்பதி வீதியை புனரமைப்பதற்கு 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புனரமைப்பு பணிகள் 2015 ஜனவரி மாதம் தொடக்கம் ஆரம்பமாகும் எனவும் பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் பூபாலசிங்கம் சஞ்ஜீவன் திங்கட்கிழமை (27) தெரிவித்தார். (more…)

முதியோருக்கு கண்வில்லைகள் வழங்கல்

சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகம், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு கண்வில்லைகளை இலவசமாக வழங்கும் பணியை மேற்கொண்டு வருவதாக வடமாகாண சமூக சேவை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

ஜனாதிபதி-சர்மா சந்தித்துப்பேச்சு

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வருகைதந்த பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் இன்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts