- Wednesday
- July 9th, 2025

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திடம் கோரியமை போன்று மீண்டும் செயற்படவேண்டாம் என துணைவேந்தருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன், திங்கட்கிழமை (29) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும் என பல்கலைக்கழக பேராசிரியர்கள்...

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொலிவூட் நடிகர் சல்மான் கான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். பொரளையில் நடைபெறும் கூட்டத்திலேயே சல்மான் கான் இணைந்துகொண்டுள்ளார். இதேவேளை, இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸூம் அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார். பொலிவூட் நடிகர் சல்மான் கானுடன் ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை...

நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக மேன்மேலும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்து ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியிருப்பவர்களுக்கு வடக்கு மாகாணசபையால் மாவட்டம்தோறும் துரிதகதியில் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.12.2014) வடக்குமாகாண விவசாய அமைச்சின் உணவு வழங்கும் துறையும் சுகாதார அமைச்சும் இணைந்து உலர்உணவுப் பொதிகளையும் குழந்தைப்பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான...

யாழ். இந்திய துணைத்தூதரக கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கற்கைநெறிகளை பூர்த்தி செய்து வெளியேறிய 66 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. கர்நாடக சங்கீதம், வயலின், ஹிந்திமொழி மற்றும் யோகா கற்கைநெறிகளை பூர்த்திசெய்தவர்களுக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற...

நாட்டின் ஜனாதிபதி மீது வழக்கு தாக்கல் செய்யக்கூடிய அளவிற்கு அரசியல் யாப்புத் திருத்தம் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதித் தேர்தல் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 2010ம் ஆண்டுக்குப் பின் ஜனாதிபதி மோசடியான ஆட்சி ஒன்றை...

பொலிவூட் நடிகர் சல்மான் கான் மற்றும் இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே அக்குழுவினர் இன்று அதிகாலை நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெட் விமான சேவைக்கு சொந்தமான 9W256 என்ற இலக்கத்தைகொண்ட விமானத்திலேயே...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்த முடிவு எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற தமிழ்த் தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை அடுத்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், எதிர்வரும் ஜனாதிபதித்...

பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வடக்குக்கான தேர்தல் பரப்புரைக்கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. 30ஆம் திகதி காலையில் மன்னாரிலும், மதியம் வவுனியா கலைமகள் வித்தியாலயத்திலும், பிற்பகல் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் தோப்பிலும் இந்த பரப்புரைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,...

ஒன்பது மாகாணங்களில் காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் தவிர, 22 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையினால் 24பேர் உயிரிழந்துள்ளதுடன் 281,767 குடும்பங்களைச் சேர்ந்த 1,016,749பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 20ஆம் திகதியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை(28) மதியம் 12 மணிவரையான காலப்பகுதியில் வெள்ளம்,...

இயற்கை அனர்த்தங்களால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம்...

யாழ்ப்பாணம் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறையை நோக்கி யாழ்தேவி, ஞாயிற்றுக்கிழமை (28) தனது பரீட்சார்த்த சேவையை ஆரம்பித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தையும் ஊடறுத்து யாழ்தேவி புகையிரதம் காங்கேசன்துறையை அடைந்தது. இந்த பரீட்சார்த்த சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறார்கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிடப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளது. தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவின் உருவப் படங்களை ஏந்துவதற்கும் கொடிகளை அசைப்பதற்கும் சிறார்கள் பயன்படுத்தப்பட்ட பல சந்தர்ப்பங்கள் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டன. சிறார்கள் தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக...

மத்திய அரசின் தலையீடுகள் இல்லாமல் வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய வகையில் மாகாண அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஒரேயொரு துறையாக இன்று வடக்கு மாகாண சபைக்கு இருப்பது கூட்டுறவுத்துறைதான். அந்தவகையில், ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் விதத்தில் கூட்டுறவுத்துறை விரைவில் மறுசீரமைக்கப்பட உள்ளது என்று வடக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். கூட்டுறவு அமைச்சுக்குரிய மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி...

யாழ். பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் வழக்கு இலக்கம் இனங்காணப்படாத துவிச்சக்கர வண்டிகளின் இவ்வருடத்துக்கான பகிரங்க ஏலவிற்பனை சனிக்கிழமை (27) நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நீதிமன்ற சுற்றுநிருபம் 5/2013இன் பிராந்திய மதிப்பீட்டு அறிக்கைக்கு அமைவாக பிராந்திய ரீதியாக அறிவித்தல் வெளியிட்டு பகிரங்க ஏலவிற்பனை செய்வதற்கு நீதிஅமைச்சு வழங்கிய அனுமதியின் பிரகாரமே இந்த ஏல விற்பனை நடைபெற்றது....

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற நாம் இதுவரை காலமும் போராடினோம். போராடி வருகின்றோம். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் சிறுபான்மை இனத்தவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித செயற்பாடுகளும் செய்யவில்லையென சோசலிய சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜிசிறிவர்தன தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை...

யாழ். அல்வாய் பகுதியிலுள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து ஆணிணொருவரின்; சடலம் சனிக்கிழமை (27) காலை மீட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். அதே இடத்தை சேர்ந்த குடும்பஸ்தரான செல்லையா மகாலிங்கம் (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம், பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணையை நெல்லியடி...

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நான் உருவாக்கும் புதிய அரசில் தேசிய பாதுகாப்புச் சபையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கில் இராணுவத்தை அகற்றுவதற்கு நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை. யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ வீரர்கள், முப்படை தளபதிகள் வெளிநாடுகளில் தூதர்களாக செயற்படுகின்றனர். எனது...

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள், தாங்களாகவே தீர்மானிக்க வேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவரையும் சுட்டிக்காட்டக்கூடாது எனவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், நாட்டின் 7ஆவது...

அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பணியாற்றியமையால்தான் எமது நாடு சுனாமிப் பேரலை பாதிப்பில் இருந்து குறுகிய காலத்தில் மீண்டெழ முடிந்தது. இதேபோன்று இப்போது நாட்டுக்கு ஏற்படப்போகும் பேரனர்த்தத்தைத் தடுக்க மீண்டும் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்துள்ளன. எனவே அடுத்த மாதம் நடக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நிச்சயம் வெற்றி பெறுவார். - இவ்வாறு முன்னாள்...

All posts loaded
No more posts