- Sunday
- July 6th, 2025

மஹிந்த ஆட்சியில் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கிவிட முடியாது என்றும், இதுபற்றி ஆழமாக ஆராயப்படவேண்டும் என்றும் புதிய அரசு அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின்போது, "புலம்பெயர் அமைப்புகள் மீதும், தனிநபர்களுக்கு எதிராகவும்...

மானிப்பாய் பகுதியில் வெற்றுக்காணியில் இருந்து எஸ்.எஸ். ஈ. 87 ரக இரண்டு கைக்குண்டுகள் மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டு, இராணுவத்தினரால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன. மானிப்பாய் கட்டுடை பகுதியில் கடந்த வியாழக்கிழமை குறித்த கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதே இடத்தினைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது தோட்டக்காணிக்கு பக்கத்தில் உள்ள வெற்றுக்காணிக்குள் சென்ற போது, அங்கு இரண்டு கைக்குண்டுகள் இருப்பதை...

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 37 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து மீனவப்படகுகளும் இதன்போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் கைதான மீனவர்களும் கைப்பற்றப்பட்ட படகுகளும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் புயல் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ நடித்து வரும் ’அன் இண்டியன்’ [Un indian] திரைப்படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ முதல் முறையாக இந்தியாவை மையப்படுத்திய ”இந்தியன் அல்லாதவன்” [UNINDIAN] என்ற சினிமா படத்தில் நடத்தி வருகிறார்.அந்த திரைப்படத்தின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டு உள்ளது. இந்த...

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வலி.வடக்கில் ஆயிரத்து நூறு ஏக்கர் முழுமையாக விடுவிக்கப்பட்டு அதில் மக்களின் மீள்குடிய மர்வு நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்படும். இவ்வாறு யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மேலதிகமாக 8 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளது. இந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிதிவெடி அகற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 7...

வடக்கு-கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக படையினரோ அல்லது படைமுகாம்களோ அங்கிருந்து அகற்றப்படமாட்டாது என,இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டிசில்வா,தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள மொழி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் மீண்டும் ஆயுதக்கிளர்ச்சி ஏற்படாமல் தடுப்பதற்கு எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.தேசிய பாதுகாப்புக்கோ அல்லது...

"இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அரசு ஆரம்பிக்கவுள்ள உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை. எதிர்வரும் செப்டெம்பரில் ஐ.நா. விசாரணை அறிக்கையையே நாம் எதிர்பார்த்திருக்கின்றோம். ஐ.நா. விசாரணை அறிக்கையின் பிரகாரம் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.''என்று, ஐ.நாவின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப்பிடம் நேரில் வலியுறுத்தினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

கிளிநொச்சி, முரசுமோட்டை நான்காம் கட்டைப்பகுதியில் வீதியில் நடந்து சென்ற ஒருவரை வாகனம் ஒன்று மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. முரசு மோட்டையிலுள்ள சங்கரநாராயணன் கோயிலில் தங்கியிருந்த இயக்கச்சியைச் சேர்ந்தவரான த.பொன்னுத்துரை (வயது-65 )என்பவரே உயிரிழந்தவராவார். அதிகாலை வயலுக்குச் செல்வதற்காக வீதியில் சென்றவரை பின்னால்...

இலங்கையில் வாழ்கின்றவர்கள், நாளை சனிக்கிழமை(04) அரை சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என்று நவீன தொழில்நுட்பம் தொடர்பிலான ஆர்தர் சி கிளார்க் மத்தியநிலையம் அறிவித்துள்ளது. மாலை 5 மணிக்கே அரை சந்திர கிரகணம் தென்படும் என்றும் அந்த மத்தியநிலையம் அறிவித்துள்ளது. எனினும், சந்திர கிரகணத்தின் இறுதி இரவு 8 மணிவரையும் தென்படும் என்றும் அறிவித்துள்ளது. சந்திரன்...

தனது மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதைக் கேள்வியுற்ற, பொலிஸ் காவலில் இருந்த கணவர் அங்கிருந்த போத்தலை உடைத்து தன்னை தானே குத்தி உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். இந்த சம்பவம் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. கடந்த எட்டு மாதங்களுக்க முன்னர் இளவாலை, பிரான்பற்றைச் சேர்ந்த பெண்ணுக்கும் வவுனியா...

இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்து மீது மாலுசந்திப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (02) இரவு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் பேருந்தின் பின்பக்க கண்ணாடிகள் சேதமடைந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. தாக்குதல் தொடர்பில் பேருந்து சாரதி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை...

வடமாகாணத்தி உள்ள அரச காணிகளை தனியாருக்கோ வேறு அமைப்புக்களுக்கோ வழங்கும் போது வடமாகாண சபையின் ஆலோசனை பெறப்பட வேண்டும் என கோரி, வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாகவே இக்கடிதம் நேற்று வியாழக்கிழமை (02) அனுப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான பயணம் அரசியல் ரீதியானது. எனவே, மக்களின் பிரதிநிதி என்ற முறையில் அவரது கூட்டங்களில் தான் கலந்துகொள்ளவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வியாழக்கிழமை (02) தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்...

யாழ். பல்கலைக்கழக மருதனார் மட நுண்கலைபீடத்தின் சித்திரமும் வடிவமைத்தல் பிரிவுக்கு புதிய இணைப்பாளராக இசைத்துறை பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.சூரியகுமார் புதன்கிழமை (01) கலைப்பீட பீடதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் மாணவர்களுக்கான வருட ஆய்வு கட்டுரைகள் தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குரிய பொருத்தமான ஒருவரை நியமிக்கும் பொறுப்பு இணைப்பாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட கேட்போர் அரங்கில் மாணவர்கள்,...

இழப்புகள் போராட்டங்கள் எல்லாம் தமிழரசுக் கட்சிக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைத்து விடாதீர்கள் எனக் குறிப்பிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கடிதம் ஒன்றை வெள்ளிக்கிழமை (03) அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நான் கடந்த பல நாட்களாக தங்களிடம் பல விடயங்கள் சம்பந்தமாக கேட்கப்பட்ட...

வவுனியாவில் தாய், தந்தையை இழந்த சிறுமி ஒருவரை கடந்த 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில்...

வேலணை பகுதியில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை 30 நாட்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க உத்தரவிட்டார். யாழ்.மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில், வேலணை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு, களவு மற்றும் சட்டவிரோத...

பொது இடங்களில் இலவசமாக வழங்கப்படும் WI-FI வசதிகள் தங்களுடைய அலைபேசிகள், கணினி உள்ளிட்ட சாதனங்களுக்கு பெற்றுகொள்வது பிரச்சினையாக இருந்தால் அது தொடர்பிலான வழிமுறைகளை 1919 என்ற இலக்கத்தை அழுத்துவதன் ஊடாக பெற்றுக்கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1919 யை அழுத்துவதன் ஊடாக அரச தகவல் மத்திய நிலையத்திலிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும் என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல்,...

வளலாய் அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வளலாய் மீள்குடியேற்ற சங்கத்தலைவர் செல்லப்பு துரைரட்ணம், புதன்கிழமை (01) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 1990ஆம் ஆண்டு இடப்பெயர்வுடன் மூடப்பட்ட இந்தப் பாடசாலையை மீள ஆரம்பிப்பதன் மூலம் வளலாய் பகுதி மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டை தமது...

'ஒரு சமூகத்தின் குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திகழ்கின்றார். எ இந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு சகல தகுதிகளும் உண்டு என்பதை பெருமையுடன் நான் கூறிக்கொள்கின்றேன்' இவ்வாறு சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். பட்டிப்பளை பிரதேசத்தில் வறுமை கோட்டுக்கு கீழுள்ள யுவதிகளுக்காக நடத்தப்பட்ட கைப்பணி...

All posts loaded
No more posts