Ad Widget

ஆயருக்காக பிரார்த்தியுங்கள்

வைத்தியசாலைக்கான வருகையை தவிர்த்து, ஆயருக்காக பிரார்த்தனை செய்யுமாறு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் மக்களை கோரியுள்ளார்.

திடீர் சுகவீனமுற்ற நிலையில், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஆயரின் உடல் நிலை இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் வைத்தியசாலையில் அவருக்கு இடையூறு இல்லாதிருக்க வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்நிலையிலேயே மறு அறிவித்தல் வரும் வரை ஆயரை பார்வையிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்டர் சோசை கோரிக்கை விடுத்துள்ளார்.

வைத்தியசாலைக்கான வருகையை தவிர்த்து மக்கள் ஆயருக்காக பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அவர் கோரியுள்ளார்.

Related Posts