Ad Widget

சம்பூர் விடுவிக்கப்பட்ட செய்தியை இன்று கேட்பீர்கள்! மக்களிடம் சம்பந்தன் உறுதி!!

“இராணுவத்தின் பிடியிலிருக்கும் சம்பூர் கிராமம் மக்களின் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்பட்டது என்ற செய்தியை (நாளை) இன்று வியாழக்கிழமை கேட்பீர்கள்.” – இவ்வாறு சம்பூர் மக்களிடம் உறுதி தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன்.

அனல் மின் நிலையம் அமைப்பதற்காக திருகோணமலையின் சம்பூர் கிராமத்தை உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவம் அபகரித்துள்ளது. இதனால் 818 ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

இவர்களை சம்பந்தன் எம்.பி. நேற்று சந்தித்தார். இதன்போது “நாளை (இன்று) வியாழக்கிழமை ஜனாதிபதி, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருடன் உயர்மட்ட பேச்சு இடம்பெறவுள்ளது. இதன் பின்னர் சம்பூர் விடுவிக்கப்பட்டது என்ற் செய்தியை கேட்பீர்கள். “இதற்கு நீங்கள் நடத்திய போராட்டங்களே காரணம். இந்த வார முடிவில் நீங்கள் அங்கு மீளக்குடியேற முடியும்” -என்றார்.

Related Posts