மதுபானத்தின் சொர்க்கபுரியாக யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணத்தில் மதுபானத்தின் பாவனை 2009 இன் பின்னர் பல மடங்குகள் அதிகரித்துள்ளன என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மதுவரித் திணைக்களத்தின் ஆதாரங்களின்படி 2009 இல் யாழ்ப்பாணத்தில் 7 இலட்சத்து 62 ஆயிரத்து 610 லீற்றர் பியர் நுகரப்பட்டது. அதுவே 2013 இல் ஐந்து மடங்கால் அதிகரித்து 40 இலட்சத்து 56 ஆயிரத்து 999 லீற்றர் பியர் நுகரப்பட்டது....

காரைநகர் பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐவர் கைது

வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டு வீட்டிலிருந்தவரை அடித்துக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐவர் நேற்று சனிக்கிழமை (13) கைதுசெய்யப்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மே மாதம் 22ஆம் திகதி காரைநகர், வலந்தலை பகுதியிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் வீடொன்றுக்குள் ஐந்து பேர் கொண்ட...
Ad Widget

தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவர் தப்பி ஓட்டம்

தமிழகத்தில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். இது குறித்து தமிழக ஊடகமம் வௌியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, இராமநாதபுரம், மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர் சுரேஷ் என்ற நிஷாந்தன் (28). கடந்த 3 மாதத்துக்கு முன்பு புதுக்கோட்டையில் கஞ்சா கடத்திய வழக்கில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த...

20 பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றாலும் அமுல்படுத்துவது எளிதல்ல

புதிய தேர்தல் முறை­யா­னது எழுத்து வடிவில் கிடைக்­கப்­பெறும் வரையில் அதில் உள்­ள­டக்கம் குறித்து தெளிவ­டைந்­து­வி­ட­மு­டி­யாது. புதிய தேர்தல் முறைமை பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றுக்­கொண்­டாலும் அதனை அமுல்­ப­டுத்­து­வ­தென்­பது எளி­தான காரி­ய­மல்ல. எனவே அடுத்து இடம்­பெ­ற­வி­ருக்­கின்ற பாரா­ளு­மன்றத் தேர்தல் புதிய முறையில் அல்­லது தற்­போது அமுலில் உள்ள விகி­தா­சார முறையின் ஊடா­கவே இடம்­பெறும் சாத்­தியம் தென்­ப­டு­ப­வ­தாக தமிழ்த் தேசியக்...

கொக்கிளாயில் விஹாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்

கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி கட்டப்பட்டு வந்த விஹாரை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை (12) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். காணிப்பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு வெள்ளிக்கிழமை (12) முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அமைச்சின் உயர் அதிகாரிகளின் நடமாடும் சேவையிலேயே மேற்படி முடிவு எட்டப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கற்றுக்கொண்ட...

 பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 41பேர் கைது

நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 41பேரை நேற்று வெள்ளிக்கிழமை (12) கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கை மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, திருட்டு, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுடன் தொடர்புடையோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 2014ஆம்...

கடாக்கள், சேவல்கள் வெட்டப்பட்டு துர்க்காபுரம் பேரம்பல வைரவருக்கு வேள்வி!

தெல்லிப்பழை துர்க்காபுரம் பேரம்பல வைரவர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவும் வேள்வியும் இன்று மிகவும் பக்திப் பரவசமாக இடம்பெற்றது. அதிகாலையில் இடம்பெற்ற பொங்கல்கள் படையல்கள் மற்றும் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து வேள்விக்கு கடாக்கள் பலியிடும் நிகழ்வுகள் இடம்பெற்றன. தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் கடாக்களை பரிசோதனை செய்து அனுமதி...

கிளிநொச்சியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணைக் காணவில்லை!

கிளிநொச்சி, திருநகரைச் சேர்ந்த கணேசமூர்த்தி சாந்திமலர் (வயது 48) என்ற பெண்ணை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லையென, அப்பெண்ணின் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி நகரிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது வீட்டுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் வந்தவர்களால் வழக்கு விசாரணைக்கு ஒன்றுக்கு வருமாறு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர் இதுவரையில்...

யாழ்ப்பாணத்தின் அனைத்து இடங்களிலும் தரப்பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை

பாடசாலை மாணவர்களை ஏற்றியிறக்கும் சேவையில் ஈடுபடும் வாகனங்களை தரப்பரிசோதனை செய்யும் நடவடிக்கையானது யாழ். மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் திடீரென அறிவிக்கப்படாத நாட்களில் மேற்கொள்ளப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள யாழ். மாவட்ட பொறுப்பதிகாரி கோபாலபிள்ளை மதிவண்ணன் வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார். பாடசாலை மாணவர்களை ஏற்றியிறக்கும் சேவையில் ஈடுபடும் வாகனங்களை தரப்பரிசோதனை செய்யும் நடவடிக்கை யாழ்.பொதுநூலகத்துக்கு வெள்ளிக்கிழமை...

NGOகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டில் தளர்வு

மக்களுக்காக நிவாரணங்களை வழங்குகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO) மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது எதிர்காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார். அதற்காக, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை உடனடியாக செயற்படுத்தும் வகையில் கொள்கை செயல்படுத்தல்...

இணைந்து செயலாற்றுதல் நல்லிணக்கத்தின் அத்திபாரமாகும்

அனைத்து மொழிகளையூம் பேசுகின்ற அனைத்து மக்களுடனும் சேர்ந்து செயலாற்றுதல் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்கு அத்திபாரமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வளங்களை அபிவிருத்தி செய்வதன்மூலம் மாத்திரம் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியாது என்றும் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பண்பும் ஒழுக்கமும் நிறைந்த பிரசைகள் நாட்டின் அபிவிருத்திக்கு அத்தியாவசிய காரணியாகும் என்றார். கொழும்பு-03, கொள்ளுப்பிட்டி...

அமைச்சரவை தீர்மானத்துக்கு கபே வரவேற்பு

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான அமைச்சரவையின் முடிவை நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் வரவேற்றுள்ளதுடன் இது தொடர்பிலான அறிக்கையை வெள்ளிக்கிழமை(12) வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 237ஆக அதிகரிக்கவும் அதில் 145 நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்குப் பெறும் முன்னணி முறையிலும் 55 பேரை விகிதாசார முறையிலும் 37 பேரை தேசிய பட்டியலூடாகவும் தெரிவு செய்யவும்...

இலங்கையின் நல்லிணக்கத்துக்குப் புலம்பெயர் தமிழரின் ஒத்துழைப்பைப் பெறவே லண்டனில் பேச்சு!

"புலிகள் மீதான தடையை நீக்குதல், அரசியல் தீர்வு, உள்ளகப் பொறிமுறை முதலான விடயங்கள் குறித்து லண்டனில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு நடத்தவில்லை'' - என்று நேற்று சபையில் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குப் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெறுவது குறித்தே பேசப்பட்டது என்றும் தெரிவித்தார். மஹிந்த அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க...

துணுக்காய் பிரதேசத்துக்கு சுற்றுலா நீதிமன்றம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி முதல் புதிதாக சுற்றுலா நீதிமன்றம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை நீதிச் சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சுற்றுலா நீதிமன்றத்தினூடாக மாங்குளம் மற்றும் மல்லாவி ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளையும் சேர்ந்த மக்களுக்கான வழக்குகள் மாதத்தில்...

இலங்கையில் வடக்கு மாகாணத்திலேயே காடுகள் அதிகம் இதில் விடுதலைப்புலிகளின் பங்களிப்பு பெரியது -அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பெருமிதம்

இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் வடமாகாணத்திலேயே காடுகள் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கில் காடுகளைப் பாதுகாப்பதில் விடுதலைப்புலிகளின் பங்களிப்புப் பெரிதாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். வலிமேற்கு பிரதேசசபையும் உலக தரிசனம் நிறுவனமும் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றினை நேற்று முன்தினம் வியாழக்கிழமை (11.06.2015) ஏற்பாடு செய்திருந்தன. வலிமேற்கு பிரதேச சபையின் மாநாட்டு...

திரைமறைவு கூட்டங்களுக்கு விளக்கமளிக்கிறார் சுமந்திரன்

புலம்பெயர் நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் அமைப்புக்கள் மீதுள்ள தடைகளை நீக்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளில் சந்திப்புக்களை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் பொய்யான பிரச்சாரம் செய்துவரும் நிலையில் நாங்கள் திரைமறைவான சந்திப்புக்களை செய்து வருகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு,...

மோ.சைக்கிளின் முன்புறம் பிள்ளைகளை இருத்தி பயணிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களின் பெற்றோல் தாங்கியின்மேல் பிள்ளைகளை இருத்திக் கொண்டு பயணிப்பவர்கள் மீது பொலிஸார் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கவுள்ளனர் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.கே.ஜெயவன்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் - எதிர்காலத்தில் போக்குவரத்து பொலிஸார் வீதி போக்குவரத்து...

நீதிமன்ற தாக்குதல்; 14பேருக்கு பிணை

யாழ். நீதிமன்றத்தின் மீது கடந்த மே மாதம் 20ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 14 பேருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் செல்ல, யாழ் நீதவான் பொ.சிவகுமார் இன்று வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டார். அத்துடன், மாணவர் ஒருவரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளில்...

நாமலிடம் நான்கரை மணிநேரம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷவை குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்கரை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்திய அவரிடம் வாக்குமூலம் பெற்றுகொண்டுள்ளனர். அவரிடம் காலை 9 மணிமுதல் 1.45 வரையிலும் விசாரணை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்குனகொலபெலஸில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மெய்பாதுகாவலர் ஆயுதத்துடன் வந்த சம்பவம்...

237 ஆசனங்களுடனான 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

புதிய தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் தற்போது 225 ஆக காணப்படும் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்கவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் மிக விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அரசியலமைப்பின் 20 ஆவது...
Loading posts...

All posts loaded

No more posts