Ad Widget

தபால் ரயிலில் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சி, பளை தர்மகேணி பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை கடக்கமுயன்ற அதேயிடத்தை சேர்ந்த குருபரன் தவசீலன் (வயது 32) என்பவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார் என்று பளைப் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தபால் ரயிலில் மோதியதில், இவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்...

தமிழர்கள் ஐக்கியப்பட வேண்டுமென என்று பிரதமர் வலியுறுத்தினார் – மனோ

'தமிழர் ஒற்றுமை' (Tamil Unity) என்ற அடிப்படையில் தமிழர்கள் தங்களுக்கிடையிலான பேதங்களை மறந்து ஐக்கியப்பட வேண்டும். இது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய முதல் அவசியமாகும். இதன் மூலமாகவே ஐக்கிய இலங்கைக்குள் நீங்கள் சமத்துவமாக வாழ முடியும். அதற்கு இந்தியா துணை இருக்கும் என்று இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கிற்கு வெளியே தென்னிலங்கையில் வாழும்...
Ad Widget

அரசியல் கைதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும்; தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஜனாதிபதி உத்தரவு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டார். வழக்குத் தாக்கல் இன்றி 182 முதல் 189 பேர் வரையானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் அண்மையில்...

அநாமதேய தொலைபேசி அழைப்புகள்; உறவுகளே உசார்!

வெளிநாடுகளுக்குச் சென்று காணாமற் போனவர்களின் உறவினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் அநாமதேய நபர்கள் காணாமற் போனோரின் பெயருக்கு பெரும் தொகைக்கான காசோலை வந்துள்ளதாக கூறி ஏமாற்றும் சம்பவங்கள் நடக்கின்றன. சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் கவனமாகச் செயற்படுமாறு அறிவுறுத் தப்படுகிறது. கடந்தவாரம் இவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த கணக்கொன்றுக்கு 25ஆயிரம் ரூபாவை வைப்பிலிட்டால் தங்களுக்குரிய 4...

முதலமைச்சர், ஆளுநரின் வாகனங்களும் சோதனை

வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ் பளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின்னரே யாழ். பொதுநூலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கு சனிக்கிழமை (14) விஜயம் மேற்கொண்டு யாழ். பொதுநூலகத்தில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டதையடுத்து, இந்திய நிதியுதவியில் முற்றவெளியில் கலாச்சார மண்டபம் கட்டுவதற்கான திரைநீக்கமும் செய்து வைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக...

மோடி – மஹிந்த சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது இருவரும் மனம்விட்டு பேசியதாக அறியமுடிகிறது. பாரதப் பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது ஏற்பாடு செய்யப்பட்ட 40இற்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ சந்திப்புகளின் இறுதிச் சந்திப்பாக இது அமைந்தது என...

நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் செயற்பட வேண்டும் – யாழில் மோடி

இந்த வீடுகள் வெறும் செங்கற்களாலோ அல்லது சுவர்களாலோ அமைக்கப்பட்டது அல்ல. உங்களின் வளர்ச்சியில் செல்வதற்கும் இலங்கை மக்களின் துயரங்களை நீக்கக்கூடியதும் யாழ்ப்பாணத்தில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையினை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே அமைக்கப்பட்டுள்ளன என இந்திய பிரதமர் மோடி தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கான விஜயம் கொண்ட இந்திய பிரதமர் கீரிமலை கூவில் பகுதியில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை...

வடக்கு முதல்வரை சந்தித்தார் இந்தியப் பிரதமர்!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சனிக்கிழமை நண்பகல் யாழ் பொதுநூலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யுத்தத்துக்கு பின்னர் எமது கல்வி முன்னேற்றம் கண்டுள்ளது – சுரேஸ்

எமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டகாலமாக யுத்த சூழலுக்குள் வாழ்ந்துள்ளோம். யுத்தத்துக்குப் பின்னரான சூழலில் எமது கல்வி முன்னேற்றம் கண்டு வருகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கொடிகாமம் போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே...

எமக்கு வீட்டுத்திட்டங்கள் தந்து வீடுகள் கட்டித்தர தேவையில்லை, சொந்த இடங்களுக்கு அனுப்பினாலே போதும்

எமக்கு வீட்டுத்திட்டங்கள் தந்து வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று இல்லை. எம்மை எமது சொந்த காணிக்கு செல்ல அனுமதித்தாலே போதும். நாம் எமது காணியில் கொட்டில்களையோ குடிசைகளையோ அமைத்துக் கொண்டு சந்தோசமாக வாழ்வோம் பலாலியை சொந்த இடமாக கொண்ட எஸ்.சரவணமுத்து என்பர் தெரிவித்தார். உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே - 284...

ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார் மோடி

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (14) பிற்பகல் தலைமன்னார் துறை புகையிரத நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு தலைமன்னார்- மடுவுக்கான புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்தார். கடந்த 26 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னாருக்கான ரயில் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தெமட்டகொடையில் இரு மனிதக் கால்கள் மீட்பு

தெமட்டகொடை பிரதேசத்திலுள்ள கழிவு நீர் வாய்க்காலில் இருந்து மனித உடற்பாகங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று காலை இரண்டு கால்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனுராதபுரத்தில் மோடி வழிபாடு

இலங்கைக்கு இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று அனுராதபுரத்திற்கு சென்றார். காலை அங்கு விஜயம் செய்த அவர், ஸ்ரீமாஹா போதி, றுவன்வெலிசாய ஆகிய பகுதிகளுக்கு சென்று மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார். இதன்போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முக்கிய அமைச்சர்களும் உடனிருந்தனர். அத்துடன் தற்பொழுது இந்தியப் பிரதமர் மோடி...

எனது வீட்டை இடித்து விட்டனர், கண்ணீருடன் அந்தோனிப்பிள்ளை ஜெனிட்டா

ஆறுமாத காலப்பகுதிக்கு முன்னர் சேதமின்றி இருந்த வீட்டை தற்போது இடித்து அழித்து மண்மேடாக்கி விட்டனர் என வீட்டின் உரிமையாளரான அந்தோனிப்பிள்ளை ஜெனிட்டா கண்ணீருடன் தெரிவித்தார். உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 272 குடும்பங்கள் தமது காணிகளை வெள்ளிக்கிழமை (13) அங்கு சென்று அடையாளப்படுத்தினர். தனது...

வடமாகாணத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

வடமாகாண மக்களுடையே ஏற்பட்ட வாழ்க்கை முறை மாற்றத்தால் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிரேஸ்ட வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா, வெள்ளிக்கிழமை(13) தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கத்தினரால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை(23) நடைபெற்றபோது, அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், கடந்த காலங்களில்...

மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்காத பிரதம செயலாளர்

வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதனுடைய வாகனத்தில் 'பிரதம செயலாளர்' என்ற வாசகம் சிங்கள மொழியில் மாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தும் போது, மூன்று மொழிகளிலும் பெயர் பலகை வைக்கவேண்டும் என்பது கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வாழ்வதால் வடமாகாண சபையின் கீழுள்ள திணைக்களங்களின் பலகைகள் மற்றும் வாகனங்களின் பெயர்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்...

ஆலயங்களை காணவில்லை

வளலாய் பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் அமைந்திருந்த இந்து ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் என 10க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாக தங்கள் காணிகளை பார்வையிடச் சென்ற மக்கள் தெரிவித்தனர். உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 272 குடும்பங்கள் தமது காணிகளை...

யாழ். நகரில் கவனயீர்ப்பு போராட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகிறார். இந்தப் பயணத்தின்போது அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழ் நகரில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம் என்பன இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்திவருகின்றன. இந்திய இழுவைப்படகுகளால் வடபகுதி மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அந்த முறையைத் தடுக்கக் கோரியும், இந்திய -...

யாழ்ப்பாண பொலிஸ்நிலையத்தின் முக்கிய அறிவித்தல்

14.03.2015 காலை 6.00 தொடக்கம் மாலை 4.00 மணிவரை துவிச்சக்கர வண்டிகளையோ மோட்டார் சைக்கிள்களையோ வேறு ஏதாவது வாகனங்களையோ உங்கள் வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் முன்னால் நிறுத்திவைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். குறிப்பு: இதனை கருத்தில் கொள்ளாது நிறுத்திவைக்கப்படும் வாகனங்கள் பெரிய வாகனத்தில் ஏற்றிச்செல்லப்படும். அவ்வாறு ஏற்றும் போது வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல....

இன்று மதியம் யாழ்ப்பாணம் வருகிறார் இந்தியப் பிரதமர்!

இன்று சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு யாழ்ப்பணத்துக்கு வரும் இந்தியப் பிரதமர் மோடியை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்பார். பின்னர் யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துப் பேசுவார். இதன் பின்னர் சுமார் 90 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் இந்திய கலாசரா மையத்துக்கு...
Loading posts...

All posts loaded

No more posts