- Tuesday
- February 17th, 2026
தனிமையில் வீட்டில் இருந்த இளம் குடும்பப் பெண்னை இனந்தெரியாதவர்கள் தாக்கியதில் அவர் மயக்கமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மதியம் குப்பிளான் தெற்கு சந்திக்கு அண்மையாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்கப்பட்ட இவர் இரண்டாம் நாளான நேற்றும் மயக்கம் தெளியாத நிலையில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின்...
தாம் செய்த ஊழல்களை மூடிமறைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவிக்கு வரத்துடிக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் எம்.பியு மான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என மெதமுலனையில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விடுத்த அறிவிப்பு தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு...
கூட்டமைப்பை சீர்குலைக்கும் எந்த முடிவையும் புளொட் எடுக்காது. கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தும். இவ்வாறு புளொட் அமைப்பின் தலைவரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில்...
2015 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான மாற்றப்பட்ட கால அட்டவணை www.doenets.lk இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதம் 4ஆம் திகதி பரீட்சை ஆரம்பமாகி 13ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் தொடர்ந்து 17ஆம் திகதி பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் 24ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 8ஆம் திகதியுடன் நிறைவடையும்...
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளமை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளமை ஆகிய காரணங்களினால் இரண்டாம் தவணை விடுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய உயர்தர பரீட்சை நடைபெறவுள்ள பாடசாலைகள் தவிர்ந்து ஏனைய அனைத்து பாடசாலைகளும் ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் 3ஆம் தவணைக்காக ஆரம்பிக்கப்படும் என்றும்...
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இன்று (02) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானதன்...
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வசிக்கும் தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் அனுப்பி வைத்துள்ளனர். அக் கடிதத்தில்...
வெளிநாடுகளுக்கான இலங்கைத்தூதுவர்கள் 30 பேர் அடங்கிய குழுவினர் வடமாகாண அமைச்சர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை (30.06.2015) வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வெளிநாடுகளுக்கு இலங்கைக்கான தூதுவர்களாக புதிதாக நியமிக்கப்பட்டவர்களும், ஏற்கனவே வெளிநாடுகளில் துணைத் தூதுவர்களாகப் பணியாற்றித் தூதுவர்களாக வேறு நாடுகளுக்கு இடம்மாறிச் செல்ல இருப்பவர்களும் வடக்கு மாகாணத்தின் தற்போதைய...
யாழ்ப்பாணம், திருகோணமலை, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தெந்தக் கட்சிகள், எந்தெந்த அடிப்படையில் போட்டியிடவுள்ளன என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. மட்டக்களப்பு, வன்னி தேர்தல் மாவட்டங்கள் தொடர்பான முடிவுகள் இன்னும் எடுக்கப்பட வேண்டியுள்ளது என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் ஒவ்வொரு கட்சிக்கும் வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். சற்றுமுன்னர் மெதமுலனவில் உள்ள அவரது வீட்டுக்கு முன்னாள் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அறிவித்தார். தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் விடுக்கும் அழைப்பை புறக்கணிக்க மாட்டேன் என்றும் அதற்கான உரிமை தனக்கு இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுத் தேர்தலில்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஆறு பேர் இன்று புனர்வாழ்வு பயிற்சி முடிவடைந்த நிலையில் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர். வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. யுத்த காலத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவினார்கள் மற்றும் அந்த அமைப்பில் அங்கத்துவம்...
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கல்வித் தகைமை உடையவர்களை நேர்மையான முறையில் தெரிவு செய்யுமாறு வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த கடிதத்தினை அவர் வழங்கியுள்ளார். குறித்த கடிதத்தில், கடந்த...
தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (28) கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் திங்கட்கிழமை (29) உத்தரவிட்டார். புதுக்குடியிருப்பு மற்றும் கைதடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மேற்படி இரு சந்தேகநபர்களிடமிருந்து...
வலிகாமம் வடக்கில் 1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும், இதுவரையில் 600 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய காணிகளை மறித்து அடைத்துள்ள கம்பி வேலிகளை அகற்றுவதற்கு இராணுவத்தினர் ஒத்துழைப்பு தருவார்கள் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை திங்கட்கிழமை (29) பார்வையிடச் சென்ற...
வலிகாமம் வடக்கு காணிகளிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம் எனவும் அடுத்த கட்டமாக அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக நேற்று திங்கட்கிழமை (29) சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ். மாவட்ட முன்னாள் உறுப்பினர் ரவிராஜ் கொலை சந்தேகநபரான கடற்படையைச் சேர்ந்த நிலங்க சம்பத் முனசிங்க பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. சந்தேகநபரை 25 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் பிணையிலும் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டது....
வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி கடந்த வியாழக்கிழமை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவுக்கு வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அத்துடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விடயம் குறித்துப் பேசினார் என அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். விசாரணைகள் எதுவும் செய்யாமல் அவரை...
பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் ஒருபோதும் வேட்புமனு வழங்கப்போவதில்லை என்றும் தேசியப் பட்டியல் எம்.பி. நியமனத்தை வழங்கவும் தான் தயாரில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திங்கட்கிழமை திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்களுடன் நேற்று...
இன்புளுவென்ஸா ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் நாடு பூராகவும் பரவுவதைத் தடுக்க, சுகாதார அமைச்சு போதுமான தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என, அகில இலங்கை தாதிமார் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. குறித்த வைரஸ் தொடர்பில் தற்போது உலகில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளை நாட்டில் பயன்படுத்தவில்லை என, அந்த சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்புளுவென்ஸா ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் தொற்று ஏற்படக்...
எதிர்வரும் ஐந்து வருடங்களில் நாட்டில் ஒரு நபருக்கான தலா வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான முதலீடுகள், தொழிநுட்பங்கள் உள்ளிட்ட அணைத்து துறைகளிலும் விரிவான அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தெஹிடிவிட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
Loading posts...
All posts loaded
No more posts
