Ad Widget

குடும்பப் பெண் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்!

தனிமையில் வீட்டில் இருந்த இளம் குடும்பப் பெண்னை இனந்தெரியாதவர்கள் தாக்கியதில் அவர் மயக்கமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மதியம் குப்பிளான் தெற்கு சந்திக்கு அண்மையாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்கப்பட்ட இவர் இரண்டாம் நாளான நேற்றும் மயக்கம் தெளியாத நிலையில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயாரான திருமதி அ.செந்தில்குமார் (வயது 30) என்பவரே மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு இவர் வீட்டில் இருந்தார் எனவும் முன்பள்ளிக்கு விடப்பட்ட பிள்ளையை இவர் அழைக்க வராத நிலையில் முன்பள்ளி ஆசிரியை வீட்டுக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார் எனவும் பதில் வராத நிலையில் பிள்ளையின் மாமியாருடன் தொடர்பு கொண்டு பிள்ளையை அழைத்து செல்லும்படி கூறியுள்ளார்.

முன்பள்ளிக்குச் சென்ற மாமியார் பிள்ளையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்ற வேளையில் வீட்டின் கதவுகள் திறந்த நிலையில் காணப்பட்டுள்ளன. கூப்பிட்டும் பதில் வராத நிலையில் வீட்டில் தேடிய போது அறையொன்றில் இரத்தம் வடிந்த நிலையில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

Related Posts