தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ். மாவட்ட முன்னாள் உறுப்பினர் ரவிராஜ் கொலை சந்தேகநபரான கடற்படையைச் சேர்ந்த நிலங்க சம்பத் முனசிங்க பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
சந்தேகநபரை 25 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் பிணையிலும் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.
அத்துடன் சந்தேகநபர் வெளிநாடுகளுக்கு செல்லாதவாறு அவரின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டதுடன் சாட்சியங்களை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாமல் விலகி நடக்குமாறும் அவருக்கு கடும் எச்சரிக்கையை நீதிபதி விடுத்தார்.