- Wednesday
- August 13th, 2025

புங்குடுதீவு மாணவி வித்தியா கொடூரமாக சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையின் போது சுவிஸ் ஆசாமி பொலிஸ்பிடியிலிருந்து தப்பித்து எப்படி வெள்ளவத்தை சென்றார் என்பது தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னொருவன், சம்பவதினம் தான் கொழும்பில் இருந்ததாக கூறிய விடயம் தொடர்பான விசாரணை...

கொழும்பு மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வி.ஆனந்தசங்கரி தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி களமிறங்கவுள்ளது. இன்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுகின்றது. அதற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிடுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி...

எமது சமூகத்தில் பரவியுள்ள போதைப் பொருள் பாவனையை நாங்கள் இல்லாது செய்யாவிட்டால், அது எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்த துரோகமாக அமைந்து விடும். இவ்வாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள தேசிய புகைத்தல் ஒழிப்பு மாதத்தையொட்டி யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கலந்தரையாடலில் கலந்து கொண்டு கருத்து...

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களை விடவும் தற்போது மதுப் பாவனை அதிகரித்துள்ளதாக புனித சவேராயர் குருத்துவ கல்லூரியின் ஒழுக்கவியல் விரிவுரையாளர் ரவிராஜ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள தேசிய புகைத்தல் ஒழிப்பு மாதத்தையொட்டி யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கலந்தரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 2002ஆம் ஆண்டு யாழில்...

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எதனையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அக்கட்சியின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கை முழுமையாக அப்படியே வருமாறு: வரும் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி போட்டியிடப் போகிறதா? இல்லையா? எனும் முடிவு எடுக்கப்படாத நிலை தொடர்ந்து இருக்கும் இந்தச்...

திருமணம் என்பது பெரும் பணச்செலவில் ஆடம்பரமாக இடம்பெறுவது மாத்திரமே என்பதற்கு அப்பால் நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதை வவுனியாவில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தம்பதியினர் செய்து காட்டியுள்ளனர். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மதிசூதனன் இரமீலா ஆகியோரின் திருமணத்தின்போதே இந் நிகழ்வு இடம்பெற்றது. திருமணங்களை பெரும் பண...

புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட மாணவி வித்தியாவின் வழக்கில் பிரபல சட்டத்தரணி கே.வி.தவராசா இனி முன்னிலையாக மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதியும் வியாபாரியுமான ஒருவர் வித்தியாவின் மரணத்தையும் வேறு சிலருடன் சேர்ந்த வியாபாரமாக்கி விசமத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இவர்கள் வித்தியாவின் தாய்க்கும் சகோதரனுக்கும் கொடுத்து வந்த...

ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு மாதத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு நேற்று(12) இடம்பெற்றது. 'சுய கண்ணால் போதையற்ற உலகை காண்போம்' எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. போதைப்பொருளிற்கு எதிராண சத்தியபிரமாணம் அரச அதிகாரிகளினால் எடுக்கப்பட்டதுடன் விசேடமாகாண இம்மாதத்தில்...

தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டி முறையை வலியுறுத்தியே எமது தேர்தல் விஞ்ஞாபனம் அமையும் என தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கையில் மாற்றமில்லை எனவும் குறிப்பிட்டார். பொதுத் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடுகள்...

இனப்படுகொலை விடயத்தில் மென்மைப்போக்கை கடைப்பிடித்து வடக்கு மாகாண மக்களின் நல்லிணக்கம் தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லுமாறு, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. வட மாகாண முதலமைச்சர், அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்குமான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவர் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிசெயலாளர் நிசா பிஸ்வாலை...

"அதிகார மோகம் பிடித்து அலைந்து திரியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பவே நாங்கள் புதிய கூட்டணியை அமைக்கத் தீர்மானித்துள்ளோம். அந்தக் கூட்டணியில் வேட்பு மனுக்களை நாம் கையளிப்போம். இனி புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்போம். தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கப்படும் புதிய அரசில் 5 விடயங்களை அடிப்படையாகக்கொண்டே வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்."...

நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில், தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் வரை பிணை கிடையாது. ஒழுக்கமில்லாத வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் சில வேளை வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன். விரைவாக விசாரணை செய்து பிணை வழங்க வேண்டும் என கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு ஒன்றைப்...

யாழ்ப்பாணத்தில் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி எவ்.யூ.வூட்லர் எச்சரித்துள்ளார். யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (11) காலை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வேட்பு மனுத்தாக்கல் செய்யும்...

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் இருவர், விசுவமடு குளத்தில் மூழ்கி நேற்று சனிக்கிழமை (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலா சென்று விசுவமடு குளத்தில் குளித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். யாழ்.பல்கலைக வணிகபீட இரண்டாம் வருட மாணவர்களான குமுதன், கஜீபன் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். உயிரிழந்த மாணவர்களின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம்...

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியின் 125 வது ஆண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கம் முற்று முழுதாக உள்ளுர் கலைஞர்களினை கொண்டு பிரமாண்டமாக நடாத்திய கட்டணத்துடன் கூடிய முத்தமிழ் மாலை 2015 நிகழ்வு பார்வையாளரினை பெரிதும் கவர்ந்ததுடன் அவர்கள் கலைஞர்களையும் பாராட்டிச்சென்றனர். 11.7.2015 சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை கல்லுாரியின் புதிதாக...

மிகப்பெரிய யுத்தத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுள்ளார். யுத்தத்தின் மிகுதி பகுதியை ஐக்கிய தேசிய கட்சி வெற்றிகொள்ளும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொரளை கொம்பல் மைதானத்தில் இன்று சனிக்கிழமை(11) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் பிரதமர் இதனை கூறியுள்ளார். 'ராஷபக்ஷ அரசை முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்து பெரும் யுத்த...

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி முதல் விலைக்குறைப்பு அமுலுக்கு வரும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அரிசியின் விலையும் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார். வெள்ளை அரிசி மற்றும் நாட்டு அரிசி 69 ரூபாவாகவும், சிவப்பு அரிசி 60 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும்...

தமிழ் மக்களை ஏமாற்றி வரும் தமிழ் தலைமைகளை மாற்றவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், தெற்கில் எவ்வாறு...

இராணுவம் மற்றும் அநாவசியமற்ற தேவைகளுக்காக சுவீகரித்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தொடர்ந்தும் எமது செயற்பாடு இருக்கும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை (10) யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில்...

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளடங்கிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் வண. பிதா ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் வேட்பாளர்கள் இன்றைய தினம் (11)...

All posts loaded
No more posts