Ad Widget

யாழில் போதை ஒழிப்பு நிகழ்வு

ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு மாதத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு நேற்று(12) இடம்பெற்றது.

jaffna-event-12-07-0215

‘சுய கண்ணால் போதையற்ற உலகை காண்போம்’ எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

போதைப்பொருளிற்கு எதிராண சத்தியபிரமாணம் அரச அதிகாரிகளினால் எடுக்கப்பட்டதுடன் விசேடமாகாண இம்மாதத்தில் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் பெரேரா வடமாகாண ஆளுனரின் செயலாளர் இளங்கோவன் மற்றும் பிரதேச செயலாளர்கள் பொது வைத்திய நிபுணர்கள் சுகாதார அதிகாரிகள் போதைப்பொருள் தடுப்புபிரிவினர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts