Ad Widget

யாழ்ப்பாணத்தில் அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளும ஒரு மாதகாலத்தில் ஒழிக்கப்பட வேண்டும்

வடமாகாண - யாழ் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல்:- யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் திடீரென அதிகரிப்பதற்குக் காரணமென்ன என கேள்வியெழுப்பியுள்ள வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளும் ஒரு மாத காலத்தில் சட்டத்தின் துணைகொண்டு ஒழிக்கப்பட வேண்டும் என வடமாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ்...

செயற்பாட்டு திறனுடைய இலவச செயற்கைக் கை வழங்கும் செயற்றிட்டம்

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் முழங்கைக்கு கீழ் கைகளை இழந்தவர்களுக்கு யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம் செயற்பாட்டு திறனுடைய செயற்கைக் கை வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைபொருத்தும் நடவடிக்கைகள் கல்லூரி வீதி , நீராவியடி , யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நாளை வெள்ளிக்கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் காலை 9.00 மணி முதல்...
Ad Widget

யாழில் 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன

யாழ்பாணத்தின் பாதுகாப்புக்கு தேவையான இராணுவ முகாம்களை தவிர அங்கு காணப்பட்ட 59 இராணுவ முகாம்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்துள்ளார். இதேவேளை, இராணுவத்தின் வசமிருந்த 12,901 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டளைத் தளபதி கூறியுள்ளார். யாழ். பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது...

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படும்!

ஹெரோயின், அபின், மோபின் போன்ற போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்தார், மற்றும் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். ஒரு கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தார் மற்றும் விற்பனை செய்தார்...

பறித்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் பாகங்களின்றி மீட்பு

ஏழாலை பூதரவாயர் கோவிலடியில், செவ்வாய்க்கிழமை (09) மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவரிடமிருந்து அடித்துப் பறிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள், சில உதிரிப்பாகங்கள் கழற்றப்பட்ட நிலையில் புதன்கிழமை (10) காலையில் ஏழாலை மகா வித்தியாலயத்துக்கு முன்பாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். சுன்னாகத்தில் இரும்புக் கடை வைத்திருக்கும் ஒருவர், இரவு வேலை முடிந்து தனது ஏழாலையிலுள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன்போது,...

மதியபோசனத்தையடுத்து காலியான வடமாகாண சபை ஆசனங்கள்

வடமாகாண சபையில் முன்பள்ளி நியதிச் சட்டம் வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மதிய போசனத்தின் பின்னர் சபை உறுப்பினர்களில் சிலர் சபைக்குச் சமூகமளிக்கவில்லை. அத்துடன், அமைச்சுக்களின் செயலாளர்கள் மதிய போசன இடைவேளை வரையில் சபையில் இருந்தததுடன் அதன்பின்னர் அவர்களின் இருக்கைகள் காலியாகவிருந்தன. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள...

கொலை செய்வது எப்படி? என பத்திரிகைகள் கற்பிக்கின்றன

படுகொலைகளை எவ்வாறு செய்வது, குற்றச்செயல்களை எவ்வாறு புரிவது என்பதை விளக்கமாகச் சொல்லிக்கொடுக்கும் பத்திரிகையொன்றை அரசாங்கம் அச்சிட்டு வருகின்றது. குற்றங்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்று பத்திரிகைகளில் விரிவாக பிரசுரிப்பதன் மூலம், மேலும் பல குற்றங்கள் செய்ய வழிசமைத்துக்கொடுக்கப்படுகின்றன என்று பிரபல திரைப்பட இயக்குநர் தர்மசிறி பண்டாரநாயக்க தெரிவித்தார். 'வித்தியாவின் பின்னர் நாம்?' என்ற தொனிப்பொருளில், கொழும்பு, பொரளை...

198 தீர்மானங்களில் 41 ற்கே பதில்; சீ.வி.கே

வடக்கு மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட 198 தீர்மானங்களில் 41 தீர்மானங்களுக்கு இடைக்காலம், முழுமையான பதில்கள் கிடைத்துள்ளன என அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது, கடந்த மாகாண சபையின் அமர்வில் இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மூன்று தீர்மானத்திற்கு மாத்திரமே பதில் கிடைக்கப்பெற்றுள்ளது என உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் கடந்த 21.05.2015...

பாடசாலைகளிற்கருகில் ஐஸ்கிறீம், வெற்றிலை விற்கத்தடை! பெண்களுக்கு தொந்­த­ரவு செய்யும் இளை­ஞர்­களை கைது செய்யவும் நடவ­டிக்­கை!!

யாழ் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக யாழ்ப்­பாணம் தலைமை பொலிஸ் நிலை­யத்­திற்கு உட்­பட்ட பாட­சா­லை­களிற்கு சமீபமாக ஐஸ்­கிறீம், வெற்­றிலை போன்­ற­வற்றை விற்­பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஐஸ்­கிறீம், வெற்­றிலை போன்­ற­வற்றை விற்பனை செய்யும் சாக்கில், பான் பராக் மற்றும் போதைப் பொருட்கள் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு...

புத்தளத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் இந்தாண்டு நிறைவுக்குள் மீள்குடியேற வேண்டும்

மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்று புத்தளம் மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் இந்தாண்டு நிறைவுக்குள் தமது மீள்குடியேற்றத்தை தமது முன்னைய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த மக்களுடைய அனைத்து செயற்பாடுகளையும் வடமேல் மாகாணத்துடன் இணைப்பதென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்...

வடக்கு மீள்குடியேற்றங்கள்; மாகாண சபையே தீர்மானிக்க வேண்டும்

வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களை மீள்குடியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வடக்கு மாகாண சபையே செயற்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 30 ஆவது மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசாவினால் அவசர பிரேரணையாக கொண்டுவரப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாணத்தில்...

ஏழாலைப் பகுதியில் இளைஞர்கள் அட்டகாசம்!

குறிப்பிட்ட சில இளைஞர்களின் நடவடிக்கைகள் காரணமாக ஏழாலை, மல்லாகம் பகுதிகளில் இரவு நேரத்தில் மக்கள் நடமாடவே அச்சம் கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக வீதியால் செல்பவர்களை தாக்குவது, வீடுகளுக்கு கல்லெறிவது, வீதியோரங்களில் உள்ள கழிவுப்பொருள்களை எடுத்து நடுவீதியில் போடுவது போன்ற நடவடிக்கைகள் காரணமாக பொது மக்கள் இரவு வேளைகளில் நடமாடுவதையும் தவிர்த்து வருகின்றார்கள்....

பஸிலின் விளக்கமறியல் நீடிப்பு

பொருளாதா அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் விளக்கமறியலை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்குமாறு கடுவெல நீதவான் தம்மிக ஹேமபால உள்ளிட்ட மூன்று நீதவான்கள், சற்றுமுன்னர் உத்தரவிட்டனர். திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோடி தொடர்பில், பசில் ராஜபக்ஷ எம்.பி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக,...

வடக்கிலுள்ள மது விற்பனை நிலையங்களின் உரிமங்களை மீள்பரிசீலனை செய்க : வடக்கு அவையில் தீர்மானம்

வடக்கில் தற்போது அதிகரித்துள்ள மனித நேயமற்ற கலாச்சாரத்திற்கு மது மற்றும் போதைப்பொருள் பாவனை பிரதான காரணமாக உள்ளது. எனவே வடக்கில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மது விற்பனை நிலையங்களுக்கான உரிமத்தினை மீள்பரிசீலணை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் வடக்கு மாகாண சபையில் நிறைவேறியது. வடக்கு மாகாண சபையின் 30 ஆவது மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்றது....

வித்தியா கொலை தொடர்பாக 10வது சந்தேக நபர் கைது!

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் நயினாதீவை சேர்ந்த நபர் ஒருவரை குற்ற புலனாய்வு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். நாயினதீவை சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரையே இவ்வாறு குற்ற புலனாய்வு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின் குமார் முன்னிலையில் முற்படுத்தி...

பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் கைது!

மறைந்த பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபன் கடத்தப்படவில்லை எனவும், யாழ். நீதிமன்ற கட்டிடம் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு அவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பார்த்தீபன், யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ். நீதிமன்ற கட்டடம் தாக்கப்பட்ட...

பொலிஸ் நிதிப்பிரிவில் பணமோசடி : முகாமைத்துவ உதவியாளருக்கு விளக்கமறியல்

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தின் கட்டளை பணியகத்தில் கடமையாற்றிய முகாமைத்துவ உதவியாளரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதிமன்றம் திங்கட்கிழமை (08) உத்தரவு பிறப்பித்துள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய கட்டளை பணியகத்தின் நிதிப்பிரிவில் கடந்த ஆண்டு காலப்பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கவேண்டிய 2 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாயை பணம் மோசடி...

யாழில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த மே மாதம் நடுப்பகுதியில் பெய்த மழை காரணமாக வெங்காயச் செய்கையானது அழிவடைந்தமையால், தற்போது ஒரு அந்தர் (அண்ணளவாக 50 கிலோ) வெங்காயம் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. வலிகாமம் பகுதியில் அதிகளவான வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றில் பெரும்பாலானவை அழிவடைந்துள்ளன. இதனால் வெங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. வடமராட்சிப் பகுதியில்...

சிறப்புரிமை அட்டை வழங்க நடவடிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்.பிராந்திய அலுவலகத்தால் சிறந்த வரி செலுத்துநர்களுக்கான சிறப்புரிமை அட்டை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 6.30 மணிக்கு வீரசிங்கம், மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக யாழ்.பிராந்திய பொறுப்பு உதவி ஆணையாளர் திருமதி க.சர்வேஸ்வரன் செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார். இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி கல்யாணி தகநாயக்கா...

புதிய தேர்தல் விதிகளால் யாழ்ப்பாணத்தின் தொகுதிகள் 6 ஆக குறையும் அபாயம்!

புதிய தேர்தல் விதிகளின் பிரகாரம் யாழ்ப்பாணத்தின் 11 தேர்தல் தொகுதிகள் 6 அல்லது 5 ஆகக் குறைக்கப்படும் அபாயநிலை ஏற்படும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் உள்ள 196 தேர்தல் தொகுதிகளில் 35 தேர்தல் தொகுதிகள் ஒரே சமயத்தில் குறைக்கப்படுவதனாலேயே இந்த நிலை உருவாகும் எனவும் அந்த...
Loading posts...

All posts loaded

No more posts