விபத்துக்களை ஏற்படுத்தும் மின்கம்பங்களை அகற்றுமாறு கோரிக்கை

ஆவரங்கால் சந்தியில் இருந்து அச்சுவேலி வைத்தியசாலை வரை, வீதியின் இருமருங்கிலும் நடப்பட்டிருந்த பழைய மின்கம்பங்களை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் ஆரம்பகாலத்தில் நடப்பட்ட மின்கம்பங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்படுவது துண்டிக்கப்பட்டு வீதிகளின் அருகில் உள்ள காணிகள் ஊடாக அப்பகுதிகளில் புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அங்கு ஏற்கெனவே இருந்த பழைய மின்கம்பங்கள்...

நல்லூர் உற்சவம்: 300 கடைகள் அமைக்க அனுமதி

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழாவின் போது ஆலயச் சூழலைச் சுற்றிலும் சுமார் 300 கடைகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கவுள்ளதாக யாழ். மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகி 25 தினங்களுக்கு நடைபெறவுள்ளது. மஹோற்சவ காலத்தில் ஆலய வளாகத்தில் கடைகள் அமைப்பதற்கான...
Ad Widget

மர்மப் பொருள் வெடித்ததில் இருவர் படுகாயம்

சரசாலை பகுதியில் இன்று (21) காலை மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேயிடத்தைச் சேர்ந்த சடையன் வர்ணன் (வயது 27), வர்ணன் பேபிராணி (வயது 25) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். இதில் மனைவி முகத்தில்...

யாழ் பிரபல பாடசாலை மாணவன் கஞ்சாவுடன் கைது!

6.396 மில்லிகிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள பிரபலமான பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் பாடசாலை மாணவனை அரச சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன, வியாழக்கிழமை (20) உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சிவில் உடையில் சென்ற பொலிஸார்...

தொடர்ந்து அரசியலில் நீடிப்போம் – ஜனநாயகப் போராளிகள் கடசி

தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்கூட, தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக ஜனநாயகப் போராளிகள் கடசியின் இணைப்பாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் கூறியுள்ளார். ராணுவப் புலனாய்வாளர்கள் தங்களை ஏவியிருப்பதாகக் கூறி கூட்டமைப்பு தங்களைப் புறக்கணித்தது என்கிறார் வித்யாதரன். அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிந்தபோது, ராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சியளிக்கப்பட்டதன் பின்னர், சமூகத்தில் இணைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின்...

தேசிய அரசாங்க ஒப்பந்தம் கைச்சாத்து – இலங்கைக்குள் வேறு தேசத்தை உருவாக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை ரணிலின் சூளுரை

சமரச தேசிய அரசாங்கமாக புதிய பாராளுமன்றில் ஒன்றிணைந்து செயற்படவென ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் , அதே நிகழ்வில் ஐதேக பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் பொதுச் செயலாளர்...

தேர்தலையடுத்து அனுராதபுர சிறையில் தமிழ்க் கைதிகளுக்கு கொடுமை! – உண்ணாவிரதத்தில் குதிப்பு

தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 49 தமிழ்க் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் வதைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் 49 தமிழ்க் கைதிகளும் சிறிய அறையொன்றுக்கு...

கஞ்சா கடத்தியவரின் பெற்றோரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உத்தரவு

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் பெற்றோரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காங்கேசன்துறை பொலிஸாருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், நேற்று வியாழக்கிழமை (20) உத்தரவிட்டார். இந்தியா, இராமேஸ்வரத்தினைச் சேர்ந்த காளி...

விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பகுதியில் விதிமுறைகளை மீறி வாகனங்களை பலர் நிறுத்திச் செல்வதால் தாம் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலைக்கு வருகை தரும் அம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் நோயாளிகள் ஏற்றி வரும் வாகனங்கள் உட்செல்ல முடியாதவாறு வாயிலுக்கு நேரே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தும் வகையில் சில வாகன ஓட்டுனர்கள்...

கூட்டமைப்பின் ‘ஐந்து S’

ஜப்பான் நாட்டின் 5S முறை பற்றி அனைவரும் அறிந்திருப்பர். ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பால் யாழில் உருவாக்கப்பட்டுள்ள '5 எஸ்'கள் பற்றி யாராவது அறிந்துள்ளீர்களா. நாடாளுமன்ற ஊறப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள சுமந்திரன், சேனாதிராசா, சிறிதரன், சரவணபவன், சித்தார்த்தன் ஆகிய ஐவருமே அந்த '5 எஸ்'கள் ஆவர். இந்த ஐவரின் முதற் பெயரும் ஆங்கிலத்தில்...

எம் விதியை நாம் வரைவோம் – சுமந்திரன்

இந்தப் பொதுத் தேர்தலில் பலத்த எதிர்ப்பு, சவால்களைத் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகத்தான வெற்றியினை ஈட்டியிருக்கின்றது என்றும் அந்த வெற்றிக்கு வழிசமைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்வதாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், எம் விதியை நாம் வரைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வெற்றி தொடர்பில், வாக்காளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மற்றும்...

தேசிய பட்டியல் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் பகிரப்படவேண்டும்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள இரு தேசியப் பட்டியல் உறுப்புரிமையும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் பகிரப்படவேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அமோக ஆரவை தந்துள்ளதுடன் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற...

யாழ் மாவட்ட செயலகத்தின் பொன்விழா இன்று!

யாழ் மாவட்ட செயலகத்தின் 50 ஆவது நிறைவினையொட்டி இன்று (21) ஆம் திகதி பொன்விழா கொண்டாடப்படுகிறது. யாழ் மாவட்டத்தின் தலைநகரில் விசாலமாக அமையப்பெற்ற மாவட்ட செயலகமானது அனைத்து மாவட்ட மக்களும் இதுவரை காலமும் அளப்பெரிய நற் சேவைகளை ஆற்றி வருகின்றது. இனிமேலும் ஆற்றி வரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இலங்கையின் மூன்றாவது பெரிய அலுவலகம் என...

ரணில் விக்கிரமசிங்க இன்று பிரதமராக பதவியேற்பு

சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (21) சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) காலை 10 மணிக்கு பிறக்கும் சுபவேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். இலங்கையின் வரலாற்றில்...

த.தே.கூ அரசாங்கத்தில் இணையக் கூடாது!

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்திலேயோ அல்லது சர்வ கட்சியிலேயே இணையக் கூடாதென கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த தேர்தலில் ஈழத் தமிழரின் நிலை என்ன...

தலைவர்கள் உருவாகிறார்கள் அரசியல்வாதிகள் உருவாக்கப்படுகிறார்கள் – பொ.ஐங்கரநேசன்

சிறுவயது முதலே பொதுப்பணிகளில் ஈடுபட்டு, இலட்சிய தாகத்தை வளர்த்துக்கொள்பவர்கள் பின்னாளில் அனைவராலும் போற்றப்படும் தலைவர்களாக உருவாகிறார்கள். இவர்கள் அரசியல் தலைவர்களாகவும் பரிணாமிப்பது உண்டு. இதற்கு அமரர்,மாமனிதர் சிவமகாராசா ஓர் உதாரணம். ஆனால், இன்று அரசியல்வாதிகள் பெரும்பாலும் உருவாக்கப்படுகிறார்கள் என்று வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். அமரர் சி.சிவமகாராசா கூட்டுறவுத்துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியதோடு, இரண்டு...

வவுனியா, அம்மா பகவான் வீதி மக்களை வெளியேற்ற எடுக்கும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு

வவுனியா, குட்செட், அம்மா பகவான் வீதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற கமநலசேவைகள் திணைக்களம் எடுத்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - வவுனியா, குட்செட், அம்மா பகவான் வீதியில் கடந்த காலத்தில் யுத்தம் காரணமாக வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் 1997ஆம் ஆண்டு தொடக்கம் கட்டம் கட்டமாக...

வாக்கு எண்ணும்போது குளறுபடிகள் எதுவும் நடக்கவில்லை என்றார் அரச அதிபர்!

யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலானது உண்மையாகவும் நேர்மையாகவும் நடை பெற்றுள்ளது. ஆனால் ஒரு சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிட்டு பிழையான தகவல்களை மக்களுக்கு வழங்க முனைகின்றன என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நண்பகல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது....

விஷேட தேவையுடைய மாணவிகள் துஷ்பிரயோகம்: அதிபர் விளக்கமறியலில்

செவிப்புலன், விழிப்புலன் அற்றோருக்கான பாடசாலை ஒன்றின் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும், அப் பாடசாலையின் அதிபரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பெற்றோர்களால் சிறுவர் மற்றும் மகளிர் நன்னடத்தைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த அதிபரை பாடசாலைச் சமூகம் இடைநிறுத்தியிருந்ததோடு, நன்னடத்தைப்...

தேசிய அரசாங்கம் அமைக்க ஶ்ரீசுக இணக்கம்!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து செயற்பட 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐதேகவுடன் இணைந்து சமரச அரசாங்கம் ஒன்றை...
Loading posts...

All posts loaded

No more posts