Ad Widget

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த இருவர் கைது

யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விநியோகித்த கொழும்பை சேர்ந்த இருவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.வூட்லர் தெரிவித்துள்ளார்.

இக்கைது சம்பவம் நேற்று முன்தினம் மாலை யாழ். நகரில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு அருகாமையிலேயே இடம்பெற்று உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த தனியார் கல்வி நிலையத்தில் மாலை நேர வகுப்புக்கள் முடிவுற்று மாணவர்கள் கல்வி நிலையத்தினை விட்டு வெளியே சென்ற போது வெளியில் நின்ற கொழும்பை சேர்ந்த இருவரும் மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விநியோகம் செய்துள்ளனர்.

இது தொடர்பில் அங்கு நின்ற சிலரினால் யாழ்.பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டதனையடுத்து அங்கு விரைந்த சிவிலுடைதரித்த பொலிஸார் போதைப் பொருள் விநியோகித்த இருவரினையும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

இவர்களில் ஒருவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியினை சேர்ந்தவர் என்றும், மற்றவர் பொரளையை சேர்ந்தவர் எனவும் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் தெரிவித்தார்.

மேலும் சந்தேகத்திடமான வகையில் யாழ் நகரில் நடமாடுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படுவார்கள். அத்துடன் இவ்வாறானவர்களின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் எங்காவது காணப்பட்டால் உடனடியாக யாழ்.பொலிஸாருக்கு அறியத்தருமாறும் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts