வடமாகாண சபையில் சிவாஜி தனித்து போராட்டம்

இறுதி போரின் போது இலங்கை அரச படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார். வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகிய நிலையில் சபையின் வாயிற் பகுதியில் சிவாஜிலிங்கம் தனது கவனயீர்ப்புப் போராட்டத்தினை...

அகதிகளின் குறைகள் தீர்க்க புதிய இணையத்தளம்

இலங்கை உள்ளிட்ட ஆசிய மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த அகதிகள் தங்குவதற்கும், நிதியுதவி பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வதற்கும் ஒரு புதிய இணையத்தளத்தை ஜேர்மனியை சேர்ந்த தம்பதிகள் உருவாக்கியுள்ளனர். பெர்லின் நகரை சேர்ந்த மரெய்கே கெய்லிங் (28) மற்றும் ஜோனஸ் ககோஸ்கே (31) என்ற தம்பதியினர், அகதிகளுக்கு பலன் ஏற்படும் வகையில் http://www.refugees-welcome.net/...
Ad Widget

8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய அவர்கள் தெரிவு!

8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார் கரு ஜயசூரியவின் பெயரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்ததுடன், அவரது பெயரை நிமல் சிறிபால டி சில்வா வழிமொழிந்துள்ளார். இதற்கமைய பிரதமர் மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் புதிய சபாநாயகரை பாராளுமன்ற...

பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப்பதிவுச் சான்றிதழ்களைப் பெற விசேட ஏற்பாடு

யாழ். மாவட்டத்தின் எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப்பதிவுச் சான்றிதழ்களை யாழ் மாவட்ட மக்கள் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2014ஆம் ஆண்டு வரையிலான மாவட்டத்தின் சகல பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப்பதிவுகள் கணனி மயமாக்கப்பட்டுள்ளதுடன் எல்.ஜி.என் வலையமைப்பிலும் கொண்டுவரப்பட்டுள்ளது....

புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்யவில்லை! – பொன்சேகா

மோட்டார் கண்டு தாக்கியதாலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்திருக்கலாம். அவர் தற்கொலை செய்யவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்திய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தற்கொலை செய்யவில்லை. ஏனெனில் அவரின் தலையில்...

கஞ்சாவுடன் இருவர் கைது

இளவாளை பகுதியில் 50 கிலோ கஞ்சாவுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக இளவாளை பொலிஸ் பொறுப்பதிகாரி மஞ்சுள டி சில்வா தெரிவித்தார். வவுனியாவைச் சேர்ந்த இரு நபர்கள் வேன் ஒன்றில் குறித்த கஞ்சாவினை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாகவும் இவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மஞ்சுள டி சில்வா குறிப்பிட்டார்....

சர்வதேச விசாரணை நடைபெற்றுள்ளது: விரைவில் அறிக்கை

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், அந்த அறிக்கை சில நாட்களில் வெளிவரும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று ஞாயிறன்று கொழும்பில் கூடிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் (டெலோ,...

காரைநகர் வேணன் அணை புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

காரைநகரின் பிரசித்திபெற்ற வேணன் அணைக்கட்டைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று திங்கட்கிழமை (31.08.2015) சம்பிரதாய பூர்வமாகத் தொடக்கி வைத்துள்ளார். காரைநகர் குடிநீர்ப்பற்றாக்குறைவு நிலவுகின்ற ஒரு பிரதேசம். இதனால், மழைநீரை வீணாகக் கடலினுள் கலக்கவிடாது தேக்கி நிலத்தடிநீரை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் வேணன் அணைக்கட்டு உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு விவசாயிகள்...

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில்போராட்டங்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

இலங்கையின் இறுதிப்போரில் அடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் போராட்டங்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளது. இந்த தொடர்ச்சியான போராட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகைளையும் பொதுஜன அமைப்புக்களையும் மக்களையும் இணந்து கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நாளை(2) முக்கிய கூட்டம் ஒன்றை அனைத்து தரப்பினருடனும் ஏற்பாடு செய்துள்ளனர்...

விஷம் தெளிக்கப்பட்ட பழங்கள் இப்பொழுது சந்தையில்!!

நெல்லியடி நச்தைப் பதகுதியில் இயங்கும் பழக்கடைகளில் மருந்து விசிறப்பட்ட பழ வகைகள் விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். நெல்லியடிப் பொதுச்சந்தையில் 10 மேற்ப்பட்டடோர் பழ வியாபாரம் செய்து வருகின்றர். தற்போது ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் தமது விற்பனையை அதிகரிக்கு நோக்கில் மருந்து விசிறி பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். மருந்து விசிறப்பட்ட...

போர்க்குற்றங்களை விசாரிக்க இலங்கையின் சட்டம் போதாது

உள் விசாரணை தமிழர்களுக்கு நியாயமான தீர்வைத் தராது. ஏனெனில், உள் விசாரணை பொலிஸிடம் வந்து நிற்கும். இதுவே இலங்கையின் சட்டம். இலங்கையில் போர்க்குற்றங்களை விசாரிக்கக்கூடியளவுக்கு சட்டங்கள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஞாயிற்றுக்கிழமை (30) தெரிவித்தார். 'உள் விசாரணை மேற்கொள்ளாது,...

எதிர்க்கட்சித் தலைவர் தெரிவில் தலையிடேன் – ஜனாதிபதி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிந்தெடுக்கும் விடயத்தில் தான் தலையிடப் போவதில்லை எனவும் அது நாடாளுமன்றத்துக்கு உரித்தான விடயமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட்ட கருணாவின் உண்மை முகம் என்ன? விவரிக்கும் விடுதலைப் புலிகள்…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக அந்த அமைப்பில் இருந்து வெளியேறி இலங்கை அரசுடன் கை கோர்த்த கருணா பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். ஆனால் இவை அனைத்துமே கட்டுக்கதைகள் சிங்களத்தால் கைவிடப்பட்ட நிலையில் பல்வேறு உண்மைக்கு புறம்பான தகவல்களை அவர் வெளியிடுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை...

பருத்தித்துறை சித்த ஆயுள்வேத வைத்தியசாலை இடமாற்றம்

பருத்தித்துறை பிரதேச சபையின் நூலகத்துக்குச் சொந்தமான வளாகத்தல் இயங்கி வந்த பருத்தித்துறை சித்த ஆயுள்வேத வைத்தியசாலை, பருத்தித்துறை உப அலுவலக கட்டடத்துக்கு வெள்ளிக்கிழமை (28) முதல் இடமாற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை நவீன சந்தைக்கட்டடத்துக்கு பின்புறமாக இக்கட்டடம் அமைந்துள்ளது. பருத்தித்துறை உப அலுவல கட்டடத்தில் இயங்கி வந்த பொது அலுவலக தொகுதி, நவீன சந்தைக்கட்டட தொகுதியின் மேல் மாடிக்கு...

பொலிஸார் மீது வாள் வெட்டு முயற்சி !! பதிலுக்கு பொலிஸார் துப்பாக்கி சூடு!!!

கொலைக்குற்ற சந்தேகநபரை, பொலிஸார் கைது செய்யச் சென்றபோது குறித்த சந்தேகநபர் பொலிஸாரை வாளால் வெட்ட முயன்றமையால் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுக் கைது செய்த சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (30) மாலை அல்வாய் பகுதியில் இடம்பெற்றது. காலில் படுகாயமடைந்த சந்தேகநபரான எம்.சதீஸ்குமார் (வயது 28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார். அல்வாய்...

யாழ். இராணுவ ஊடக இணைப்பாளர் இடமாற்றம்

யாழ். மாவட்ட இராணுவப் படைத்தலைமையகத்தின் ஊடக இணைப்பாளராக இதுவரை காலமும் கடமையாற்றி வந்த லெப்டினன் கேணல் எம்.ஏ.ஆர்.எஸ்.கே.மல்லவராச்சி, குருநாகல் விஜயபாகு காவல்படையணி தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பலாலி இராணுவ தலைமையக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் யாழ். மாவட்ட இராணுவப் படைத்தலைமையகத்தின் ஊடக இணைப்பாளராக கடமையாற்றிய மல்லவராச்சி, யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில்...

உள்ளக விசாரணை நடைபெறுமானால் உலகெங்கும் போராட்டம் வெடிக்கும் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளாது. எமது நிலைப்பாட்டை மீறி இலங்கையில் உள்ளக விசாரணை நடைபெற்றால் புலத்தில் வாழும் எம் சொந்தங்களையும் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து சர்வதேச ரீதியில் பெரும் போராட்டங்களை முன்னெடுக்க எண்ணியுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

வடக்கு விவசாய அமைச்சின் சூழலியல் விவசாயக் கண்காட்சி நல்லூரில் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகிறது

வடக்கு விவசாய அமைச்சின்'சூழலியல் விவசாயத்தை நோக்கி' என்னும் தொனிப்பொருளிலான மாபெரும் விவசாயக் கண்காட்சி எதிர்வரும் புதன்கிழமை (02.09.2015) ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி நல்லூர் கோவில்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இக்கண்காட்சியை புதன்கிழமை மாலை 5 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் திறந்துவைக்க உள்ளார். அளவுக்கு...

ஐ.நா அறிக்கை வெளிவந்த பின்னரே கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளியிட முடியும்! – சம்பந்தன்

போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட பின்னரே தமது நிலைப்பாட்டை வெளியிடமுடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளதாக இந்திய நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் விசாரணைக்கென்று நியமிக்கப்பட்ட சன்ட்ரா பெய்டாஸ்,...

எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தரமுடியாது – துமிந்த

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையை நிராகரிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட எதிர்த்தரப்பு எந்த கட்சி என்பது தொடர்பில் சபாநாயகர் தீர்மானித்து எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பில் அறிவிப்பார் எனவும் அதுதொடர்பிலான பூரணமான...
Loading posts...

All posts loaded

No more posts