பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மரண தண்டனை?

சிறுவர்கள் மீதான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடியவாறு புதிய சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொடதெனியவைச் சேர்ந்த சேயா என்ற சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து...

ஐ.நா அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு!

ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையாக வரவேற்பதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் இறுதிப் போரில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த விடயங்களுக்கு இன்று...
Ad Widget

தமிழருக்கு நேற்று சந்தோசமான நாள் – வடக்கு முதல்வர்

தமிழ் மக்களுக்கு நேற்றைய நாள் சந்தோசமான நாள் என்று குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர் தமிழ் நாடு சட்ட மன்றத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் தருணத்தில் ஐ.நா. விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்கள் குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்கினேஷ்வரன் ஊடங்கங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் எங்களுக்கு ஒரு...

நவீல்ட் பாடசாலை பாலியல் குற்றச்சாட்டு : சைகை சாட்சியங்களை பதிவு செய்வதில் தாமதம்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான நவீல்ட் பாடசாலை அதிபருக்கு எதிரான சாட்சியங்கள், வாய்பேச முடியாதவர்களாக இருப்பதால், அவர்களுடைய சாட்சி பதிவு செய்வதற்கு சைகை மொழிபெயர்பாளர் ஒருவருரை பெறுவதில் தாமதம் உள்ளதாக சாவகச்சேரி பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். வெகுவிரைவில் பொலிஸ் விசாரணைகள் மேற்கொண்டு பூரணமான அறிக்கையினை சமர்பிக்குமாறும், வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் எனவும் சாவகச்சேரி...

சர்வதேச விசாரணையை ஏற்கமுடியாது! – ராஜித

போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளக்கூடிய உள்நாட்டு விசாரணை நடத்துவது என்பதுதான் தங்களுடைய நிலைப்பாடு என்றும் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் போர்க் குற்றங்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக கூறும்...

வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளரின் இடமாற்றம் ஏற்றதல்ல என்கிறார் சத்தியலிங்கம்!

மருத்துவ நிர்வாகத்துறை சார்ந்தவர்கள் எமது பிரதேசங்களில் இல்லாத நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அகிலேந்திரனின் இடமாற்றம் ஏற்றதல்ல என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட பொது வைத்தயிசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரனுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் இதனை நிறுத்த தன்னாலான முயற்சியை மேற்கொள்வேன் எனவும் வட மாகாண சுகாதார அமைச்சர்...

கலப்பு விசாரணையில் நம்பிக்கையில்லை – சுரேஷ்

போர்க்குற்ற விசாரணைகளை மேற் கொள்வதற்கு கலப்பு நீதிமன்றம் நியமிப்பதினால் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தினால் இலங்கை தொடர்பாக இன்று வௌியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய அரசாங்கம் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்,...

போர்க்குற்றம் குறித்து உள் நாட்டு விசாரணை உகந்தது அல்ல ஐநா மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் கடந்த் 14 ந்தேதி தொடங்கியது.ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை வருகிற 16-ம் தேதி புதன்கிழமை முதல் பொதுப் பார்வைக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐநா மனித உரிமைகள் ஆணையர் சயித் அல்...

கடத்தப்பட்ட மணப்பெண் வீடு திரும்பினார் !! – மூவர் கைது

உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் நேற்று முன்தினம் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட வெளிநாட்டு மணப்பெண் நேற்று இரவு கடத்தபட்டோரால் பெண்ணின் வீட்டில் விடப்பட்டார். இதனைதொடர்ந்து இக்கடத்தலுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டிதுறை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, கனடா நாட்டில் இருந்து வந்த 28 வயது யுவதிக்கு...

டக்ளஸ் தேவானந்தாவின் வழக்குச் செலவை வழங்குமாறு உதயனுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

டக்ளஸ் தேவானந்தாவின் வழக்குச் செலவை வழங்குமாறு உதயன் உரிமையாளர், பிரதம ஆசிரியருக்கு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதயன் பத்திரிகைக்கு எதிராக ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தொடுத்திருந்த அவதூறு வழக்கு நேற்று தொடர் விசாரணைக்கு வந்திருந்தபோதே மேற்படி உத்தரவை யாழ் மாவட்ட நீதிபதி கஜநிதிபாலன் விடுத்திருந்தார். மேற்படி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது உதயன்...

கடலுக்குச் செல்வோர் அவதானம்

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக கடற்படை மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. விஷேடமாக ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

24 மணிநேரமும் முறையிடலாம்

சிறுவர்கள் மற்றும் மகளிருக்கு எதிராக நடைபெறும் துஷ்பிரயோகம் தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணிநேர சேவை, முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம், சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை 1929 என்ற இலக்கத்துக்கும் மகளிருக்கு எதிரான துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை 1938 என்ற இலக்கத்துக்கும் அழைப்பை ஏற்படுத்தி...

யாழ். பல்கலையின் கலைப்பீடத்தின் கல்விச் செயற்பாடு நிறுத்தம்!!

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள கலைப்பீடத்தின் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் இந்த...

சங்கிலியன் சிலையையும் விட்டுவைக்காத சோடா !!

நல்லூர் முத்திரைச் சந்தியில் உள்ள சங்கிலியன் சிலையில் சோடாவுக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளமை தமிழ் மக்களை பெரும் விசனமடையச் செய்துள்ளது. தமிழ் மக்களின் வீரத்தை வெளிப்படுத்திய சங்கிலி மன்னன் கையில் ஏந்தியிருக்கின்ற வாளில் சோட நிறுவனத்தின் விளம்பரச் சின்னம் மாட்டப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய மகோற்சவத்திற்கு வருகின்ற மக்களுக்கு தமது குளிர்பானம் தொடர்பில் விளம்பரம் செய்வதற்காக குறித்த நிறுவனத்தின்...

வித்யாவின் கண்ணிலிருந்த விந்தணுவை பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு

யாழ். புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி லோகநாதன் வித்யாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம், திங்கட்கிழமை (15) உத்தரவிட்டுள்ளது. இந்த கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து...

குடிநீர் திட்டத்துக்கு மீனவர் சமாசம் எதிர்ப்பு

வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி மற்றும் தாளையடி கடல் பிரதேசத்திலிருந்து நீரைச் சுத்திகரித்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி, வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக சங்கத் தலைவர் பொ.பிரேமதாஸ் தெரிவித்தார். சமாசத்தின் நிர்வாக எல்லைக்குட்பட்ட மணற்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையுற்ற 15 கிளைச்...

வடமாகாண சபை மாங்குளத்தில் அமைக்கப்படும்

வடமாகாண சபையின் கட்டடத் தொகுதியை வடமாகாணத்தின் மத்தியாகக் கொள்ளப்படும் மாங்குளத்தில் அமைப்பதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாங்குளம் பகுதியில் வடமாகாண சபை கட்டடத் தொகுதியை அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காணியை, வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் திங்கட்கிழமை (14) பார்வையிட்டுள்ளனர். மாங்குளம் சந்தியிலிருந்து 500 மீற்றர்...

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்படும்

நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் சிறுவர்களையும் மகளிர்களையும் பாதுகாப்பதற்குமான சட்டத்தை மிகவும் கடினமாக்கப்படவேண்டும் என்று மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார். இசுருபாயவில் அமைந்துள்ள மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அலுவலகத்தில் தனது கடமைகளை நேற்று செவ்வாய்க்கிழமை (15) பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே...

இலங்கை மனித உரிமைகள் விவகாரத்தில் பின்வாங்கும் அமெரிக்கா!- கெலம் மக்ரே பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கை மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்குவதாக, சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குநர் கலம் மக்ரே குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த கலம் மக்ரே, அமெரிக்க மற்றும் இலங்கை அரசை பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவர் மேலும் பேசுகையில், மைத்திரிபால சிறிசேன அரசு மேற்கு நாடுகளுடன் கூட்டணி அமைத்ததால் அமெரிக்கா பின்வாங்குகிறது.சீனாவுக்கு ராஜபக்ச...

ஐ. நாவில் மங்கள சமரவீர பொய் கூறுகின்றார் – சுரேஸ்

உள்ளக விசாரணை என்பது வெறும் கண்துடைப்பாக இருக்குமே தவிர, அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் அவையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரை சம்பந்தமாக நீர்வேலியில் உள்ள அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர்...
Loading posts...

All posts loaded

No more posts