Ad Widget

சமூர்த்தி பயனாளிகளுக்கான வீட்டுக் கடனுதவி

சமூர்த்தி நிவாரணம் பெற்ற பயனாளிகளில் 80 பயனாளிகளுக்கான வீட்டு கடன் உதவி இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்ட சமூர்த்தி ஆணையாளர் மகேஸ்வரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் நடைபெற்றது.

சமூர்த்தி பயனாளிகளுக்கான காசோலைகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வழங்கி வைத்தார்.

2014 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சமூர்த்தி நிவாரணத்தினைப் பெற்று வந்த சமூர்த்தி பயனாளிகள், அந்தந்த சமூர்த்தி சங்கங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்டு, வீட்டுத்திட்ட கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவர்களுக்கு சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இவர்கள் இந்த நிதியின் ஊடாக வீடு கட்டுதல் மற்றும், வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

யாழ்.மாவட்டத்தில் 54 ஆயிரம் குடும்பங்கள் சமூர்த்தி நிவாரணத்தினைப் பெற்று வருகின்றார்கள்.

அவர்களில் 80 பேர் தெரிவு செய்யப்பட்டு, இக்கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts