Ad Widget

கையெழுத்துபோராட்டத்தில் யாழ் பல்கலைக்கழகம் இணைந்தது

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழுவினால் கட்டமைக்கப்பட்ட கையெழுத்து போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழம் இணைந்தது.

விரிவுரையாளர்கள் அலுவலர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் இந்த போராட்டத்தில் கையெழுத்திட்டனர்

இலங்கைதீவில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதஉரிமை மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயல்முறை பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தும்படி நாம் இத்தால் ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்துகிறோம். அதோடு ஸ்ரீலங்கா அரசால் உருவாக்கப்படும் எந்த ஒரு உள்ளக பொறிறையயும், விசாரணையும் நாம் உறுதியாக நிராகரிக்கிறோம். என்ற கோரிக்கையினை முன்வைத்து தமிழர் தாயகமெங்கும் கடந்த 4.9.2015 முதல் கையெழுத்துப்போராட்டம் நடைபெற்று வருகின்றது

Related Posts