Ad Widget

கூடுதல் சர்வதேச பங்களிப்புடன் கூட்டுப் பொறிமுறையை பரிசீலிக்க தயார் : கஜேந்திரகுமார்

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவேண்டும் மாறாக குற்றவாளிகளான இலங்கை அரசாங்கத்தின் விருப்பம் உள்வாங்க தேவையில்லை, சர்வதேச சமூகம் இது சம்பந்தமாக முடிவெடுக்க வேண்டுமென அமெரிக்கத் தீர்மானம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை ஆணையகத்தின் 30 வது கூட்டத் தொடர் நடைபெற்றுவரும்நிலையில் அதில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய மக்கள்...

உண்மையான நீதியும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தும் விதத்தில், சமர்ப்பிக்கப்படும் பிரேரணையில் திருத்தங்களை செய்ய வேண்டுகோள்

இலங்கை தொடர்பான உத்தேச வரைவுத் தீர்மானம் தொடர்பாக தமிழ் அரசியற் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் கூட்டறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளன. அறிக்கை வருமாறு . ‘இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் மனித உரிமைகளையும் மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் செப்ரெம்பர் 30ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கும்...
Ad Widget

அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் வெளியாகியது!34 வது அமர்வு வரை காலக்கெடு!

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அலங்கை போர்க்குற்ற விசாரணையறிக்கையினை தொடர்ந்து  அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்தின் உத்தேச நகல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மனித உரிமைகள் தொடர்பிலான சர்வதே பிரகடனங்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வலியுறுத்திப்பட்டுள்ளது.இலங்கையின் சுதந்திரம், இறைமை, பௌதீக ஒருமைப்பாடு, ஐக்கியதன்மை...

முழுமையான சர்வதேச விசாரணையே தேவை – தமிழர் செயற்பாட்டு குழு கோரிக்கை

ஐநா ஆணையாளரின் அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையினை வெல்வது எப்படி என்பது குறித்து கரிசனை கொண்டமைக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை உள்ளகப்பொறிமுறையினை நிராகரித்த ஆணையாளரின் காரணங்களினை வரவேற்றுள்ள சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழு(TACIAM)  முழுமையான சர்வதேச விசாரணையே தேவை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு...

மூன்றாவது நாளாகத் தொடரும் நடைபயணம்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சி நகரிலிருந்து ஆரம்பமான நடைபயணம் இன்று 3 ஆம் நாள் பளையிலிருந்து தொடங்கியது. நேற்று வெள்ளிக்கிழமை ஆனையிறவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் பளையுடன் நிறைவு செய்யப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் பளையிலிருந்து யாழ். நோக்கிய பயணம் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய பயணத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே...

சர்வதேச விசாரணைக்கு இடமேயில்லை! மீண்டும் உறுதியாக சொல்கிறது அரசு!!

"இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை'' என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய அமெரிக்காவும் இந்த நிலைப்பாடு தொடர்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் புதிய அரசு கூடிய...

இரண்டாவது நாளாகவும் தொடரும் நடைபயணம்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் நடை பயணம் இன்று வெள்ளிக்கிழமை இடண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. கிளிநொச்சியில் காலை 9 மணியளவில் ஆரம்பமான இரண்டாம் நாள் பயணத்தின் போது வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். தமிழ் மக்கள் உள்நாட்டு விசாரணை விரும்பவில்லை, சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதை வலியுறுத்தும்...

சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் நோக்கி நடைபயணம் ஆரம்பம்

இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி நடை பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. மனித உரிமை மீறல்களுக்கு உள்ளக பொறிமுறை பொருத்தமற்றது என்பதை சட்டிக்காட்டியும் சர்வதேச விசாரணையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியும் வட மாகாண சபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம்...

மன்னார் மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற கையெழுத்து வேட்டையில் வடமாகாணசபை அமைச்சரும் இணைந்தார்!.

ஐ.நா. கூட்டத்தொடரில் கையளிக்கும் பிரேரணையில் முதலமைச்சர் கையொப்பமிட்டார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளச் செல்லும் போது, கூட்டத்தொடரிலும் அங்கத்துவ நாடுகளிடமும் கையளிப்பதற்காக, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகளை வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னிடம் கையெழுத்திட்டு வழங்கியுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட, 'இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பு நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது' மற்றும் 'இலங்கையில்...

கையெழுத்துபோராட்டத்தில் யாழ் பல்கலைக்கழகம் இணைந்தது

சர்வதேச தலையீட்டில் விசாரணை வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

சர்வதேச தலையீட்டில் இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாகும். எக்காரணத்தை கொண்டும் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது என பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா பேரவையில் கலந்துகொள்வது...

ஜெனிவா செல்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை – சிவாஜிலிங்கம்

ஜெனிவாவுக்கு செல்வதற்காக அனுமதியை கோரி வடமாகாண ஆளுநரிடம் கடிதம் சமர்ப்பித்து இரண்டு வார காலமாகின்ற போதிலும் இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லையென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார். வடமாகாண சபை தலைவரிடம் உரிய அனுமதி பெற்று...

சர்வதேச விசாரணையைத் தமிழர்கள் கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு! ஊடகவியலாளர் சந்திப்பில் சம்பந்தன்!!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையைத் தமிழர்கள் கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு'' - என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் மாலை திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பைத் தனது திருகோணமலை இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நடத்தினார். இந்தச்...

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவை!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அத்துடன் மீண்டும் ஒரு சர்வதேச விசாரணை...

சர்வதேச விசாரணை கோரும் கையெழுத்து போராட்டம் கிழக்கிற்கும் நகர்வு

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழுவின் சர்வதேச விசாரணை கோரும் கையெழுத்து போராட்டம் கிழக்கிற்கும் நகர்ந்துள்ளது. 4 வது நாளான இன்று கிளிநொச்சி மற்றும் திருகோணமலைக்கும் விஸ்தரிக்கப்பட்டது. திருகோணமலையில் இன்று மாலை 3 மணியளவில் மறைமாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்திற்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தார் இதேவேளை யாழ்பாணத்திலும் போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது...

திருகோணமலையில் 07ம் திகதி திங்கட்கிழமை பி.ப 3.00 மணிக்கு கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்

சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றின் ஊடாகவே விசாரணை நடாத்தப்படல் வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், எந்த வடிவிலானதொரு உள்ளக பொறிமுறை மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை என்பதனை வெளிப்படுத்தியும் இவற்றினை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்...

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும்! – கஜேந்திர குமார்

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச விசாரணை பொறிமுறை ஊடாகவே நீதி கிடைக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குற்றம் செய்தவர்களே குற்றம் குறித்து விசாரணை செய்ய வேண்டியதில்லை. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தமிழ் மக்கள்...

அடுத்தவாரம் ஜனாதிபதியின் கைக்கு வருகிறது ஐ.நா அறிக்கை!

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையின் முற்பிரதி அடுத்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கை கிடைத்தவுடன் அதற்குப் பதிலளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அரசாங்கத்தினால் இரண்டு குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா விசாரணை...

சர்வதேச விசாரணை முடிவடைந்தமை நீதியரசருக்கு புரியாதிருந்தால் அது ஆச்சரியம் ! – மாவை

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மீது வட மாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக தேர்தல் அறிக்கைக்கு மாறான கருத்தையே தெரிவித்திருந்தார் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தோற்கடிக்கப்படவேண்டும் என்ற வகையில் அவரின் கருத்து அமைந்திருந்தது என்றும் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன் அவரை...
Loading posts...

All posts loaded

No more posts