அரசத்துறை பணியாளர்களுக்கு 2500 ரூபா அடிப்படை சம்பளத்தில் சேர்ப்பு

அரசதுறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவில் 2500 ரூபா எதிர்வரும் ஜனவரி முதல் அவர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வரவுசெலவுத்திட்ட இறுதியுரையில் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை வரவுசெலவுத்திட்ட சமர்ப்பிப்பின் பின்னர் இடம்பெற்ற குழுநிலை விவாதங்களின் போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி 35,500 மில்லியன் ரூபாய்கள் மேலதிக...

கோத்தபாயவைக் கைது செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சி அழுத்தம்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் எழுப்பப்பட்ட வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்கள் சுயேச்சையாக...
Ad Widget

கிராம இராஜ்ஜிய திட்டத்துக்கு கூட்டமைப்பு போர்க்கொடி!

மாகாணசபைக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் 'கிராம இராஜ்ஜியம்' திட்டம் அமைந்துள்ளதால் அதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். எனவே, இந்தத் திட்டத்தை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பொருளாதார...

முதலமைச்சர் விக்கி தலைமையில் தமிழ் மக்கள் பேரவை உதயம்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வன் தலைமையில் 'தமிழ் மக்கள் பேரவை' என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான செய்திகள்  வெள்ளிக்கிழைமை இரவு தெரியவந்திருந்தது எனினும் கூட்டவிபரங்கள் இரகசியமாகவே பேணப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெற்ற இரகசிய கூட்டத்திலேய இந்தக்...

வரவுசெலவு 2016 : அதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2016 வரவுசெலவுக்கான இறுதி வாக்கெடுப்பு நேற்று (19) 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது. ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக51 வாக்குகளும் கிடைத்துள்ளன.13 பேர் சமூகமளிக்கவில்லை. எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது வரவுசெலவு திட்டம் கடந்த நவம்பர் 20ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் 11 அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்புடன் சமர்ப்பிக்கப்பட்டது. ஐக்கிய...

இராணுவத்தினர் வசமுள்ள பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் – பிரதமர்

வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வடக்கில் இராணுவத்தினரினால்...

வடக்கு மாகாணசபையில் நேற்று கடும் வாய்த்தர்க்கம்!!

வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் மோதல் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது, இதன் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, ரெலோ ஆகிய கட்சித் தலைமைகளின் கடந்தகால வண்டவாளங்கள் உறுப்பினர்களால் பரஸ்பராமாக உறுப்பினர்களால் சபையில் பலர் முன்நிலையில் முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி நாள் விவாதம்...

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி உருவாகும் – மஹிந்த

எதிர்வரும் சில மாதங்களில் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வு கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற பொருளாதார திட்ட கொள்கை காரணமாகவே இந்த நிலை ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார். லங்கா சமசமாஜக் கட்சியின் 80வது ஆண்டு நிறைவு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்...

சிறிய நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்?

வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி காரணமாக சிறிய நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக பதிவு செய்து கொண்டுள்ள அனைத்து நிறுவனங்களும் வருடாந்தம் 60 ஆயிரம் ரூபாவை வரியா செலுத்த வேண்டும் என்று வரவு செலவுத்திட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறான சிறு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் இயங்கி...

தமிழர்களுடன் இணைந்து தீர்வைப் பெறும் சந்தர்ப்பத்தை முஸ்லிம்கள் இழந்து விடக் கூடாது!

சர்வதேச தலையீடுகளின் மூலமாக எமக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம். அதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. அதில் முஸ்லிம்களும் எம்முடன் ஒன்றிணைந்து பயணிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதை முஸ்லிம்கள் இழந்துவிடக் கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மறைந்த முன்னாள் செனட்டர் மசூர் மௌலானவின்...

போரின் இறுதியில் சரணடைந்தவர்கள் காணாமற்போனதற்கு இராணுவமே பொறுப்பு! – மக்ஸ்வெல் பரணகம

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து காணாமல் போனவர்களுக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும். என்று காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கடந்த 11ம் திகதியிலிருந்து 16ம் திகதி வரை நடைபெற்ற காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளிப்பதற்காகச் சென்ற காணாமல்போனோரின் உறவினர்கள் பலர், இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்கால், வட்டுவாகல்...

யாழில் ஜனாதிபதி தலைமையில் தேசிய நத்தார் கொண்டாட்டம்!

தேசிய நத்தார் கொண்டாட்டம் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது என்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். கத்தோலிக்க திருச்சபையின் தேசிய உற்சவம் எதிர்வரும் 20ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதியும் கலந்து கொள்வார்....

கிளிநொச்சியில் இதுவரை 19 பேரை பலியெடுத்த ரயில்!

பாதுகாப்பான ரயில்வே கடவையை அமைத்துத் தரக் கோரி கிளிநொச்சியில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு முன்பாக காலை 9.30 மணியளவில் மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட முறிகண்டி முதல் முகமாலை வரையான பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவை இல்லாததனால் இதுவரை 19 பேர் ரயிலில் மோதி பலியாகி...

யாழ். பொலிஸாரின் வேண்டுகோள்

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் அறியத்தருமாறு யாழ். பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். போதைப் பொருள் விற்பனை, சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கிலும், இவ்வாறான செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கு உதவி வழங்குமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு, குறித்த விடயங்கள் தொடர்பில் 076-6633750 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். கடந்த...

வைத்தியர்கள் அவர்களின் பிரதேசங்களில் பணியாற்றுவதை கட்டாயமாக்கவேண்டும்

'வைத்தியர்கள் மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்வியைப் பயின்று வைத்தியர்களாக வருகின்றனர். அவ்வாறு வரும் வைத்தியர்கள் அந்தந்தப் பிரதேசங்களில் சிறிது காலம் பணியாற்றுவதை வடமாகாண சுகாதார அமைச்சு கட்டாயப்படுத்த வேண்டும்' என வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான நிதி...

மாநகர சபைக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படும்

யாழ்ப்பாணம் மாநகரக்குப்பட்ட பகுதிகளில் மோசமான சுகாதார சீர்கேடுகள் காணப்படுகின்றன. இதனை மாநகர சபை கவனத்தில் எடுத்து சீர்செய்யாவிட்டால் மாநகர சபை மீது நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்' என வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் சுகாதார...

ஊடகவியலாளர்களுக்கும் இலவசமாக அலைபேசிகள்

இலங்கையிலுள்ள சகல ஊடகவியலாளர்களுக்கும் இலவசமாக ஸ்மார்ட் அலைபேசிகள் மற்றும் சிறப்பு சலுகைகளுடன் கூடிய இணைப்பும் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போது இவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வடமாகாண சபையைப் பற்றி கொழும்பிலிருந்து ஓநாயொன்று ஊளையிடுகின்றது!

நேற்று வியாழக்வடமாகாண சபையைப் பற்றி கொழும்பிலிருந்து ஓநாயொன்று ஊளையிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளை தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நேற்று வெள்ளிக்கிழமை (18) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது...

புலிகளுடன் தொடர்புடையோர் அரசியல் கைதிகள் அல்லர்! – அமைச்சர் சுவாமிநாதன்

"புலிகளுடன் தொடர்புடைய தவறுகளுக்காக தண்டனை பெற்றவர்கள் அரசியல் கைதிகள் அல்லர்'' என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் ஜயந்த சமரவீர எம்.பி. எழுப்பிய கேள்விக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த...

யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம்!!

யாழ்ப்பாணம் கடலால் மூல்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதல் விளைவாக காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் குறிப்பாக யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஐங்கரநேசன், 2004 ஆண்டில் வடக்கு மற்றும் கிழக்கு...
Loading posts...

All posts loaded

No more posts