- Tuesday
- April 28th, 2026
மன்னர் மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசெப் ஆண்டகையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரனுக்கும் இடையிலான சந்திதிப்பு ஒன்று இடம்பெற்றது. மன்னார் ஆயர் இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கழமை காலை 09.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம், அதன் செயற்பாடுகள் குறித்து...
தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான வரைபை மக்களிடம் கையளித்து அவர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் முழுப்பங்களித்தல் உட்பட முக்கியமான மூன்று தீர்மானங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்)...
முல்லைத்தீவுப் பொலிஸாரின் அசண்டையீனத்தால் மூன்று பிள்ளைகளின் தாயான முன்னாள் போராளியின் சடலம் கடந்த நான்கு நாள்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் காத்திருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. கடந்த 2ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...
உலகின் புகழ் பெற்ற சுற்றுலா இதழான லோன்லி பிளானட் சஞ்சிகை (Lonely Planet Magazine's Dream Trips 2016) வௌியிட்டுள்ள முதல் பத்து சுற்றுலாத் தளங்களில் இலங்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா தொடர்பான ஆலோசனை புத்தகங்களை, “லோன்லி பிளானட்“ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. உலகளவில் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள் குறித்த...
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 4 இலக்க ஓட்டங்களாக 1009 ஓட்டங்களை 323 பந்துகளில் பெற்று மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் மும்பை மாணவர் பிரணவ் தனவாதே இந்த இலக்கை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 10-ம் வகுப்பில் படிக்கும், 15 வயது மாணவரான பிரணவ், கே.சி.காந்தி மேனிலைப் பள்ளி மாணவர்...
பேக்கரி உற்பத்திகளுக்கான விலை அதிகரிப்பு தொடர்பில் இவ் வாரத்துக்குள் தீர்மானிக்கவுள்ளதாக, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் சில வரித் திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன கூறியுள்ளார். தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி எனப்படும் என்.டீ.டி வரி ஜனவரி மாதம்...
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கை ஜனநாயகத் தேசியக் குடியரசின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் பூர்த்தியடையவுள்ளது. இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைபவம் எதிர்வரும் 8ம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதே மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது, மகாத்மா காந்தியின் பேரன்...
கடந்த வருடத்தில் H.I.V நோயாளர்கள் 225 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டைவிட 2015 ஆம் ஆண்டு இந் நோயாளர்கள், அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் இயக்குனர், மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இதில் 27 கர்ப்பினி பெண்கள் உள்ளடங்குகின்றனர். 15 வயது முதல் 23 வயதான இளைஞர்களிடம் எயிட்ஸ் நோய்...
வடமராட்சி, பருத்தித்துறை மீன்பிடித்துறைமுகம், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் நிதியுதவியில் இவ்வருடம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அபிவிருத்தி பணிகள் மேற்கொள்வது குறித்து சாத்திய வள ஆய்வுகள் மேற்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் திங்கட்கிழமை (04) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், நீரியல் வள அமைச்சின் அதிகாரிகள், அதன் கீழ் இயங்கும் துறைமுக...
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்படி இரு நாடுகளுக்கு இடையிலும் கலாசார மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு...
கஞ்சா, மதுபானம் மற்றும் இதர போதைவஸ்துக்களை பாவித்து சிறு பிரச்சினைகளை ஏற்படுத்திப் பின்னர் அதனை சமூகப் பிரச்சினையாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர் என யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எவ்.யூ.வூட்லர் தெரிவித்தார். யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் கடந்த 2ஆம், 3ஆம் திகதிகளில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்று அப்பகுதியில் பதற்ற நிலைதோன்றியது. இதனையடுத்து, பொலிஸாரின்...
பொங்கலுக்குப் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படக்கூடும் என்று, தகவல்கள் கசிந்துள்ளன. அதன்போது, தற்போதிருக்கின்ற அமைச்சர்கள் பலரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என்று அறியமுடிகின்றது. அதற்கு அப்பால், நாடாளுமன்றத்தில் எதிரணியில் இருந்துகொண்டு, 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கும் இரண்டு அமைச்சுகள் கிடைக்கவிருக்கின்றன...
வடக்கு மக்களின் காணிகளை மீளப் பெற்றுக்கொடுத்து அவர்களை மீள்குடியேற்றவும், ஏனைய பகுதிகளிலுள்ள மக்களைப்போல உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டில் சட்டம், ஒழுங்கை உறுதிப்படுத்தும் சமூக முறைமையை ஏற்படுத்துவதுடன், மூன்று ஆண்டுகளுக்குள் சிறந்த பொருளாதார சமூகத்தை உருவாக்கும் செயற்றிட்டத்தை முன்வைத்து, வரலாற்றில் இதுவரை இடம்பெறாத அபிவிருத்தியை இலங்கையில் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த...
தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சட்ட ஆலோசகரும் சட்ட வல்லுநருமான சிவா பசுபதி நிராகரித்து விட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிவா பசுபதி கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். அப்போது அவரை வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தொலைபேசி மூலம்...
நிலையான, ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய, நியாயமான, செயற்படுத்தப்படக்கூடிய ஓர் அரசியல் தீர்வை எட்டுவதன் அவசியத்தை முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளயருடனான சந்திப்பின் போது வலியுறுத்தினார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன். இலங்கை வந்துள்ள முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளயர் நேற்று திங்கட்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை...
2015 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உ/த) பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அவற்றுக்கான மீள்திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. இதற்கமைய, முடிவுகளில் திருப்தியில்லாத பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள், மீள்திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் சில பாகங்களில் குறிப்பாக வட, வடமத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (05) ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாட்டின் மத்திய சப்ரகமுவ மேல் மாகாணங்களிலும் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம்...
யாழ். போதனா வைத்தியசாலையில் 2016 ஆம் ஆண்டு பிறந்த நான்கு நாட்களில் 30 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு 1309 பேர் இந்த நோயின் தாக்குத்துக்கு உள்ளாகியிருந்து அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்திருந்தனர். 2014 ஆம் ஆண்டு 1339...
அரசியல் ரீதியான கட்சியாக தமிழ் மக்கள் பேரவை செயற்படாது எனக் கூறப்பட்டுள்ள நிலையில், பேரவையின் இலக்கு என்ன என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் இனப் பிரச்சினை சம்பந்தமாக மிக அவதானமாகவும்...
Loading posts...
All posts loaded
No more posts



