- Wednesday
- August 5th, 2026
முல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். இதன்போது சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து “ஈழ மகாகாவியம் எழுதுவதை என் வாழ் நாளின் பெரும்பணியாகக் கருதுகிறேன்” என, குறிப்பிட்டார். கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்தத் தியாகத் திரு மண்ணில் நான் உணர்ச்சிமயமாக இருக்கிறேன். என்...
புத்தூர் நவக்கிரி பிரதேசத்தில் நேற்று காலை திடீரென ஏற்பட்ட நிலவெடிப்பு, நிலத்தின் கீழ் உள்ள சுண்ணாம்பு பாறைகளில் உண்டாகும் உடைவுகளால் ஏற்படும் தரை இறக்கமே என பேராதனை பல்கலைகழக புவியியல்துறை பேராசிரியர் வி. நந்தகுமார் தெரிவித்துள்ளார். நவக்கிரிப் பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை வீடொன்றிலும் தோட்ட நிலங்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டன. இதனையடுத்து, பேராதனை பல்கலைகழக புவியியல்துறை...
இலங்கையின் பாடசாலைகளில் முதலாம் வகுப்பில் இருந்து பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. தேசிய சிறுவர் அதிகார சபையின் தலைவர் நட்டாஸா பாலேந்திரா இந்த தகவலை, ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பது மற்றும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது என்பன கடும் பிரயத்தனமாக இருக்கும் என்று...
தமிழ் மக்கள் பேரவை தயாரிக்கும் தீர்வுத் திட்ட வரைபு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கையளிக்கப்பட்டால், அதனைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருப்பதை வரவேற்பதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழ்த்...
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா நேற்று பிற்பகல் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இப்பெருவிழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவும் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் வடக்கு மாகாணத்தைச்...
இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி இடம்பெறும் சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவங்களுடன் புலிகள் இயக்கத்தினருக்கோ, அல்லது புலி ஆதரவு அரசியல்வாதிகளுக்கோ தொடர்பிருக்கலாம் என, தமிழக க்யூ பிரிவு பொலிஸார் சந்தேகம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், கள்ளத் தோணி இயக்கும் கடத்தல்காரர்கள் பிடிபடும் போது, படகை விட்டு தப்பி விடுகின்றதுடன் நடுக்கடலில் தத்தளிப்போர், தங்கள்...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய கவிஞரும், பாடலாசிரியருமான கவிப்பேரரசு வைரமுத்து, வடமாகாண சபையின் பேரவைச் செயலகத்துக்கு இன்று சனிக்கிழமை (23) விஜயம் மேற்கொண்டார். அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், வடமாகாண சபையையும் சுற்றிப் பார்வையிட்டார்.
குடும்பத்தில் நிலவும் வறுமையால் இறந்தவரின் சடலம் இரு நாட்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலேயே காத்திருக்க வேண்டியிருந்தது எனக் கூறப்படுகின்றது. முல்லைத்தீவு - மல்லாவி - பாலையடியைச் சேர்ந்தவரின் சடலமே வீட்டின் வறுமையால் இவ்வாறு வைத்தியசாலையிலேயே காத்துக்கிடந்தது. காய்ச்சல் மற்றும் நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 18 ஆம் திகதி சிகிச்சைக்காக மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்....
யாழ். சிறைச்சாலைக்குள் இருக்கும் கைதி ஒருவருக்கு பாணுக்குள் கஞ்சா வைத்து கொடுக்க முற்பட்ட நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மானிப்பாய் - பூங்காவடி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். சந்தேகநபர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர் எனவும், 30 கிராம் கஞ்சாவினை ஒரு இறாத்தல் பாணுக்குள் வைத்து சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளார் எனவும்...
19வது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட சில விடயங்களில் இலங்கை அண்மைக் காலங்களில் கண்டுள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பலவந்தமாக காணாமல் செய்தல் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பிரதிநிதிகள் குழு, ஐரோப்பிய சங்கத்தின் நிர்வாகிகள், மனித உரிமைகள் தொடர்பிலான செயற்குழு உள்ளிட்டோருக்கு இடையிலான...
கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலய வருடாந்த திருவிழா வரும் பெப்ரவரி மாதம் 20-ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தற்போது கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாகி விட்டதால் கடந்த ஆண்டு நடைபெற்ற அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இலங்கை தூதரகத்தின் அனுமதி பெற்று தமிழகத்தை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்த ஆண்டு திருவிழாவில்...
ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதாக கூறிய 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு, இதுவரை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. ஜனவரி மாத சம்பளத்துடன் வழங்கப்படாத 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு பெப்ரவரி மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என...
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சுதந்திரமாக செயற்பட அனுமதியுங்கள் எனக்கோரி தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய இளைஞனுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது. யாழ்.வரணி பகுதியை சேர்ந்த நா.துஷாந்த் என்ற இளைஞன் முதலமைச்சர் மீது அவதூறு பேசாதீர்கள், முதலமைச்சரை சுதந்திரமாக செயற்பட அனுமதியுங்கள் என்ற 4 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று காலை...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில்லறைப் பொருட்களை விற்று பிழைப்பு நடத்திவரும் இளம்பெண் மீது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வெள்ளிக்கிழமை (22) கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதில் பெண் தலையில் படுகாயமடைந்தார். வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் மேற்படி பெண் வியாபாரம் செய்தபோது, பெண்ணை வெளியில் செல்லுமாறு கூறி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விரட்டினர். வெளியில் சென்ற...
பொரலஸ்கமுவ, வெரஹெர பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துக்கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துச் சம்பவத்தினால் ஜனாதிபதிக்கு எவ்வித பாதிப்புக்களுடம் ஏற்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் மக்கள் ஆணையினைக் கேட்டுப் போட்டியிட்டிருந்தது. மிகப் பெரும்பான்மை வாக்குகளை கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், புதிய அரமைப்பு உட்பட அனைத்து விடயங்களிலும் மக்கள் ஆணைக்கேற்ப செயற்பட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...
முல்லைத்தீவில் நடக்கும் உழவர் விழாவில் பங்கேற்க வந்துள்ள கவிப்பேரரசு வைரமுத்து நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண முதலமைச்சர் வைரமுத்துவை சந்தித்துப் பேசினார். வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அழைப்பின்பேரில்கவிப்பேரரசு வைரமுத்து இலங்கை வந்துள்ளார். யாழ்ப்பாணம் வந்த இவர் நேற்று இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சரை சந்தித்துப் பேசினார். இதன்போது வைரமுத்து...
இலங்கையுடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் ஜோன் பிலிப் கோடீஷ் கூறியுள்ளார். உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்படுத்தப்படவுள்ள ஒப்பந்தத்தினூடாக, இலங்கையின் அபிவிருத்திக்காக புதிய சந்ததியினருக்கு தொழில்நுட்பத்தை...
2016ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறவுள்ள தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி...
சாவகச்சேரி சிவன் கோவில் பிரதேசத்தில் வசித்த 11 பேரை கடித்த விசர் நாய், இன்று வெள்ளிக்கிழமை இறந்துவிட்டது. இந்த விசர் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட 11 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில், நேற்று வியாழக்கிழமை (22) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 பேரையும் கடித்த நாய், இன்று வெள்ளிக்கிழமை (22) காலையில் இறந்துவிட்டதையடுத்து, அங்கு...
Loading posts...
All posts loaded
No more posts
