Ad Widget

யாழில் பெண்ணின் அந்தரங்கப் படங்களை வைத்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியவர் கைது!

பெண்ணின் அந்தரங்கப் படங்களை வைத்துக்கொண்டு தனது ஆசைக்கு இணங்குமாறு அப்பெண்ணை மிரட்டிய ஒருவரை பருத்தித்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி – பருத்தித்துறையில் புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குறித்த பெண் தனது அந்தரங்கப் படங்களை தனது கைத்தொலைபேசியில் உள்ள ‘வைபர்’ மூலம் அதே பகுதியில் வசிக்கும் ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார்.

அவரும் அந்தப் படங்களை தனது கைத்தொலைபேசியில் தரவிறக்கம் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் அவரின் கைத்தொலைபேசியை பயன்படுத்திய அவரின் நண்பர் ஒருவர் அந்தப் படங்களைத் தனது கைத்தொலைபேசியின் வைபருக்கு அனுப்பியுள்ளார்.

பின்னர் அந்தப் படங்களில் உள்ள பெண்ணைத் தொடர்புகொண்ட குறித்த நபர், தனது ஆசைகளுக்கு அவர் இணங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அந்தப் படங்களைத் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்துக் குறித்த பெண் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைகளில் இறங்கிய பொலிஸார் குறித்த நபரை நேற்று அவரது வீட்டில் வைத்துக் கைது செய்தனர்.

கைது செய்த நபரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related Posts