Ad Widget

தமிழ் மக்கள் பேரவையை யாரும் எதிர்க்க வேண்டிய தேவையில்லை!

வட மாகாண சபை முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையை யாரும் எதிர்க்க வேண்டிய தேவையில்லை என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவோர் வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைத்துள்ள அந்தக் குழுவில், எந்தத் தவறும் இல்லை என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த குழு அரசியல் கட்சிகளுக்கு எதிராக அல்ல தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைத் தேடி நிறுவப்பட்ட நிபுணர்கள் உள்ளடங்கிய குழு என அவர் மேலும் கூறியுள்ளார்.

எனவே எவரும் இந்தக் குழுவுக்கு எதிர்ப்பு வௌியிட வேண்டிய தேவை இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

Related Posts