யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் உணவகத்தில் மாணவர் ஒருவர் புதன்கிழமை வாங்கிய மதியச் சாப்பாட்டில் இரண்டு ஈக்கள் இருந்துள்ளன.
மேற்படி உணவகம் சுகாதாரச் சீர்கேடான முறையில் இயங்கி வருவதாக முன்னரே கூறப்பட்டிருந்தது. மேற்படி, உணவகத்தில் செவ்வாய்க்கிழமை (29) விற்பனை செய்யப்பட்ட றோல்ஸ் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக மாணவர்கள் கூறினர்.
இந்த உணவகத்தை, நடத்துவதற்கு வருடாந்தம் ஏலம் விடப்படுவது வழமை. ஆனால், இம்முறை ஏலம் விடப்படாமல் தன்னிச்சையான முறையில் உணவகம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறினர்.