- Saturday
- November 22nd, 2025
சிங்கராஜ வனப்பகுதியில் அடையாளம் தெரியாத விலங்கு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. வனப் பகுதியின் வெத்தாகல மற்றும் பொதுபிடியவுக்கு இடையிலுள்ள பனபொல - கோஸ்குலன பிரதேசத்தில் இந்த விலங்கு இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வால் இன்றி மஞ்சள், கருப்பு மற்றும் பழுப்பு நிற ரோமங்களையுடைய இந்த விலங்கு, 3 கிலோ 300 கிராம் நிறையுடையது எனவும், 60 சென்றிமீற்றர் வரையான...
சனல்- 4 வெளியிட்ட புகைப்படங்களில் ஒன்றில் தனது மகன் காணப்பட்டதாக தாய் ஒருவர் பரணகம ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியம் அளித்துள்ளார். காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஐனாதிபதி ஆணைக்குழு முன் அவர் தனது மகன் சம்பந்தப்பட்ட புகைப்படத்தையும் காண்பித்து அடையாளம் காட்டினார். காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் நேற்று யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலகத்தில்...
யாழ்ப்பாணம், வட்டுவாகல் பகுதியில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது மகன் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை, இன்று வரை காணவில்லையென கதிர்காமசேகரம் என்ற முதியவர், காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், நேற்று (29) சாட்சியமளித்தார். சாவகச்சேரி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை (29) நடைபெற்ற இந்த சாட்சியங்களைப் பதிவு செய்யும் நிகழ்வின் போது,...
காணாமற்போன எனது மகள் சிவலிங்கம் அனுசியாவை வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஒருமுறை கண்டேன். அதன் பின்னர் முகப்புத்தகத்தில் இலக்கம் போடப்பட்டு, தரவேற்றியிருந்த படங்களையும் நான் பார்த்தேன் என, காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், சாவகச்சேரி அமர்வில் சாட்சியமளிக்கச் சென்ற தாயொருவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, 'கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றிய எனது மகளை, 2007ஆம்...
காணாமற்போனோர் தொடர்பான மரணச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டு, அதன் மூலம் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும்' என காணாமல்போனோரின் உறவினர்களிடம், காணாமற்போனரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், சாவகச்சேரி அமர்வில் கலந்துகொண்ட காணாமற்போன உறவினர்களிடமே, ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவ்வதிகாரிகள், 'நீங்கள் விரும்பினால் மரணச் சான்றிதழ் எடுக்கலாம்....
"கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் உதவவேண்டும்.'' - இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14...
உதயன் நாளிதழின் முன்னாள் செய்தியாசிரியர் ஞா.குகநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவித்தது ஐ.பி.ஸி. தமிழ் தொலைக்காட்சி. சுவிற்சர்லாந்தில் ஐ.பி.ஸி. தமிழ் தொலைக்காட்சியின் ஆரம்ப விழா கடந்த 27 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்விலேயே சாதனையாளர் விருது குகநாதனுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சனல் 4 தொலைக்காட்சியின் கெலும் மக்ரே, ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணம், கலைஞர் க.செ.துரை,...
தமிழ் அரசியல் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த, யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகன் மற்றும் கணேசரத்தினம் சாந்ததேவன் ஆகியோர் ஆறு வருடங்களின் பின்னர் கொழும்பு விசேட நீதிமன்றத்தினால் நேற்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார். 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த கோமகன் மற்றும் சாந்ததேவன் ஆகியோர் 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட்...
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 14 பேரை சமூகத்துடன் இணைத்து வைக்கும் நிகழ்வு நேற்றயதினம் நடைபெற்றது. வவுனியா புனர்வாழ்வு இணைப்புக் கரியாலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்துமத அலுவல்கள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் இந்நிகழ்வில்...
நல்லாட்சி அரசாங்கம் தனது கணவரையும் ஏனைய அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வின் ஊடாகவோ அல்லது பொது மன்னிப்பின் அடிப்படையிலேயோ, விடுதலை செய்ய வேண்டுமென, மகஸின் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதி ஒருவரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 2009ம் ஊனமுற்ற...
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே ஜனாதிபதி இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.
மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுடைய பேச்சு இனரீதியான பிரச்சினையைத் தோற்றுவிக்கக்கூடியது. அவரது பேச்சு நூறு விகிதம் பிழையானது. அவர் இவ்வாறு தொடர்ந்து பேசினால் நாங்களும் அரசியல் கதைக்கவேண்டிவரும் என எச்சரித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எம்.பி.ஒரு அரச அதிகாரியை சபையில் வைத்துச் சாடுவது ஏற்றுக்கொள்ள முடியாத மிக மோசமான செயல் எனவும் குறிப்பிட்டார். யாழ் மாவட்ட...
யோசித ராஜபக்ஸ கடற்படை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் நிதி மோசடிப் புலனாய்வுப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடாக பணச்சலவை மற்றும் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்களின் கீழ் யோசித ராஜபக்ஸ கடந்த மாதம் 30ஆம் திகதி கைது...
யாழ்.பிரதான வீதியில் பஸ்ரியன் சந்திப்பகுதியில் வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்த முற்பட்ட வேளை பின்னால் வந்த உழவு இயந்திரம் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேரூந்தில் ஏற முற்பட்ட இரு கைகளையும் இழந்த பெண்ணின் கால்கள் மேல் உழவு இயந்திரம்...
யாழ். மாவட்டத்தில் சிறுமிகளுக்கான சீர்திருத்தப்பள்ளி இல்லாததன் காரணமாக, அவர்கள் வேறு சிறைக்கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அவ்வாறு அனுப்பப்படும் சிறுமிகள் பெரும்பாலானோர் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுவதாக சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் யாழ். மாவட்ட ஆணையாளர் தெரிவித்தார். யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம், ஞாயிற்றுக்கிழமை (28) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் சிறுவர் மற்றும் பொண்கள் விவகாரம் தொடர்பில்...
சுண்டுக்குழி பகுதி வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியொருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில், 26 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்த சம்பவமொன்று, திங்கட்கிழமை (29) இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (28) மாலை 6 மணியளவில், வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த மேற்படி சிறுமியை, வெளியில் அழைத்துச்சென்றுள்ள சந்தேகநபரான இளைஞன், அச்சிறுமியை கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார்....
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கவுள்ளதாக அச்சுவேலி இராஜமாணிக்கம் திருமண மண்ட நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மார்ச் மாதம் 06ஆம் திகதி, வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, இலவசமாக தாலி, பட்டுப்புடவைகள், வேட்டிகள், வாழ்வதார உதவி மற்றும் வீட்டுத்தளபாடங்கள் என்பன திருமணத்தின்போது வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், திருமண செலவுகளையும் இராஜமாணிக்க திருமண...
வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 63பேர், இன்று காலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு எதிரான வழக்கை துரிதப்படுத்தி விடுதலைக்கு வழிசமைக்குமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர். ஏற்கெனவே,...
வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் ஏற்பாட்டில் இன்று ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயகத்திற்கு முன் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டம், யாழ் இந்திய துணைத் தூதரக அலுவலகம் வரை சென்றது. இருநாட்டு மீனவர்களும் சுமூகமான முறையில் தொழிலை செய்வதற்கு பேச்சு வார்த்தை ஏற்பாடு செய்யப்பட வேண்டும், இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 27...
பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில்,எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களுக்கோ, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் இத் திட்டம் முன்னெடுக்கப்படுவது அவசியமாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாதனந்தா அவர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்தகால ஆட்சியின்போது...
Loading posts...
All posts loaded
No more posts
