Ad Widget

‘வடக்கின் சமர்’ ஐ ஆரம்பித்து வைத்தார் அர்ஜீன ரணதுங்க!

யாழ். புனித சென். ஜோன்ஸ் கல்லூரி அணி மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான ‘வடக்கின் சமர்’ என்றழைக்கப்படும் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியின் 110ஆவது அத்தியாயம் இன்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

குறித்த சமரை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய கப்பல்கள் மற்றும் துறைமுக அமைச்சரான அர்ஜீன ரணதுங்க ஆரம்பித்து வைத்தார்.

இவ்வருடம் தனது 200ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் யாழ். மத்திய கல்லூரி, கடந்த வருட தோல்வியை நிவர்த்தி செய்யும் வகையில் வெற்றிக்கான குறிக்கோளுடன் களம் இறங்கியுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணியின் அணித்தலைவர்
எஸ்.அலன்ராஜ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி 25.5 ஓவர்கள் நிறைவில் 83ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இதுவரை இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் நடந்து முடிந்துள்ள போட்டிகளில் 35 போட்டிகளில் யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரியும் 27 போட்டிகளில் யாழ். மத்திய கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளதோடு 39 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றுள்ளது.

big-mtch-2016-1

big-mtch-2016

Related Posts