காரைநகர் பிரதேசத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஊர்காவற்துறை ஏலாரை இராணுவ முகாமில் பணியாற்றிய 26 வயதான இராணுவ சிபாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இராணுவ சிப்பாய் கொகரெல்ல-கொட்டுஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தற்சமயம் இவரது சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஊர்காவற்துறை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.