38 ஐஸ்கிறீம், பழரச உற்பத்தி நிலையங்களுக்கு அனுமதி

யாழ். மாவட்டத்தில் இயங்கி வந்து மூடப்பட்டிருந்த 59 ஐஸ்கிறீம், பழரச உற்பத்தி நிலையங்களில் 38 நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், இன்று (15) தெரிவித்தார். (more…)

தமிழ் இளைஞர்களை நாட்டைவிட்டு விரட்டவே முன்னாள் போராளி சுட்டுக்கொலை!

மன்னார், வெள்ளங்குளத்தில் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இரு சூழ்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார். (more…)
Ad Widget

மன்னாரில் 5 பிள்ளைகளின் தந்தை ரி.ஐ.டியினரால் கைது

மன்னார் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(14) வழக்கு விசாரணைகளுக்காக சென்று விட்டு வெளியில் வந்த மன்னார் பனங்கட்டுக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை வவுனியாவில் இருந்து வருகை தந்த பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் கைது செய்து வவுனியாவிற்கு (more…)

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மௌலான கடலின் கிழக்கு திசையில், கடலுக்கடியில் 300 கிலோமீற்றர் தூரத்தில் 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. (more…)

முன்னாள் போராளி சுட்டுக்கொலை; இராணுவத்தினரே பொறுப்பு – கூட்டமைப்பு கண்டனம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரும் இரு பிள்ளைகளின் தந்தையுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் என்று சொல்லப்படுவர்களினால் (more…)

பொது எதிரணிக் கூட்டணியில் ததேகூ இன்னும் பங்குபெறவில்லை- சம்பந்தன் பிபிசி தமிழோசைக்கு பேட்டி

இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்கான பொதுக் கூட்டணியில், 'தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்கவில்லை' என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறியுள்ளார். குறித்த பொதுக் கூட்டணிக்குள்ளேயே இன்னும் சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட வேண்டியிருப்பதாகவும் சம்பந்தன்...

சம்பந்தன், ஹக்கீம் ஆகியோருடன் இந்தியத் தூதர் சந்தித்துப் பேச்சு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரை அழைத்து இலங்கைக்கான இந்திய தூதர் வை.கே.சின்ஹா பேச்சு நடத்தியுள்ளார் என ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. (more…)

முன்னாள் போராளிகளை பதிவு செய்யும் இராணுவம்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களை இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

இராணுவத் தேவைக்கு காணி அளவீடு, மக்கள் கடும் எதிர்ப்பு

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டு முள்ளிப் பகுதியில் இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் நோக்கில் அளவீட்டுப்பணிக்காகச் சென்றிருந்த நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் எதிர்பால் அந்த நடவடிக்கையைக் கைவிட்டுத் திரும்பிச்சென்றனர். (more…)

சி.வி.யை அறிந்தவர்கள் இருவரே!, இந்திய துணைத் தூதுவர்

மாணவர்களுக்கு தங்கள் பாடத்திட்ட கல்வியுடன் பொது அறிவு மிகவும் அவசியமாகவுள்ளதாக யாழ்.இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார். (more…)

சுன்னாகத்தில் காணாமற்போனவர் மீண்டு வந்த அதிசயம்!

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் காணாமல்போன ஒருவர் தொடர்பில் அம்பாந்தோட்டை நீதிமன்றத்திலிருந்து உறவினர்களுக்கு வந்த ஒரு கடிதத்தால் சுன்னாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (more…)

தாயகம் திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழ் அகதிகள்

இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தாயகம் திரும்புவதற்கு விரும்புவதாக இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் நிறுவுனர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்தகிள் தெரிவிக்கின்றன. (more…)

ஐஸ்கிறீம், யூஸ் தடை – சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கை

யாழ் மாவட்டத்தில் உள்ள ஐஸ்கிறீம், யூஸ் உற்பத்தி நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்த சுகாதாரத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக பல தரப்பட்ட விமர்சனங்களும் நிலவுகின்றன. (more…)

மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட மஹிந்தவிற்கு எவ்விதத் தடையுமில்லை – உயர் நீதிமன்றம்

மூன்றாம் தவணைப் பதவிக்காலத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போட்டியிடுவதில் எவ்விதத் தடையும் இல்லை என உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். பிரதம நீதியரசர் உட்பட உயர்நீதிமன்றத்தின் ஒன்பது நீதியரசர்களும் இதனை ஏகமனதாக தீர்மானித்து ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் கருத்துக்கு பான் கீ முன் ஆதரவு!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைனின் இலங்கை தொடர்பிலான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார். (more…)

மஹிந்தவை ஆதரிக்கும் கோரிக்கையை பரிசீலிக்க கூட்டமைப்பு தயாராம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசுத் தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவேண்டும் என்று அரசுத் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஆழமாகப் பரிசீலிக்கத் தயார் (more…)

ஒரே மேடையில் ஒன்றுகூடுகின்றனர் சந்திரிகா, ரணில், அனுரகுமார, பொன்சேகா!

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்து அதிகாரப் பகிர்வினூடாக நாட்டை முன்னேற்றிச் செல்ல ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு இணங்கியுள்ளன. (more…)

ஜனாதிபதி தேர்தல் குறித்த த.தே.கூ.வின் தீர்மானம் தாமதம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் தீர்மானமெதுவும் எட்டப்படவில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது. (more…)

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு ஆதரவு வழங்குவதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். (more…)

தமிழர்களை முட்டாளாக நினைக்கிறது ஈ.பி.டி.பி: சரவணபவன் எம்.பி

தமிழ் மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பு ஈ.பி.டி.பி நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணத்தில் இருப்பதுடன் தமிழ் மக்களை பின்னடையச் செய்வதற்கான வழிவகைகளையும் அவர்கள் செய்கின்றனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts