தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் கூட்டொப்பந்தமொன்றை அரசாங்கம் செய்துள்ளது என்ற குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் நேற்று அரசாங்கம் மறுத்தது.
தனது கட்சியுடன் அரசாங்கம் ஒப்பந்தமொன்றை செய்துள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சில காலத்துக்கு முன்னர் கூறியிருந்தார்.
இந்த ஒப்பந்தத்தின் பிரதியை தான் சமர்ப்பிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வை எம்.பி.யான சஜின் டி வாஸ் குணவர்தன, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அந்த ஆவணத்தை சமர்ப்பிப்பதாக கூறினாலும் இன்னும் அதை சமர்ப்பிக்கவில்லை எனக் கூறினார்.
‘நான் இப்போது அந்த ஆவணத்தை எங்கே என்று கேட்கிறேன். முடிந்தால், அந்த ஆவணத்தை சமர்ப்பிக்கும்படி சவால் விடுக்கிறேன்’ என அவர் கூறினார்.
அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.