ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக பீடங்களின் மாணவர் ஒன்றியம் அறிக்கை

போருக்கு பிந்திய சூழலில் இடம்பெற்றுள்ள இக்கொலைகள் யாழ்ப் பல்கலைகழக சமூகத்தையும் அனைத்து தமிழ் சமூகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக பல்கலைக்கழக பீடங்களின் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் முழுமையாக நடைபெற்று சம்பவத்துடன் தொடர்பானவர்கள் தண்டிக்கப்படுவது இயல்பு நிலை மீளுருவாக்கத்திற்கு மிகவும் அத்தியாவசியமானதாகும். ஆரம்பத்தில் பொலிஸார் இந்த கொலைகளை விபத்தாக காட்ட முனைந்தமை...

மகஜர் கையளிப்புடன் நிறைவடைந்தது பல்கலைக்கழக மாணவர் போராட்டம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவடைந்துள்ளது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என் வேதநாயத்திடம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்குவதற்கான மகஜர் ஒன்றும் மாணவர்களால் கையளிக்கப்பட்டுள்ளது.
Ad Widget

ஏ-9 வீதி போக்குவரத்து ஸ்தம்பிதம்; பொலிஸார் கடமையில் இல்லை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைப் பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தமையைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள், யாழ். மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு இன்று திங்கட்கிழமை (24) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் ஏ-9 வீதியின் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதேவேளை, பொலிஸார் அப்பகுதியில் கடமையில் ஈடுபடவில்லை. இச்சம்பவத்தில் பொலிஸார் தொடர்புபட்டுள்ளதனால் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்ட செயலகம், ஆளுநர் அலுவலகம் பல்கலை மாணவர்களால் முற்றுகை

மாவட்ட செயலகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளதனால் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கடமைகளுக்குச் செல்ல முடியாமல் வெளியே காத்திருக்கின்றனர். இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகமும் பல்கலைக்கழக மாணவர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் விரைகிறது காவல்துறையின் உண்மையைக் கண்டறியும் குழு!

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, உண்மையைக் கண்டறியும் குழுவொன்றை யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்போவதாக தேசிய காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தக் குழு இன்று யாழ்ப்பாணம் வரவுள்ளது எனவும், மாணவர்கள் மரணம் தொடர்பாக அந்தக்குழு விசாரணை நடாத்துமெனவும், தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். மாணவர்களின் கொலை தொடர்பான...

சுன்னாகம் விவகாரம்: அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம்

சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் படுகாயமடைந்த பொலிஸார் இருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகடுகள் இன்றி, முகங்களையும் துணியால் மறைத்தபடி வந்தவர்களே இவ்வாறு வாள் வெட்டை மேற்கொண்டுள்ளனர் எனத்...

மரணவீட்டில் அரசியல் செய்ய வேண்டாமென எச்சரிக்கை!!

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவரான கிளிநொச்சி, 155ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான நடராஜா கஜன் என்ற மாணவனது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவனது இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று முற்பகல் கிளிநொச்சி – பாரதிபுரத்தில் அமைந்துள்ள மாணவனது இல்லத்தில் இடம்பெற்றது. மாணவனது...

சுடுவதற்கான அதிகாரங்களை பொலிஸ் எங்கிருந்து பெற்றுக்கொண்டது? சுரேஸ் கேள்வி

அவசரகாலச்சட்டம் இல்லாத ஒரு சூழ்நிலையில் சுடுவதற்கான அதிகாரங்களை பொலிஸ் எங்கிருந்து பெற்றுக்கொண்டது – சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா – அல்லது சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்.பல்கலைகழக மாணவர்களின் கொலை சம்பவம் தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெளியிட்டுள்ள...

பல்கலைக்கழக மாணவர்களின் இறப்பு சாதாரணமானதே! பாதுகாப்புச் செயலர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் இறப்பானது தெற்கில் இடம்பெறும் சாதாரண இறப்புக்கள் போன்றதே என பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்துக் காரணமாக உயிரிழந்துள்ளனர் என முதலில் தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தினாலே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. பின்னர் இச்சம்பவம் தொடர்பாக 5 காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதுகாப்புச்...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவம்; ஐந்து பொலிஸாருக்கும் விளக்கமறியல்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றுகாலை அவர்கள் ஐந்து பேரும் யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி சதீஸ்கரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் அவர்கள் ஐந்து பேரையும் அநுராதபுரம்...

பல்கலைக்கழக மாணவர்கள் கொலை சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்...

பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை?

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் நேரம் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது. அத்துடன், விபத்து நடைபெற்ற சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பொலிஸார் நடமாடியுள்ளனர். இந்தத் தகவலினால், மாணவர்களின்...

அநுராதபுரத்தில் தமிழர்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் தாக்குதல்!!

அநுராதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீதான தாக்குதல் மற்றும் இளைஞர் மீதான வாள் வெட்டுச் சம்பவத்துக்கு நீதி கோரி, அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தை நேற்று மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. தாக்குதல் குறித்து நீதி பெற்றுத் தரப்படும் எனப் பொலிஸார் உறுதியளித்ததை அடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். அநுராதபுரம்...

ஜனாதிபதி செலவு அதிகரிப்பு!! கல்விக்கான ஒதுக்கீடு குறைவு

2017ம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கமைய 2017ம் ஆண்டு தொடர்பில் எதிர்ப்பார்க்கப்படும் அரசாங்க செலவு 1819.5 பில்லியன் ரூபா எனத் தெரியவந்துள்ளது. 2016ம் ஆண்டில் 1941.4 பில்லியன் ரூபாவாக இந்தத் தொகை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் 2016ம் ஆண்டு 2.3 பில்லியன் ரூபாவாக...

சிறுபான்மையினருக்கு இலங்கையில் உரிய இடமில்லை: ஐ.நா.

இலங்கையில் சிறுபான்மை சமூகத்திற்கு உரிய இடமில்லை என்பது தெளிவாக தெரிவதாக, ஐ.நா.வின் சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா. அறிக்கையாளர், நேற்று (புதன்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியபோது இவ்வாறு தெரிவித்ததாக, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு குறித்து...

முசலியில் மீண்டும் பதட்டம்!! : கடற்படையினர் இருமீனவர்களை கடத்தி சென்றுவிட்டதாக மக்கள் விசனம்!

முசலி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட அரிப்புக் கிராமத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கிராமத்துக்குள் புகுந்த கடற்படைச் சிப்பாயை அப்பகுதி மக்கள் கட்டிவைத்து அடித்துள்ளனர். இதனால் கடற்படையினருக்கும் மக்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டது. இன்னிலையில் கடற்படைச் சிப்பாய்களைக் காப்பாற்றுவதற்காக கடற்படையினர் மேல் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து நேற்று காலை கடலுக்குப்...

கடற்படையினர் மக்கள் இடையில் மோதல்!! பொது மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு!!

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பு கிராமத்தில் நேற்றிரவு கடற்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடடன், பொது மக்களை நோக்கி கடற்படையினர் துப்பாக்கிச் சூடும் நடத்தியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அரிப்பு கிராமத்தில் கடந்த சில தினங்களாக திருட்டுச்சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் அரிப்பு...

அரச இரகசியம் தமிழீழ இணையத்தளத்தில்

இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்ட மூலத்தின் பிரதி லண்டனிலிருந்து செயற்படும் தமிழீழ இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 58 பக்கங்களைக் கொண்ட இந்த சட்ட மூலம் நேற்று (18) குறித்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய சிங்கள நாளிதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சட்ட மூலம் மக்கள் தெரிந்து கொள்வதற்கு இதுவரையில் வெளியிடப்படவில்லை. இருப்பினும், தமிழ்...

பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்க முடியும்: பஷில் ராஜபக்ஷ

கடந்த ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படாவிட்டாலும் நல்லாட்சியில் அதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் அதற்கான மரண சான்றிதழை ஏன் மஹிந்த அரசு வழங்கவில்லையென்பது சர்வதேச ரீதியில் எழுப்பப்பட்டு வந்திருந்த கேள்வியாகும். இந்நிலையில்,...

மக்களின் பிரச்சினைகளை கொஞ்சமாவது தீர்த்து வையுங்கள் : பிரதமருக்கு ஆனந்தசங்கரி கடிதம்!!

'நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடம்பர வாகனத்துக்கு பெருந்தொகை பணம் இறக்குமதித் தீர்வாக அரசாங்கத்தால் வரிவிலக்கு செய்யப்பட்டமை தொடர்பில், உணர்வுபூர்வமாக வாக்களித்த தமிழ் மக்கள் இதையறிந்து பெரும் சினமடைந்துள்ளனர். மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் சிலவற்றையேனும் அரசாங்கம் பொறுப்பேற்று அவற்றுக்கு தீர்வுக் காணவேண்டும்' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தெரிவித்துள்ளார். பிரதருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts