பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை?

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் நேரம் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது. அத்துடன், விபத்து நடைபெற்ற சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பொலிஸார் நடமாடியுள்ளனர். இந்தத் தகவலினால், மாணவர்களின்...

அநுராதபுரத்தில் தமிழர்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் தாக்குதல்!!

அநுராதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீதான தாக்குதல் மற்றும் இளைஞர் மீதான வாள் வெட்டுச் சம்பவத்துக்கு நீதி கோரி, அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தை நேற்று மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. தாக்குதல் குறித்து நீதி பெற்றுத் தரப்படும் எனப் பொலிஸார் உறுதியளித்ததை அடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். அநுராதபுரம்...
Ad Widget

ஜனாதிபதி செலவு அதிகரிப்பு!! கல்விக்கான ஒதுக்கீடு குறைவு

2017ம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கமைய 2017ம் ஆண்டு தொடர்பில் எதிர்ப்பார்க்கப்படும் அரசாங்க செலவு 1819.5 பில்லியன் ரூபா எனத் தெரியவந்துள்ளது. 2016ம் ஆண்டில் 1941.4 பில்லியன் ரூபாவாக இந்தத் தொகை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் 2016ம் ஆண்டு 2.3 பில்லியன் ரூபாவாக...

சிறுபான்மையினருக்கு இலங்கையில் உரிய இடமில்லை: ஐ.நா.

இலங்கையில் சிறுபான்மை சமூகத்திற்கு உரிய இடமில்லை என்பது தெளிவாக தெரிவதாக, ஐ.நா.வின் சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா. அறிக்கையாளர், நேற்று (புதன்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியபோது இவ்வாறு தெரிவித்ததாக, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு குறித்து...

முசலியில் மீண்டும் பதட்டம்!! : கடற்படையினர் இருமீனவர்களை கடத்தி சென்றுவிட்டதாக மக்கள் விசனம்!

முசலி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட அரிப்புக் கிராமத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கிராமத்துக்குள் புகுந்த கடற்படைச் சிப்பாயை அப்பகுதி மக்கள் கட்டிவைத்து அடித்துள்ளனர். இதனால் கடற்படையினருக்கும் மக்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டது. இன்னிலையில் கடற்படைச் சிப்பாய்களைக் காப்பாற்றுவதற்காக கடற்படையினர் மேல் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து நேற்று காலை கடலுக்குப்...

கடற்படையினர் மக்கள் இடையில் மோதல்!! பொது மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு!!

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பு கிராமத்தில் நேற்றிரவு கடற்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடடன், பொது மக்களை நோக்கி கடற்படையினர் துப்பாக்கிச் சூடும் நடத்தியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அரிப்பு கிராமத்தில் கடந்த சில தினங்களாக திருட்டுச்சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் அரிப்பு...

அரச இரகசியம் தமிழீழ இணையத்தளத்தில்

இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்ட மூலத்தின் பிரதி லண்டனிலிருந்து செயற்படும் தமிழீழ இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 58 பக்கங்களைக் கொண்ட இந்த சட்ட மூலம் நேற்று (18) குறித்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய சிங்கள நாளிதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சட்ட மூலம் மக்கள் தெரிந்து கொள்வதற்கு இதுவரையில் வெளியிடப்படவில்லை. இருப்பினும், தமிழ்...

பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்க முடியும்: பஷில் ராஜபக்ஷ

கடந்த ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படாவிட்டாலும் நல்லாட்சியில் அதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் அதற்கான மரண சான்றிதழை ஏன் மஹிந்த அரசு வழங்கவில்லையென்பது சர்வதேச ரீதியில் எழுப்பப்பட்டு வந்திருந்த கேள்வியாகும். இந்நிலையில்,...

மக்களின் பிரச்சினைகளை கொஞ்சமாவது தீர்த்து வையுங்கள் : பிரதமருக்கு ஆனந்தசங்கரி கடிதம்!!

'நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடம்பர வாகனத்துக்கு பெருந்தொகை பணம் இறக்குமதித் தீர்வாக அரசாங்கத்தால் வரிவிலக்கு செய்யப்பட்டமை தொடர்பில், உணர்வுபூர்வமாக வாக்களித்த தமிழ் மக்கள் இதையறிந்து பெரும் சினமடைந்துள்ளனர். மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் சிலவற்றையேனும் அரசாங்கம் பொறுப்பேற்று அவற்றுக்கு தீர்வுக் காணவேண்டும்' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தெரிவித்துள்ளார். பிரதருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்...

வட மாகாண பெண்களை இலக்குவைக்கும் நிதி நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வடக்கில் உழைக்கும் பெண்களை இலக்குவைத்து சுரண்டலில் ஈடுபடும் நுண்நிதி நிறுவனங்களை இழுத்து மூடுமாறு வலியுறுத்தி, வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் வாகன இலகு கொடுப்பனவு என்ற பெயரில் மக்களை சுரண்டி கொள்ளையிடும் நிதி நிறுவனங்களை மூடுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்....

கிளிநொச்சியில் கடத்தப்பட்ட வர்த்தகர் அடிகாயங்களுடன் காவல்துறையில் தஞ்சம்!

கிளிநொச்சியில் வைத்து சில நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட வர்த்தகர் ரதீசன் உடலில் பலத்த அடிகாயங்களுடன் கடத்தப்பட்டுள்ளவர்களால் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கிளிநொச்சி காவல்துறையில் சரணடைந்துள்ளார். சாவகச்சேரி, இடைக்குறிச்சி – வரணியைச் சொந்த இடமாகக் கொண்ட குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி கிளிநொச்சியில் அவரது அச்சகத்துக்குச் சென்றுகொண்டிருந்தவேளையில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என...

மின் வெட்டு நேரம் குறைப்பு (முழு விபரம் இணைப்பு)

கடந்த 15ம் திகதி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இலங்கையில் மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்றில் இருந்து (17) எதிர்வரும் 21ம் திகதி வரை காலை இரண்டரை மணித்தியாலங்களும் இரவு ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்தது. எனினும், குறித்த நேரத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய,...

சம்பந்தனை கொலை செய்வதற்கு 25 மில்லியனுக்கு கூலிப்படை!- பொலிஸ்மா அதிபரிடம் வடக்கு முதல்வர் முறைப்பாடு

எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களை கொலை செய்வதற்கு   ரூ  25 மில்லியனுக்கு கூலிப்படை அமர்த்தப்பட்டுள்ளதாகவும் இதனை செய்து அதனை புலிகள் மீது குற்றம் சுமத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும்    வடக்கு முதல்வர் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு  மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். தனது முறைப்பாட்டின் பிரதியை சனாதிபதிக்கும் அனுப்பிவைத்துள்ளார்...

35 வருடங்களின் பின் அரசின் முக்கிய நிர்வாக பொறுப்புக்கள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவனிடம்

ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளார்கள். இந்நிலையில் அரசாங்கத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் பதவியை தற்போது பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் வகித்து வருகின்றார். ஜனாதிபதி இந்தியாவின் கோவாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக பெல்ஜியத்திற்கு...

மீண்டும் வாள்வெட்டு கலாசாரம் : இரவுவேளையில் பதற்றத்தில் மக்கள்

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரமானது ஒரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது அண்மைக்காலமாக மீளவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் நேற்றுமுன்தினம் இரவு யாழ்.குடாநாட்டி நகரப்பகுதிகளில் மூகமுடி அணித்த கும்பலொன்று வாள்வெட்டுத்தாக்குதலில் ஈடுபட்டிருந்ததையடுத்து யாழ்.நகரில் பதற்றமான சுழல் ஏற்பட்டது. இந்நிலையில் இவ் வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில்...

கோத்தபாயவை காப்பாற்றும் வகையில் நான் முட்டாள் இல்லை: ஜனாதிபதி

கோத்தபாயவை காப்பாற்றும் வகையில் எனது உரை அமைந்திருக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பொன்றின் போது ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் உட்பட ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களும் அங்கிருந்துள்ளனர். இதன்போது சமகால நெருக்கடியாக மாறியுள்ள ஜனாதிபதியின் உரை தொடர்பில் அவர்...

என்னை துரோகியென சுட்டுக்கொல்ல போகின்றீர்களா-சுமந்திரன்

வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டு தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக தெளிவுபடுத்த முற்பட்டபோதே கடுமையான வாக்குவாதம் மக்களுக்கும் சுமந்திரனுக்குமிடையில் இடம்பெற்றது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு “முடியும் என்றால் பதிலளிப்போம் அதில் நாம் என்ன சொல்லப்போகின்றோம் என நீங்கள் சொல்லமுடியாது என்றும் சொல்லக்கூடிய கேள்விக்கு பதில்சொல்வோம் என்று சுமந்திரன்...

இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று முதல் சில மணி நேர மின் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை இரண்டரை மணித்தியாலங்களும், காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரை ஒரு மணித்தியாலமும் மின் வெட்டு அமுல் படுத்தப்படவுளள்தாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் பொலிஸ் பிரிவுகளை தயார் நிலையில் இருக்குமாறு அவசர உத்தரவு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதிலும் உள்ள சகல பொலிஸ் பிரிவுகளையும் இன்று மாலை 6 மணி முதல் தயார் நிலையில் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக சிங்கள இணைய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து நாடு முழுவதிலும் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் விடுமுறையில் சென்ற பொலிஸ் அதிகாரிகள்...

இராணுவத்தின் மீதான கரிசணை ஏன் தமிழ் அரசியல் கைதிகள் மீதில்லை: சுமந்திரன்

பதினாறு மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் தொடர்பில் அக்கறை கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏன் 16 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சிந்திப்பதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சாடியுள்ளார். ஊடகமொன்று சுமந்திரன் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த...
Loading posts...

All posts loaded

No more posts