சுலக்ஷன் சுடப்பட்டதைக் கண்ட கஜன் அடித்துக் கொலை! எஸ்.ஸ்ரீதரன்

யாழ்.பல்கலைக்கழக மாணவன் சுலக்ஷன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அதனைக் கண்ணால் கண்ட மாணவன் கஜன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு கிடைக்கப்பெற்ற சீ.சீ.ரீ.வி பதிவுகள் மற்றும் ஏனைய தகவல்கள் மூலம் இவ்விடயம் வெளிவந்தவண்ணமுள்ளதாக ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களை...

குடா நாட்டில் விசேட அதிரடிப் படை குவிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நேற்றைய தினம் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலை அடுத்து அங்கு வன்முறைகள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக யாழ். மாவட்டத்தில் பொலிஸார் எவரும் வீதிக் கடமைகளில் ஈடுபடுத்தப்படாமல் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, கலகம் தடுப்பு பொலிஸாரும் ஆங்காங்கே பாதுகாப்பு...
Ad Widget

தப்பிச் சென்றிருந்தால் நெஞ்சில் பட்டது எப்படி? இரா. சம்பந்தன்

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில், அண்மையில் மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தின் விளைவாக உயிரிழக்க நேர்ந்த சம்பவத்துக்கு, சபையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை, கடும் கண்டனத்தை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், மாணவர்கள் இருவரும் உண்மையில் பொலிஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்திருக்கும் பட்சத்தில், துப்பாக்கி பிரயோகமானது பின்னிருக்கையில் இருந்தவரை...

வடக்கு முழுவதும் பூரண ஹர்த்தால்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி இன்றைய தினம் (25 ) வடக்கு முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. யாழ்.நகர் உட்பட அனைத்து இடங்களிலும் சன நடமாட்டம் மிக மிக குறைவாக காணப்படுகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் காலை ஆறு மணிமுதல் இரவு வரை வடக்கில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் அனைத்தையும்...

உரும்பிராய் சந்தியில் இளைஞன்மீது பொலிஸார் தாக்குதல்?

உரும்பிராய் சந்திப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில், இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன், உறவினர்களுடன் சென்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில், அலைபேசி சிம் அட்டை விற்பனை செய்யும் தன்னை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து...

யாழில் பொலிஸாருக்கு பதிலாக விசேட அதிரடிப்படையினர்

யாழ்ப்பாணத்தில் கடந்த 21ஆம் திகதி, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் பொலிஸார் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக விசேட அதிரடிப் படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். வழமையாக ஹர்த்தால் உள்ளிட்ட சம்பவங்களின் போது, பொலிஸார் பூரண பாதுகாப்பை வழங்குவார்கள். ஆனால், இன்று ஹர்த்தால் நடைபெறும் போது பொலிஸார் எவ்விதப் பாதுகாப்பையும்...

பொலிஸார் மீது வாள்வெட்டு : உரிமை கோரியது ‘ஆவா’ குழு

சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு 'ஆவா' குழு உரிமை கோரியுள்ளது. மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் 'ஆவா' குழுவினரால் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளிலேயே இவ்வாறு உரிமை கோரப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர் நீத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆழ்ந்த கண்ணீர்...

போக்குவரத்து பொலிஸாரின் கொட்டகைக்கு தீ வைப்பு

கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள போக்குவரத்து பொலிஸார் பயன்படுத்தும் கொண்டகைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த கொட்டகையில் நின்று பொலிஸார் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றமை வழமையான ஒன்றாகும். ஆயினும் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது பொலிஸார் எவரும் அங்கு இருந்திருக்கவில்லை எனக்குறிப்பிடப்படுகிறது. இதனால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இனம் தெரியாத நபர்கள் நெருப்பு பந்தம் ஒன்றை...

நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலை பீடங்கள் இயங்காது!

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலை பீடங்கள் இயங்காது என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள எந்தவொரு பீடங்களுமோ கல்விச் செயற்பாடுகளோ நடைபெறமாட்டாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை...

ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக பீடங்களின் மாணவர் ஒன்றியம் அறிக்கை

போருக்கு பிந்திய சூழலில் இடம்பெற்றுள்ள இக்கொலைகள் யாழ்ப் பல்கலைகழக சமூகத்தையும் அனைத்து தமிழ் சமூகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக பல்கலைக்கழக பீடங்களின் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் முழுமையாக நடைபெற்று சம்பவத்துடன் தொடர்பானவர்கள் தண்டிக்கப்படுவது இயல்பு நிலை மீளுருவாக்கத்திற்கு மிகவும் அத்தியாவசியமானதாகும். ஆரம்பத்தில் பொலிஸார் இந்த கொலைகளை விபத்தாக காட்ட முனைந்தமை...

மகஜர் கையளிப்புடன் நிறைவடைந்தது பல்கலைக்கழக மாணவர் போராட்டம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவடைந்துள்ளது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என் வேதநாயத்திடம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்குவதற்கான மகஜர் ஒன்றும் மாணவர்களால் கையளிக்கப்பட்டுள்ளது.

ஏ-9 வீதி போக்குவரத்து ஸ்தம்பிதம்; பொலிஸார் கடமையில் இல்லை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைப் பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தமையைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள், யாழ். மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு இன்று திங்கட்கிழமை (24) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் ஏ-9 வீதியின் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதேவேளை, பொலிஸார் அப்பகுதியில் கடமையில் ஈடுபடவில்லை. இச்சம்பவத்தில் பொலிஸார் தொடர்புபட்டுள்ளதனால் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்ட செயலகம், ஆளுநர் அலுவலகம் பல்கலை மாணவர்களால் முற்றுகை

மாவட்ட செயலகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளதனால் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கடமைகளுக்குச் செல்ல முடியாமல் வெளியே காத்திருக்கின்றனர். இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகமும் பல்கலைக்கழக மாணவர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் விரைகிறது காவல்துறையின் உண்மையைக் கண்டறியும் குழு!

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, உண்மையைக் கண்டறியும் குழுவொன்றை யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்போவதாக தேசிய காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தக் குழு இன்று யாழ்ப்பாணம் வரவுள்ளது எனவும், மாணவர்கள் மரணம் தொடர்பாக அந்தக்குழு விசாரணை நடாத்துமெனவும், தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். மாணவர்களின் கொலை தொடர்பான...

சுன்னாகம் விவகாரம்: அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம்

சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் படுகாயமடைந்த பொலிஸார் இருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகடுகள் இன்றி, முகங்களையும் துணியால் மறைத்தபடி வந்தவர்களே இவ்வாறு வாள் வெட்டை மேற்கொண்டுள்ளனர் எனத்...

மரணவீட்டில் அரசியல் செய்ய வேண்டாமென எச்சரிக்கை!!

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவரான கிளிநொச்சி, 155ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான நடராஜா கஜன் என்ற மாணவனது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவனது இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று முற்பகல் கிளிநொச்சி – பாரதிபுரத்தில் அமைந்துள்ள மாணவனது இல்லத்தில் இடம்பெற்றது. மாணவனது...

சுடுவதற்கான அதிகாரங்களை பொலிஸ் எங்கிருந்து பெற்றுக்கொண்டது? சுரேஸ் கேள்வி

அவசரகாலச்சட்டம் இல்லாத ஒரு சூழ்நிலையில் சுடுவதற்கான அதிகாரங்களை பொலிஸ் எங்கிருந்து பெற்றுக்கொண்டது – சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா – அல்லது சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்.பல்கலைகழக மாணவர்களின் கொலை சம்பவம் தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெளியிட்டுள்ள...

பல்கலைக்கழக மாணவர்களின் இறப்பு சாதாரணமானதே! பாதுகாப்புச் செயலர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் இறப்பானது தெற்கில் இடம்பெறும் சாதாரண இறப்புக்கள் போன்றதே என பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்துக் காரணமாக உயிரிழந்துள்ளனர் என முதலில் தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தினாலே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. பின்னர் இச்சம்பவம் தொடர்பாக 5 காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதுகாப்புச்...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவம்; ஐந்து பொலிஸாருக்கும் விளக்கமறியல்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றுகாலை அவர்கள் ஐந்து பேரும் யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி சதீஸ்கரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் அவர்கள் ஐந்து பேரையும் அநுராதபுரம்...

பல்கலைக்கழக மாணவர்கள் கொலை சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்...
Loading posts...

All posts loaded

No more posts