Ad Widget

ரவிராஜ் கொலை விவகாரம்: விசேட ஜுரி சபை விசாரிக்கும்

யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின​ர் நடராஜா ரவிராஜ், கொலையுடன் தொடர்புடைய வழக்கு, விசேட ஜுரி சபையின் முன்னால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நவம்பர் மாதம் 21ஆம் திகதி குறித்த வழக்கு விசேட ஜுரி சபையின் முன்னிலையில் விசாரிக்கப்படும் என கொழும்பு உயர்நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட ​ போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 6 ​​​பேர் மீது சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும் இதுவரை வழக்கில் 3 ​பேர் மாத்திரம் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts