அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி கட்டணத்தில் மூன்றில் ஒரு பகுதி வற் வரியாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது புதிய வற் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி என்பவற்றுக்காக தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டை பயன்படுத்துபவர்களின் கட்டணத்திலேயே இவ்வாறு கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரு வரிகளுக்கும் மேலதிகமாக இன்னும் இரண்டு வரிகளும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அரச நிதி கொள்கை வகுப்புத் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறிப்பாக 150 ரூபா பெருமதியான அட்டையை பயன்படுத்தினால் 50 ரூபா வரியாக அறவிடப்படும் எனவே 100 ரூபா மாத்திரம் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.