- Wednesday
- December 31st, 2025
'நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடம்பர வாகனத்துக்கு பெருந்தொகை பணம் இறக்குமதித் தீர்வாக அரசாங்கத்தால் வரிவிலக்கு செய்யப்பட்டமை தொடர்பில், உணர்வுபூர்வமாக வாக்களித்த தமிழ் மக்கள் இதையறிந்து பெரும் சினமடைந்துள்ளனர். மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் சிலவற்றையேனும் அரசாங்கம் பொறுப்பேற்று அவற்றுக்கு தீர்வுக் காணவேண்டும்' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தெரிவித்துள்ளார். பிரதருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்...
வடக்கில் உழைக்கும் பெண்களை இலக்குவைத்து சுரண்டலில் ஈடுபடும் நுண்நிதி நிறுவனங்களை இழுத்து மூடுமாறு வலியுறுத்தி, வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் வாகன இலகு கொடுப்பனவு என்ற பெயரில் மக்களை சுரண்டி கொள்ளையிடும் நிதி நிறுவனங்களை மூடுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்....
கிளிநொச்சியில் வைத்து சில நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட வர்த்தகர் ரதீசன் உடலில் பலத்த அடிகாயங்களுடன் கடத்தப்பட்டுள்ளவர்களால் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கிளிநொச்சி காவல்துறையில் சரணடைந்துள்ளார். சாவகச்சேரி, இடைக்குறிச்சி – வரணியைச் சொந்த இடமாகக் கொண்ட குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி கிளிநொச்சியில் அவரது அச்சகத்துக்குச் சென்றுகொண்டிருந்தவேளையில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என...
கடந்த 15ம் திகதி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இலங்கையில் மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்றில் இருந்து (17) எதிர்வரும் 21ம் திகதி வரை காலை இரண்டரை மணித்தியாலங்களும் இரவு ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்தது. எனினும், குறித்த நேரத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய,...
சம்பந்தனை கொலை செய்வதற்கு 25 மில்லியனுக்கு கூலிப்படை!- பொலிஸ்மா அதிபரிடம் வடக்கு முதல்வர் முறைப்பாடு
எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களை கொலை செய்வதற்கு ரூ 25 மில்லியனுக்கு கூலிப்படை அமர்த்தப்பட்டுள்ளதாகவும் இதனை செய்து அதனை புலிகள் மீது குற்றம் சுமத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வடக்கு முதல்வர் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். தனது முறைப்பாட்டின் பிரதியை சனாதிபதிக்கும் அனுப்பிவைத்துள்ளார்...
ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளார்கள். இந்நிலையில் அரசாங்கத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் பதவியை தற்போது பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் வகித்து வருகின்றார். ஜனாதிபதி இந்தியாவின் கோவாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக பெல்ஜியத்திற்கு...
யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரமானது ஒரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது அண்மைக்காலமாக மீளவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் நேற்றுமுன்தினம் இரவு யாழ்.குடாநாட்டி நகரப்பகுதிகளில் மூகமுடி அணித்த கும்பலொன்று வாள்வெட்டுத்தாக்குதலில் ஈடுபட்டிருந்ததையடுத்து யாழ்.நகரில் பதற்றமான சுழல் ஏற்பட்டது. இந்நிலையில் இவ் வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில்...
கோத்தபாயவை காப்பாற்றும் வகையில் எனது உரை அமைந்திருக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பொன்றின் போது ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் உட்பட ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களும் அங்கிருந்துள்ளனர். இதன்போது சமகால நெருக்கடியாக மாறியுள்ள ஜனாதிபதியின் உரை தொடர்பில் அவர்...
வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டு தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக தெளிவுபடுத்த முற்பட்டபோதே கடுமையான வாக்குவாதம் மக்களுக்கும் சுமந்திரனுக்குமிடையில் இடம்பெற்றது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு “முடியும் என்றால் பதிலளிப்போம் அதில் நாம் என்ன சொல்லப்போகின்றோம் என நீங்கள் சொல்லமுடியாது என்றும் சொல்லக்கூடிய கேள்விக்கு பதில்சொல்வோம் என்று சுமந்திரன்...
நாடளாவிய ரீதியில் இன்று முதல் சில மணி நேர மின் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை இரண்டரை மணித்தியாலங்களும், காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரை ஒரு மணித்தியாலமும் மின் வெட்டு அமுல் படுத்தப்படவுளள்தாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதிலும் உள்ள சகல பொலிஸ் பிரிவுகளையும் இன்று மாலை 6 மணி முதல் தயார் நிலையில் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக சிங்கள இணைய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து நாடு முழுவதிலும் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் விடுமுறையில் சென்ற பொலிஸ் அதிகாரிகள்...
பதினாறு மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் தொடர்பில் அக்கறை கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏன் 16 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சிந்திப்பதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சாடியுள்ளார். ஊடகமொன்று சுமந்திரன் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த...
சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீரில் கழிவு ஓயில் மாசாகக் கலந்தமை தொடர்பாக நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதாரப் பணிப்பாளருக்கு பகிரங்கப் பிடியானையை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதுடன் கொழும்பு சிரேஸ்டப் பொலிஸ் அத்தியட்சகரையும் மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளையும் பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு விசாரனையானது நேற்றைய தினம் மல்லாகம் நீதவான்...
யாழ்ப்பாண மாவட்டம் மருதனார் மடப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிதும், தமிழீழ தேசியப்பறவை, தேசிய மரம், போன்ற முக்கிய நிகழ்வுகள் அடங்கிய சுவரொட்டிகளையும் ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் கைதாகிய பெண் தான் களத்தில் முதல் பலியான பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியை நினைவுகூரவே இதனை ஒட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறித்த பெண்...
இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான பொருளாதார மற்றும் ஒத்துழைப்புக்கான (எட்கா) ஒப்பந்தம், இவ்வருட இறுதியில் கைச்சாத்திடப்படுமாயின், இந்திய மீனவர்களுக்கு, வருடத்தில் 85 நாட்கள், இலங்கையின் வடக்குக் கடற்பரப்பில், எவ்வித அனுமதியின்றியும் மீன்பிடிப்பதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்றுத் தெரிவித்த வடமாகாண கடற்றொழிலாளர்கள், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு, கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த...
கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட பலர் அனுராதபுர பிரதேசத்தில் இரகசியமாக இயங்கும் வதைமுகாமொன்றில் இருப்பதாக கையளிக்கப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டோரைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த இரகசிய முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு மோசமான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக குறித்த சங்கத்தின் வடக்குக் கிழக்கு மாகாணத்துக்கான தலைவர் நாகேந்திரன் ஆஷா கொழும்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். காணாமல்போனோரின் உறவினர்கள் மற்றும் காணாமல்...
யாழ்ப்பாண மாவட்டம் வரணியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கிளிநொச்சியில் நேற்று மதியம்(புதன்கிழமை) கடத்தப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் தனது வீட்டில் இருந்து கிளிநொச்சியில் உள்ள தனது பதிப்பகத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கடத்தல் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிக் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதற்கிணங்க காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் கடத்தப்பட்ட வர்த்தகர்...
இலங்கையில் அமுலில் உள்ள சட்டங்களில் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்ற பயங்கரவாதத் தடுப்புக் கட்டளைச் சட்டத்திற்குப் பதிலாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த வரைபிற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிவலாக கொண்டுவரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத...
மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பேரூந்து நிலையத்திற்குள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் தேசிய அடையாளம் என பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஓட்டப்பட்டதால் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரத்தில், பிரபாகரனின் உருவப்படமும் தேசிய அடையாளங்கள் என புலி மற்றும் வாகை மரத்தின் படங்கள் அடங்கியுள்ளதோடு, விடுதலைப்புலிகளின் எழுச்சி நாட்கள்...
அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை தொடர்ந்தும் அவ்வாறே பேணப்படும் என ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார். புதிய அரசியல் யாப்பிலும் பௌத்த மதத்திற்கு தற்போதைய அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை அவ்வாறே பேணுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் முழுமையான இணக்கத்தை தெரிவித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்....
Loading posts...
All posts loaded
No more posts
