வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசம் இல்லை என்று நிரூபிக்க முடியுமா? முதலமைச்சர் சவால்

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றும் அவர்களுக்கு சமஷ்டியை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு-கிழக்கு மக்களை வந்தேறுகுடிகள் என்று கூறுபவர்கள் சரித்திரபூர்வமாக வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயக பூமி இல்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்பார்களானால் வடக்கு, கிழக்கு இணைப்பு கோரிக்கையினை இப்போதே கைவிட்டு விடுகின்றோம் என்றும்...

‘எழுக தமிழ்’ முற்றவெளியில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் வெளிப்படுத்தப்பட்டன

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ எழுச்சி பேரணி வடக்கு கிழக்கில் இருந்து திரண்டு வந்து இருந்த சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்களின் பங்கு பற்றுதலுடன் நிறைவடைந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) காலை 9.00 மணியளவில் நல்லூர் முன்றல் மற்றும் யாழ். பல்கலைக்கழக முன்றல் ஆகிய...
Ad Widget

எழுக தமிழ் பேரணி : நேரடி ஒளிபரப்பு

இன்று காலை ஆரம்பித்துள்ள எழுக தமிழ் பேரணியை எம் புலம்பெயர் சமூகமும், சர்வதேசமும் பார்ப்பதற்காக நேரடி ஒளிபரப்ப மேற்கொள்ளப்படுகின்றது. காணொளிகள் : Tamilkingdom ,Vanavil , Alex

‘எழுக தமிழ்’ பேரணி சென்றடைந்தது முற்றவெளியை

எழுக தமிழ் பேரணியின் ஊர்வலம் நிறைவடைந்த நிலையில் தற்போது முற்றவெளியை சென்றடைந்துள்ளது. இந்த பேரணியில் மக்கள் அலையாக திரண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். மக்கள் தமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். 'எழுக தமிழ்' மாபெரும் பேரணி இன்று காலை...

முதல்வர் தலைமையில் ஆரம்பமானது எழுக தமிழ் பேரணி

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான எழுக தமிழ் பேரணி நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக முன்றலில் மற்றொரு பேரணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது். இவ் பேரணியானது, யாழ் நல்லூர் கோயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ் முதலாம் குருக்கு வீதி, பலாலிவீதி, யாழ் அஸ்பத்திரி வீதியூடாக சென்று யாழ் திறந்த வெளியில்யில் மக்கள் பொதுக்கூட்டம்...

பேரணியைக் குழப்பும் பொருட்டு சில ஊடகங்கள் தவறான செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றன!

தமிழ் மக்கள் பேரவையின் பேரணியைக் குழப்பும் பொருட்டு ஒரு சில ஊடகங்கள் தவறான செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றன என எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளதுடன், பேரணிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சட்டபூர்வமாகச் செய்யப்பட்டிருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்...

‘எழுக தமிழ்’ பேரணியில் அனைவரையும் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள 'எழுக தமிழ்' மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. எந்த வித அரசியல் சார்பும் இன்றி, தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னுரிமைப்படுத்தி நடாத்தப்படும் இந்த பேரணியானது, நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்தும் - யாழ். பல்கலைக்கழக...

புனர்வாழ்விற்கு தகமையுள்ள 23 அரசியற் கைதிகளின் பெயர்கள் வெளியீடு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் புனர்வாழ்வுக்கு உட்படுத்த தகைமை உடையவர்கள் என கருதப்படும் 23 கைதிகளின் பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 96 சந்தேகநபர்களில் 23 பேருக்கு இவ்வாறு புனர்வாழ்வு பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு...

அனைவரும் முற்றவெளி நோக்கி திரண்டு வாருங்கள்!!

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் சனிக்கிழமை (24-09-2016) நடைபெற இருக்கும் எழுக தமிழ் மாபெரும் பேரணி யில் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மற்றும் நிறுவனங்களைப் பூட்டி பேரணிக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது. இவ்வாறு தமிழ் மக்கள் பேரவையினரால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

“எழுக தமிழ்“ முதலமைச்சர் அறைகூவல்

எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள “எழுக தமிழ்“ நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு எமது அபிலாசைகளை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்தியம்புவோம் என அறைகூவல் விடுத்துள்ளார் கௌரவ முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் அவர்கள். அவர் தனது அறிக்கையில் என் அன்பார்ந்த தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே! அரசியல் யாப்பொன்றை எமக்குச் சாதகமாகத் தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கம் அதே நேரத்தில் எமது வடக்கு,...

குடிநீரின்றி அவதியுறும் முகாம் மக்கள்

யாழ். கந்தரோடை பிள்ளையார் மக்களுக்குத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளமையால் இம் முகாமில் வசிக்கும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். யுத்தம் காரணமாக கடந்த 1990ம் ஆண்டு வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் யாழ். கந்தரோடையில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில்...

பாதிக்கப்பட்ட உங்களைப் பார்க்க ஏன் எதிர்க்கட்சித் தலைவர் வரவில்லை?

கிளிநொச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க இதுவரை ஏன் எதிர்க்கட்சித் தலைவர் வரவில்லையென பத்தரமுல்லையைச் சேர்ந்த சீலரத்தின தேரர் கேள்வி கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று கிளிநொச்சி தீவிபத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுக்கு உலர் உணவு வழங்கிவைத்ததன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நான் இனவாதம் பேச வரவில்லை....

தமிழர்தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித்தீர்வை அடைய வரலாற்றில் இன்னொரு சந்தர்ப்பம்

எழுகதமிழால் பேரெழுச்சி கொண்டு தமிழர்தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித்தீர்வை அடைய வரலாற்றில் இன்னொரு சந்தர்பம் தமிழ் மக்களே தவறவிடாதீர்கள் எனவும் இலட்சமாய் முற்றவெளி நோக்கி அணிதிரளுங்கள் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எழுக தமிழ் நிகழ்வு தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதன் முழு வடிவம்..

’பிரபாகரனின் கடிதத்தை இப்போது வெளியிட்டது ஏன்? விளக்குகிறார் வைகோ

விடுதலைப் புலிகள்’ இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை, 28 ஆண்டுகளுக்குப்பிறகு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். செப்டம்பர் 15-ம் தேதி, திருச்சியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில், வைகோ அந்தக் கடிதத்தை வெளியிட்டது ஏன்? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் தொடங்கி வெகுஜன மக்கள் வரை புரியாத புதிராக...

தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்!

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். கைதுசெய்து நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டுமெனவும், பலகாலங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணைகள் யாவும் தமிழர் பிரதேசத்து நீதிமன்றங்களுக்கு மாற்றப்படவேண்டுமெனவும் வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும்...

சிக்குன்குனியா, ஸீகா குறித்து சிவப்பு எச்சரிக்கை!

ஸீகா மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் குறித்து ஸ்ரீலங்காவில் சிவப்பு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய பகுதிகளில் இந்த நோய்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிக்குன்குனியா இந்திய தலைநகர் புதுடில்லியில் வேகமாக பரவிவருவதுடன், ஸீகா வைரஸ் சிங்கப்பூரில் அதிகமாக பரவி வருவதாகவும் தற்போது தாய்லாந்திலும் அதன்...

தலைவர் பிரபாகரனின் வித்துடலை தகனம் செய்தோம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வித்துடலை நாம் எரித்துவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட்டோம். அப்போது நான் அங்கிருந்து நினைவுப்பொருளாக அவரது அடையாள அட்டையினை எடுத்து வைத்திருந்தேன். அதனை என்னுடனேயே வைத்துள்ளேன். இறுதிக்கட்டப் போரில் தாம்தான் விடுதலைப்புலிகளின் தலைவரைக் கொன்றது எனக் கூறிக்கொள்ளும் 53ஆவது பிரிகேட்டிற்குத் தலைமைதாங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஆங்கில ஊடகமொன்றுக்கு மேற்கண்டவாறு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலகவேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 2016ஆம் ஆண்டுக்குள் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்துவிடும் எனச் சொன்னார். 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் அவர் டேவிட் கமரூன் செய்ததைப்போல் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு அதில் அங்கம்...

பூமியை நோக்கி வரும் பேராபத்து! உயிரினங்கள் அழிந்து போகுமா?

பூமிக்கு அருகாமையில் ஆபத்து ஒன்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பூமிக்கு அருகில் இன்று பயணிக்கும் பாரிய விண்கல் ஏதாவதொரு சமயத்தில் பூமி மீது மோதுண்டால், பாரிய அழிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த விண்கல்லின் நீளம் 200 அடி நீளம் கொண்டதென கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறான வாய்ப்புகள் மிகவும் குறைவு என துறைசார்...

யாழ். மாவட்ட செயலக நிர்வாகக் கட்டடம் பிரதமரால் திறந்து வைப்பு

யாழ். மாவட்ட செயலக நிர்வாகக் கட்டடத் தொகுதி இன்று (சனிக்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. புதிய நிர்வாக அலுவலகத்தை திறந்து வைக்கும் முகமாக யாழ். சென்ற பிரதமருக்கு அங்கு பொன்னாடை போர்த்தி தமிழ் கலாச்சார முறைப்படி பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான வாத்தியங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts