வீட்டுப் பாவனை உட்பட சகல நுகர்வோர் பிரிவுகளுக்கும் 5 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குமாறு இலங்கை மின்சார சபை, இலங்கை பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அடுத்த 06 மாத கால திட்டத்தின் படி இலங்கை மின்சார சபையின் மாதாந்த செலவு 850 மில்லியனினால் அதிகரித்துள்ளதாகவும், இதன்படி, எதிர்வரும் 06 மாத காலத்திற்கு 06 பில்லியன் ரூபா வருமானம் ஒன்று அவசியம் எனவும் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை அறிவித்தல் விடுத்துள்ளது.