Ad Widget

யாழ்ப்பாணத்தில் தொடரும் ரவுடிகளின் அட்டகாசம்!!

யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியிலுள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.

bike-auto-fire

யாழ். குடாநாட்டில் ரவுடிக் கும்பல்களின் அட்டகாசம் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், இன்று அதிகாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியின் குறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலையில் வீட்டார் படுத்துறங்கிய நேரம், 3 மோட்டார் சைக்கிள்களில் சென்ற ரவுடிக் கும்பல் ஒன்று பெற்றோல் ஊற்றி வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றை தீயிட்டுக் கொழுத்தியுள்ளதோடு, வீட்டினையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

வாகனங்களை தீ வைத்துக் கொழுத்தியதை அடுத்து எழுந்த தீயை அவதானித்த வீட்டின் உரிமையாளர்கள், அவலக்குரல் எழுப்பியவாறு வீட்டின் வெளியே ஓடிவந்த வேளையில் தாக்குதல்தாரிகள் வாளுடன் கேற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டவாறு தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று இடம்பெற்ற சம்பத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் ரவுடிகளின் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்க முயல்கின்றதா? எனக் கேள்வி எழுப்பப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முறையிடப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

Related Posts