யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிநாள் இன்றாகும். இந்த இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த 29ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பித்த தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப வைபவத்தில் சபாநாயகர் கருஜெயசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அண்மையில், யாழில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியின் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது தென்னிலங்கையிலிருந்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வினை அவர் புறக்கணித்திருந்தார். இருப்பினும் இன்றைய இறுதி நாள் நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.