சரணடைந்த விடுதலைப்புலிகளின் பட்டியலை ஒப்படைக்க இராணுவம் தொடர்ந்தும் மறுப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர் பட்டியல் தொடர்பில் ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்ந்தும் முரண்பட்டத் தகவல்களை வெளியிட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி நீதிமன்றில் எடுத்துரைத்துள்ளார். போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் யுத்த வலயத்தில் வைத்து ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் குடும்பத்தினரால் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல்...

இறுதிப் போரில் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு விசாரணை இன்று

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. இந்த ஆட்கொணர்வு மனு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு...
Ad Widget

கிளிநொச்சியில் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனம்!

ஏ-9 வீதியில் உழவியந்திரத்தை ஓட்டிச்சென்ற இளைஞன் ஒருவருக்கும், இன்னுமொரு வாகனச் சாரதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தினை விலக்குத் தீர்ப்பதற்காக அவிடத்திற்குச் சென்ற காவல்துறையினர் இரும்புச் சங்கிலியால் அந்த இளைஞனை மோசமாகத் தாக்கியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனே தம்மை இரும்புச் சங்கிலியால் தாக்க வந்ததாகவும், அவ்விளைஞன் மதுபோதையில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....

சாட்சியை அச்சுறுத்தும் கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள சுன்னாக பொலிசார்!!!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சாட்சியம் ஒருவரை குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் சந்தேகநபர் ஒருவர் அச்சுறுத்துவதாக மல்லாகம் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் நகர்த்தல் பத்திரம் ஊடாக சட்டத்தரணி, சாட்சியம் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்றார்...

“எழுக தமிழ்” ஒரு வரலாற்றுப் பதிவு! : தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை

கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி எமது வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது. வரலாற்றுப்புகழ் மிக்க நல்லூர் முற்றத்தில், மீண்டும் ஒரு முறை, அதுவும் 2009 இன அழிப்பின் பின் மக்கள் அலைகடல் என இந்நாட்களில் பெரு மக்கள்...

ரணிலின் அனுமதியைக் கேட்டு தியாகி திலீபனுக்கு நினைவஞ்சலி!

தனது இனத்தின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் 12 நாட்கள் நீராகாரம் எதுவுமின்றி உண்ணாநோன்பிருந்து சாவைத்தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் ஜனநாயகப்போராளிக் கட்சி உறுப்பினர்களும் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அனுமதிகேட்டு அஞ்சலி செலுத்தியமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொலைபேசிமூலம் பிரதமர்...

தமிழர்கள் அனைவரையும் தமிழ்நாட்டிற்கே விரட்டியடிப்போம்

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு கடத்துவதாக பொதுபல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாங்கள் விக்னேஸ்வரனுக்கு ஒன்று சொல்ல வேண்டும் சிங்களவர்களிடம் சண்டித்தனம் காட்ட வர வேண்டாம். சிங்களவர்களின் நிலத்தில் வசித்துக்கொண்டு இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று. எனக்கு...

இந்து ஆலயம் தீயிட்டு எரிப்பு; படையினர் குவிப்பு!! மக்கள் அச்சத்தில்!!

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் கல்லடி கிராமத்திலுள்ள மலைநீதியம்மன் ஆலயத்தின் மடப்பள்ளி, அங்குள்ள பௌத்த துறவியொருவரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 10.30 மணியளவில் ஆளரவம் இல்லாத நேரத்தில் ஆலயத்தின் பின்னால் மறைந்து வந்த காவியுடை தரித்த பௌத்த துறவி, கோயிலின் மடப்பள்ளிக்குத் தீவைத்து விட்டு அருகிலுள்ள ரஜமகா விகாரைக்குள் சென்று...

வடக்கு முதல்வரை கைதுசெய்ய வேண்டுமாம்!: கம்மன்பில கூறும் காரணங்கள்

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து, பிணையில் வௌிவரமுடியாத படி, விளக்கமறியலில் வைக்கும் வரை தான் காத்திருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ´எழுக தமிழ்´ நிகழ்வுக்கு முதல்வர் உத்தியோகபூர்வமாக மக்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவர் கூறியுள்ளார். மேலும், இந்தப் போராட்டத்திற்கு அரச சொத்துக்களை பயன்படுத்தியதாகவும்...

இராணுவ வீரர்கள் 05 பேருக்கு விளக்கமறியல்; 11 பேரை கைது செய்ய உத்தரவு

1998 ஆம் ஆண்டு 2 இளைஞர்கள் காணாமல் போன சம்பவத்தில் 05 இராணுவ வீர்ர்களை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார். 1998 ஆம் ஆண்டு அச்சுவேலிப் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்த 16 இராணுவத்தினர் சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட...

தியாகி திலீபன் நினைவஞ்சலியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா

தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாளின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தியாகதீபம் திலீபனின் அஞ்சலி வணக்க நிகழ்வுகள் யாழ்ப்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வந்தநிலையில் இறுதிநாள் நிகழ்வு இன்றைய தினம் யாழப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது...

எழுக தமிழ் கூட்டமைப்புக்கு எதிரானது!! கூட்டமைப்புக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!! சுமந்திரன்

சனிக்கிழமை நடைபெற்ற எழுக தமிழ் கூட்டமைப்புக்கு எதிரானது எனவும், அதற்கும் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும், அதில் தாம் கலந்துகொள்ளவில்லையெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் நாட்டின் நல்லிணக்கத்திற்குப் பாதகம் விளைவிக்கும் எனவும் குற்றம் சுமத்தினார். நாட்டில் தற்போது புதிய...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எழுகதமிழ் பிரகடனம்

'எழுக தமிழ் 2016!' -- தமிழ் மக்களின் பேரவையின் ஏற்பாட்டில், பொது மக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்படும் ஒரு தமிழ் தேசிய அரசியல் நிகழ்வாகும். சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ் தேசமானது - தனது அடிப்படையான அரசியல் உரிமைகளில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள...

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசம் இல்லை என்று நிரூபிக்க முடியுமா? முதலமைச்சர் சவால்

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றும் அவர்களுக்கு சமஷ்டியை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு-கிழக்கு மக்களை வந்தேறுகுடிகள் என்று கூறுபவர்கள் சரித்திரபூர்வமாக வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயக பூமி இல்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்பார்களானால் வடக்கு, கிழக்கு இணைப்பு கோரிக்கையினை இப்போதே கைவிட்டு விடுகின்றோம் என்றும்...

‘எழுக தமிழ்’ முற்றவெளியில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் வெளிப்படுத்தப்பட்டன

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ எழுச்சி பேரணி வடக்கு கிழக்கில் இருந்து திரண்டு வந்து இருந்த சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்களின் பங்கு பற்றுதலுடன் நிறைவடைந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) காலை 9.00 மணியளவில் நல்லூர் முன்றல் மற்றும் யாழ். பல்கலைக்கழக முன்றல் ஆகிய...

எழுக தமிழ் பேரணி : நேரடி ஒளிபரப்பு

இன்று காலை ஆரம்பித்துள்ள எழுக தமிழ் பேரணியை எம் புலம்பெயர் சமூகமும், சர்வதேசமும் பார்ப்பதற்காக நேரடி ஒளிபரப்ப மேற்கொள்ளப்படுகின்றது. காணொளிகள் : Tamilkingdom ,Vanavil , Alex

‘எழுக தமிழ்’ பேரணி சென்றடைந்தது முற்றவெளியை

எழுக தமிழ் பேரணியின் ஊர்வலம் நிறைவடைந்த நிலையில் தற்போது முற்றவெளியை சென்றடைந்துள்ளது. இந்த பேரணியில் மக்கள் அலையாக திரண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். மக்கள் தமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். 'எழுக தமிழ்' மாபெரும் பேரணி இன்று காலை...

முதல்வர் தலைமையில் ஆரம்பமானது எழுக தமிழ் பேரணி

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான எழுக தமிழ் பேரணி நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக முன்றலில் மற்றொரு பேரணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது். இவ் பேரணியானது, யாழ் நல்லூர் கோயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ் முதலாம் குருக்கு வீதி, பலாலிவீதி, யாழ் அஸ்பத்திரி வீதியூடாக சென்று யாழ் திறந்த வெளியில்யில் மக்கள் பொதுக்கூட்டம்...

பேரணியைக் குழப்பும் பொருட்டு சில ஊடகங்கள் தவறான செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றன!

தமிழ் மக்கள் பேரவையின் பேரணியைக் குழப்பும் பொருட்டு ஒரு சில ஊடகங்கள் தவறான செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றன என எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளதுடன், பேரணிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சட்டபூர்வமாகச் செய்யப்பட்டிருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்...

‘எழுக தமிழ்’ பேரணியில் அனைவரையும் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள 'எழுக தமிழ்' மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. எந்த வித அரசியல் சார்பும் இன்றி, தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னுரிமைப்படுத்தி நடாத்தப்படும் இந்த பேரணியானது, நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்தும் - யாழ். பல்கலைக்கழக...
Loading posts...

All posts loaded

No more posts