- Tuesday
- August 12th, 2025

உடுவில் மகளீர் கல்லுாரி தொடர்பாக பெற்றோர் சங்கம் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையின் முழு வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது. உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபர் நியமனம் தொடர்பாகவும், அதன் போது நடைபெற்றுள்ள நேர்மையற்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் என்ற வகையிலும், பாதிக்கப்பட்ட ஒரு தரப்பு என்ற வகையிலும், கல்லூரிச் சமூகத்தின்...

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடத்தப்படவுள்ள எழுக தமிழ் எனும் தொனிப்பொருளிலான மக்கள் பேரணி பாரிய எழுச்சியுடன் அமைய வேண்டும் என தெரிவித்துள்ள த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இதில் அனைத்து தமிழ் மக்களும் பங்கேற்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே...

அண்மையில் யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் அநீதிக்கெதிராக போராடியபோது படித்தவர்கள், பாமரர்கள் என்ன செய்தார்கள்? என யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரு அநீதியினைத் தட்டிக் கேட்பதற்கு அந்த மாணவிகள் ஓடிச் சென்ற இடங்களைப் பார்க்கின்றபோது எனக்கு வெட்கமாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா நேற்றைய...

கிளிநொச்சி பொதுச் சந்தையில்,வெள்ளிக்கிழமை 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளன. தீயை கட்டுப்படுத்த முயன்றவர்களில் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது நேற்றிரவு , 8.30 க்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து...

‘தியாகி திலீபனின் அஹிம்சை வழிப் போராட்டத்தினை முன்மாதிரியாகக் கொண்டு அஹிம்சை வழியில் போராடி தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்போம்’ என முன்னாள் போராளிகள் சபதம் எடுத்துள்ளனர். தியாகி திலீபன் அஹிம்சை வழிப் போராட்டத்தின் 29வது நினைவு நாளான இன்று (வியாழக்கிழமை) யாழ்.நல்லூர் வடக்கு வீதியில் அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நல்லூர் வீதியில் உள்ள...

அடுத்த மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தரும் போது வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 800 ஏக்கர் காணிகளிலும் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான முன்னாயத்தங்கள் அரச அதிகாரிகளினாலும், இராணுவத் தரப்பினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இனங்காணப்பட்ட பகுதிகளில் உள்ள உயர்பாதுகாப்பு வலய...

தமிழர் தாயகத்தில் சிங்கள – பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழ் தேசியத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் யுத்தக் குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான மாபெரும் பேரணி ! செப்ரெம்பர் 24, 2016 (சனிக்கிழமை) அன்று யாழ் நகரில் !! வடக்கு...

கிளிநொச்சி பளை, புதுக்காடு சந்திக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புநோக்கி பயணித்த தனியார் பேரூந்துடன், வவுனியாவில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த வான் ஒன்று மோதியுள்ளது. வவுனியாவில் இடம்பெற்ற மரண வீடொன்றில் பங்கேற்றுவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இன்று...

மானிப்பாய் - சங்குவேலி பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சங்குவேலி - சிவஞானப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமாரன் பிரணவன் (வயது 31) என்பவர் கடந்த மாதம் 17ம் திகதி, வெட்டிக் கொலை செய்யப்பட்டார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச குற்றப் புலனாய்வு...

கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் வான் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டதில் நான்கு பேர் உயிரிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக்கொள்பவர்களின் வயதெல்லையை 40 ஆக உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வயதெல்லை தற்போது 35 ஆக காணப்படுகின்ற நிலையில், வேலையற்ற பட்டதாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். யாழ் நகரிலுள்ள...

வன்னியிலுள்ள படை முகாம்கள் அகற்றப்பட்டால் அங்குள்ள மனிதப் புதைகுழிகள் வெளிவரும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியின் முக்கியஸ்தரான நாடாளுமுன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அச்சம் வெளியிட்டுள்ளார். அவ்வாறான நிலை ஏற்பட்டால் சிறிலங்கா இராணுவம் மீது போர் குற்றங்கள் சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர் இந்த நிலைமையைத்...

'இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, இலங்கை மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தக்கூடிய சாத்தியம் இருந்தது. இது தொடர்பில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் சீனாவின் இராணுவத் தளபதியும் எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்று, இறுதி யுத்தத்தின் போது, புலிகள் இயக்கத்துடன் போரிட்ட 53ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். 35...

யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற வழக்கினை நிறைவு செய்து வெளியில் வந்த மூன்று இளைஞர்களை, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் வெள்ளை வானில் ஏற்றிச்சென்றுள்ளதால் பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற கலவரத்தின் போது, யாழ்.நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறித்த வழக்கு, இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.நீதிமன்றில் நடைபெற்றது. குறித்த...

யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் பகிடி வதைக் கொடுமையினால் தனது பல்கலைக் கழக கல்வியினை இடை நிறுத்தி தினக் கூலிவேலைக்காக மாணவன் செல்லும் அவலம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பகுதியினைச் சேர்ந்த மாணவன் இந்த ஆண்டு முதலாம் ஆண்டில் ஆண்டில் இணைந்து கொண்டார் . இணைந்த நாட்கள் முதல் ஒரே பகிடிவதைக் கொடுமையால் பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணத்தினால்...

இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம், மேற்கொள்ளும் மெதுவான நடைமுறைகள் மற்றும் வெளிப்படைத் தன்மையில்லாமை என்பன குறித்து, மனித உரிமை காப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக, சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 33வது அமர்வில் சர்வதேச மன்னிப்பு சபை எழுத்துமூல அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்கூறப்பட்ட விடயங்கள் கூறப்பட்டுள்ளது....

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் விடயம் குறித்து ஆராய, குழுவொன்றை நியமிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழக்கறிஞர்கள் அமையத்தினால் (Tamil Lawyers’ Forum) இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் மற்றும் வைத்தியர்கள் அடங்களாக இந்த குழுவை நியமிக்குமாறு, அவர்கள் கோரியுள்ளனர். சில...

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மேலும் 700 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் இணங்கியுள்ளதாக யாழ்.அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை, கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் ஆகிய பிரதேசங்களில் காணப்படும் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சுமார் 26 வருடங்களுக்கு மேல் இராணுவத்தினரின் பிடியில் காணப்படும் வலி வடக்கின்...

வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் இந்த வாரமும் மேற்கொள்ளப்படவுள்ளன. வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட வைத்தியசாலைகளிலும் கடந்த 2 ஆம் மாற்று 9 ஆம் திகதிகளில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 16 ஆம் திகதி மீண்டும் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை இடம்பெறவுள்ளதாக...

யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற போதைப் பொருள் கடத்தல் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் அடாவடித்தனமான குற்றச் செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார். போதைப் பொருளை ஒழித்தல், யாழ் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு விழா, யாழ் புதிய பொலிஸ் நிலையக் கட்டிடத்...

All posts loaded
No more posts