அனுராதபுரத்தில் இரகசிய வதைமுகாம்

கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட பலர் அனுராதபுர பிரதேசத்தில் இரகசியமாக இயங்கும் வதைமுகாமொன்றில் இருப்பதாக கையளிக்கப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டோரைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த இரகசிய முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு மோசமான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக குறித்த சங்கத்தின் வடக்குக் கிழக்கு மாகாணத்துக்கான தலைவர் நாகேந்திரன் ஆஷா கொழும்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். காணாமல்போனோரின் உறவினர்கள் மற்றும் காணாமல்...

கிளிநொச்சியில் வர்த்தகர் கடத்தல்!

யாழ்ப்பாண மாவட்டம் வரணியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கிளிநொச்சியில் நேற்று மதியம்(புதன்கிழமை) கடத்தப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் தனது வீட்டில் இருந்து கிளிநொச்சியில் உள்ள தனது பதிப்பகத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கடத்தல் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிக் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதற்கிணங்க காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் கடத்தப்பட்ட வர்த்தகர்...
Ad Widget

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலான புதிய சட்ட வரைபிற்கு அமைச்சரவை அனுமதி

இலங்கையில் அமுலில் உள்ள சட்டங்களில் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்ற பயங்கரவாதத் தடுப்புக் கட்டளைச் சட்டத்திற்குப் பதிலாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த வரைபிற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிவலாக கொண்டுவரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத...

விடுதலைப்புலிகளின் எழுச்சி நாட்கள் குறித்த துண்டுப்பிரசுரம்!! யாழில் பரபரப்பு!!

மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பேரூந்து நிலையத்திற்குள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் தேசிய அடையாளம் என பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஓட்டப்பட்டதால் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரத்தில், பிரபாகரனின் உருவப்படமும் தேசிய அடையாளங்கள் என புலி மற்றும் வாகை மரத்தின் படங்கள் அடங்கியுள்ளதோடு, விடுதலைப்புலிகளின் எழுச்சி நாட்கள்...

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை, தமிழ் கூட்டமைப்பும் இணக்கம்

அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை தொடர்ந்தும் அவ்வாறே பேணப்படும் என ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார். புதிய அரசியல் யாப்பிலும் பௌத்த மதத்திற்கு தற்போதைய அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை அவ்வாறே பேணுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் முழுமையான இணக்கத்தை தெரிவித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்....

நல்லூர் பிரதேச சபை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகவியலாளர் பலவந்தமாக வெளியேற்றம்!

நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பொதுமக்கள் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் மாவை சேனாதிராஜாவை சமரரியாக கேள்வி கேட்கத்தொடங்கினர். ஆரம்பம் முதல் செய்தியாளர் கைத்தொலைபேசியில்...

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல்: மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு ஐ.ஜி.பிக்கு கடிதம்

வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டமையால், தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு மேலதிகமான பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே சிவஞானமே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்து, பொலிஸ்மா அதிபர் (ஐ.ஜி.பி) பூஜித் ஜயசுந்தரவுக்கு, கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே சிவஞானம்...

கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் வெடிப்பது நிச்சயம்: சுரேஷ்

தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வுத்திட்டம் ஏற்படுத்தப்படாவிடின் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் தோற்றம் பெறுவது நிச்சயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பின் தலைமை...

வடமாகாண பாதுகாப்பு உச்ச அளவில் உள்ளது; பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

வடமாகாணத்தின் பாதுகாப்பு உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அதற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்பதாகவும் குறிப்பிட்ட அவர், வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் உரியவர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுவரும் நிலையில் அவற்றில் சிறிதளவேனும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கோ அல்லது இனவாதிகளுக்கோ வழங்கப்படாது என்றும் தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பு இராஜாங்க...

சுவிஸர்லாந்து கிறிஸ்டா மார்க் வெல்டருக்கும், இரா. சம்பந்தனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சுவிஸர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க் வெல்டருக்கும் – ஸ்ரீலங்காவின் எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சுவிஸர்லாந்தில் அரசியல் தஞசம் கோரி நிராகரிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்த சுவிஸர்லாந்து அரசு தீர்மானித்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு...

யாழில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் மறுப்பு

யாழ்ப்பாணம் பிரம்படி 2 ஆம் ஒழுங்கைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (06) அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் கூறினர். எனினும் துப்பாக்கிச் சூடு சம்பவம் எதுவும் இடம்பெறவில்லையென யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்தார். மேற்படி பகுதியில் புதன்கிழமை (05) மாலை நபர் ஒருவரை பொலிஸார் துரத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில்...

வடக்கில் சிங்களவர்களை அச்சுறுத்தினால் தெற்கில் தமிழர்களுக்கும் அதேநிலை!!

வடக்கில் சிங்கள மக்களுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அச்சுறுத்தல் விடுத்தால் தெற்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பிலும் தாங்களும் அதே பாணியில் செல்ல நேரிடும் என்று மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய எச்சரிக்கை செய்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற...

யாழ்ப்பாணத்தில் தொடரும் ரவுடிகளின் அட்டகாசம்!!

யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியிலுள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். யாழ். குடாநாட்டில் ரவுடிக் கும்பல்களின் அட்டகாசம் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், இன்று அதிகாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியின் குறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலையில்...

அகதிகளை நாடுகடத்துவது குறித்து சுவிஸ் இலங்கையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து!

அகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக சுவிட்சர்லாந்து சிறீலங்காவுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இருதரப்பு உடன்பாடு ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனேட்டா சொம்மாறுகாவுக்கும், சிறிலங்காவின் உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுக்கும் இடையில் இந்த உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டது. நாடு கடத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான உடன்பாட்டிலேயே கையெழுத்திடப்பட்டுள்ளது. அத்துடன் தாயகம் திருப்பி அனுப்பப்படும் இலங்கை அகதிகள்...

சமஸ்டிக் கோரிக்கையும், எழுக தமிழும் எதற்காக? முதலமைச்சரின் விரிவான விளக்கம்

யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடத்துவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ‘சண்டே ஒப்சேவர்’ ஊடகம் மேற்கொண்ட நேர்காணல்- கேள்வி: வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ்மக்களால் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு சமஸ்டி மட்டுமே சாத்தியமான ஒரேயொரு தீர்வு என தாங்கள் நம்புவதற்கான காரணம் என்ன? பதில்:...

மின் கட்டணங்கள் அனைத்தும் 5 வீத அதிகரிப்பு?

வீட்டுப் பாவனை உட்பட சகல நுகர்வோர் பிரிவுகளுக்கும் 5 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குமாறு இலங்கை மின்சார சபை, இலங்கை பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த 06 மாத கால திட்டத்தின் படி இலங்கை மின்சார சபையின் மாதாந்த செலவு 850 மில்லியனினால் அதிகரித்துள்ளதாகவும், இதன்படி, எதிர்வரும் 06...

விக்னேஸ்வரனை கொலை செய்யும் சதி முயற்சி பாரதூரமானது- மாவை

தம்மை கொலை செய்வதற்கு சதி செய்யப்படுவதாக வட மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை பாரதூரமான விடயம் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் முறையிட்டு அது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு...

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இராணுவ பாதுகாப்பு!

அரசியல் தலைமைகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்படக் கூடாது என்ற கட்டாயம் உள்ளது. எனினும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாயின் அவருக்கான சிவில் பாதுகாப்பில் திருப்தி இல்லையெனின் இராணுவ பாதுகாப்பை வழங்க தயார் என பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அரசியல் நகர்வுகளுக்காக பாதுகாப்பு விடயங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. வடமாகாண முதல்வர்...

முதலமைச்சர் சி.வி இனவாதியல்ல!! அரசியல்வாதி: மஹிந்த கூறுகிறார்!

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரை தாம் ஒரு அரசியல்வாதியாவே பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையின் அமைந்துள்ள ஒன்றிணைந்த எதிரணியின் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கான தீர்வு, வேலைவாய்ப்பு, வீதிகள் அபிவிருத்தியின்மை, விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்கப்படாமை...

ஒரே நாட்டிற்குள் சமத்துவமாக வாழக்கூடிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளைாயட்டு விழா நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பாரிய மாற்றத்தை, இந்த ஆட்சியை நடத்துகின்றவர்களின் சிந்தனையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று யாழப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு...
Loading posts...

All posts loaded

No more posts